Tag: Meenatchi

  • Madurai meenatchi pattabishegam

    சிதம்பரத்தை ஆள்பவர் நடராஜர்; மதுரையை ஆள்பவள் மீனாட்சி… மதுரை நகரத்துக்கு அவள்தான் அதிகாரி. அங்கு அவளுடைய அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு எட்டு கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் அம்பிகை ஒவ்வொரு கோலத்தில் திருக்காட்சி தருகிறாள். திருவனந்தல் பூஜை தொடங்கி அர்த்த ஜாம பூஜை வரை எட்டு காலங்களில் முறையே மஹா ஷோடசி, பாலை, புவனை, கௌரி, சியாமளை, பஞ்சதசி, மாதங்கி, ஷோடசி ஆகிய எட்டு திருக்கோலங்களில் காட்சிதருகிறாள். எட்டு திருக்கோலங்களில் காட்சிதரும் அன்னை மீனாட்சி, மதுரையின் பேரரசி என்பதால், அன்னைக்கு நடக்கும் அபிஷேகத்தை யாரும் தரிசிக்க முடியாது. அபிஷேக அலங்காரங்கள் முடிந்து திரை விலகிய பிறகுதான் அன்னையை தரிசிக்க முடியும்.

    சியாமளாதேவியின் பக்தையாக இருந்த வித்யாவதி என்னும் கந்தர்வப் பெண்தான், அடுத்த பிறவியில் காஞ்சனமாலையாகப் பிறந்து மலையத்துவஜ பாண்டியரின் அரசியானார். அவர்களின் பூர்வ ஜன்ம புண்ணியத்தின் பலனாக, அன்னை சக்தியே அவர்களுக்கு மகளாகத் தோன்றி அருள் செய்தார். பாண்டியன் மகளாக அவதரித்த மீனாட்சி அம்மன், ஆண்மகனைப் போன்று போர்க்கலை உள்ளிட்ட சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.  

    மதுரையின் இளவரசியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மீனாட்சி, தன்னுடைய வீரத்தையும் போர்த்திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, அனைத்துப் பகுதிகளுக்கும் திக்விஜயம் செய்தார். எதிர்ப்பவர் யாருமில்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிக்கொடியும் நாட்டினார். இறுதியில் கயிலைக்கும் சென்றார். ஈசனைக் கண்டார். அவரைக் கண்ட மாத்திரத்தில் மீனாட்சிக்குள் இருந்த வீரம் மறைந்து, ஐயனிடம் அன்பு மேலிட்டது. பெண்மை மிளிர்ந்தது. அவரையே திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினார். திருமணமும் நடைபெற்றது. புராணக் காலத்தில் நிகழ்ந்த அந்த தெய்வத் திருமண வைபவத்தை நினைவுகூரும் வகையில், மதுரையில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

    மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள், திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை, மதுரையின் அரசியாக முடிசூட்டி பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். சித்திரைத் திருவிழாவின் 8-வது நாளான நாளை காலையில் விசேஷ அபிஷேகம், பூஜைகள் முடிந்த பிறகு, பட்டாபிஷேகம் நடைபெறும் பந்தலுக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளுவார். அன்னைக்கு முடி சூட்டுவதற்காக 'ராயர் கிரீடம்' எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்படும். உடன் செங்கோலும் கொண்டு வரப்படும். 

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். பட்டாபிஷேக வைபவம் நிறைவு பெற்ற பிறகு, நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்.
     

  • April 12 madurai meenatchi pattabishegam

    ஏப்ரல் 12 – மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
    பிலவ வருடம் – பங்குனி 29
    மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
    12-ஏப்-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    ந.இ    3.29
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    கா    6.51
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Madurai meenatchi thirukalyanam

    மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண நிகழ்விற்கான கட்டண அனுமதி சீட்டினைப் பெற, நேரடியாகவும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்….
    மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வினை காண வரும் பக்தர்கள், 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க ரூ.500/- கட்டணச் சீட்டு, 2500 பேருக்கும் மற்றும் ரூ.200/- கட்டணச் சீட்டு 3200 பேருக்கும் வழங்கப்படவுள்ளது. பக்தர்கள் WWW.maduraimeenakshi.Org என்ற இணையதளத்திலும், மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கு விடுதியின் அலுவலகத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

    முன்பதிவு செய்பவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ரேசன்கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் மற்றும் செல்போன் எண், மெயில் ஐடிகளை சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட இடத்தை விட அதிகளவிற்கு முன்பதிவு செய்தால், கணினி முறை குலுக்கல் நடத்தி, பின்னர் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண உற்சவத்தன்று இலவச தரிசனத்திற்கு வருகை தரக்கூடியவர்களில் முதலில் வருகை தரக்கூடியவர்களுக்கு தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    முன்பதிவிற்கான விண்ணப்ப படிவம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், 500 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு ஒரு நபருக்கு இரு அனுமதி சீட்டும், 200 ரூபாய் கட்டணத்திற்கு ஒரு நபருக்கு 3 அனுமதி சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து, தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 13-ம் தேதி கட்டண அனுமதி சீட்டுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • April 22 Madurai meenatchi pattabishegam

    ஏப்ரல் 22 மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
    பிலவ வருடம் – சித்திரை  9
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
    22-ஏப்-2021 வியாழன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    7.06
    நட்சத்திரம்    :    மகம்    ந.இ    3.40
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Madurai Meenatchi Amman Koil Laddu Prasadam

    மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் தினந்தோறும் லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில்.  ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு,  உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

    அவ்வாறு மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும், தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும், என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  அண்மையில் தூய்மைக்கான இந்திய அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Madurai pogamal Meenatchi Dharisanam

    நாகை மாவட்டத்தில் திருவெண்காட்டீஸ்வரர் ஆலயத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இங்கே சென்னைக்கு அருகில் திருவெண்காடுறை ஈஸ்வரர் இருக்கிறார்? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    மீனாட்சி அம்மனை மதுரை போகாமலேயே தரிசிக்கலாம். எங்கே என்று தெரியுமா? பாதாள சுரங்கம் உள்ள கோயில் எங்குள்ளது என்று தெரியுமா? இந்த கேள்விகளுக்கான பதில், சென்னைக்கு மிக அருகே உள்ள மதுராந்தகம் தான்.

    அந்த காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது இந்த ஊர் அதாவது நான்கு வேதங்களும் சம காலத்தில் ஓதப்பட்ட இடம் மதுராந்தகம்.  இங்கு ரயிலடிக்கு அருகே அமைந்துள்ளது திருவெண்காட்டீஸ்வரர் ஆலயம். ஐந்து நிலைகளைக் கொண்ட இந்த ஆலயம், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

    வெண்கொக்கு மந்தாரைகள் நிறைந்த காட்டில் இருந்ததால் வெண்காட்டீஸ்வரன் என்று இந்த ஈஸ்வரனுக்குப் பெயர் மதுராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதும், பராந்தக சோழன் ஆட்சிக்குட்பட்டும் பாண்டியன் ஆட்சிக்காலத்தில் பராமரிக்கப்பட்டதுமானது இக்கோயில்.

    வெண்காட்டீஸ்வர், இங்கு மீனாட்சி சமேதராக காட்சி தருகிறார். இங்குள்ள அம்மன், 6 அடி உயரம் கொண்டது. திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி,மதுராந்தகம் மீனாட்சி அம்மன், அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் மட்டுமே 6 அடி உயரத்தில் காட்சிதருகிறார்கள்.

    திருவெண்காட்டீஸ்வரர் உளி படாத திருமேனி கொண்டவர். தெற்கு பார்த்த வாக்கில் அம்மன்..இடதுபுறம் சூரியனின் அழகிய சிலை வடிவம். சிலையின் நகக்கண் கூட தெளிவாக தெரியும் வகையிலான அற்புத வடிவம் கொண்ட சூரியன், சூரியனார் கோயிலில் உள்ளதைப்போல உரு கொண்டவர்.

    சன்னதியின் ஒரத்தில் யாரும் கவனிக்காத வகையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு, இங்கு பாதாள சுரங்கமோ அல்லது நகைகள் வைக்கக்கூடிய அறையோ கர்ப்பகிரகத்திற்கு கீழே இருப்பதாக காட்டுகிறது. ஆனால், இதுவரை யாரும் இதனை ஆராய்ந்தது இல்லை. 

    சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் சுந்தரர், அப்பர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் காட்சியளிக்கின்றனர். மேலும் நான்கு பைரவர்கள் உள்ள கோயில்களில் மதுராந்தகம் கோயிலும் ஒன்று. 

    தோஷங்கள் நிவர்த்திசெய்யும் திருக்கோயில் என்பதால், திருமண தோஷம் முதல், பல்வேறு தோஷ நிவர்த்திக்கு இங்கு பக்தர்கள் வருவது வழக்கம். கடைசியாக 80 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்ததாக செவி வழி செய்தி இருந்ததையடுத்து ஊர் மக்களாக கூடி கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர். 

    பிரதோஷம் முதற்கொண்டு அனைத்து பூஜைகளும் விமரிசையாக நடக்கும் இந்த கோயிலில் வழிபட்டால், நாகை திருவெண்காட்டீஸ்வரரை தரிசித்தற்கான பலன்களை பெறலாம். 

    அதனால்தான், மண்ணிலே சிறந்த ஊர்..மாலவன் நடந்த ஊர்..மறைகள் நான்கும் வலம் வந்த ஊர்..மனதிற்கு இனிய ஊர் மதுராந்தகம் என்கிறார்கள். 
    ஓம் நமசிவாய!
    – பாமா

  • Madurai Meenatch thiru Kalyanam

    உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா ஏப்ரல் 8 ஆம் தேதி  காலை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.

    கொடி மரத்தில் தர்ப்பைபுல் வைத்து வெண்பட்டுவால் சுற்றி பிரமாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது, மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

    இதனை  தொடர்ந்தது விழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நிகழ்வும், திக்குவிஜயமும், சிறப்பாக நடைபெற்றது.  அதனை தொடர்ந்து இன்று காலை  புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

    மேற்கு ஆடி வீதி -வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைக்கப் பட்டுள்ள அலங்கார பந்தலில் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கல்யாண மேடை பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 

    திருக்கல்யாண வைபவத்தை பல்லாயிரகணக்கான மக்கள் அமர்ந்து கண்டு களித்தனர்.  இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது.  இதற்காக  அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார். 19 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

  • Meenatchi amman koil masi thiruvizha

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. 

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்போது மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் ரிஷப உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது அருள்மிகு மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினார்.
     
    கொடியேற்றத்தை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி, அம்மன் கோயில் 2ம் பிரகாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.