Tag: Maha Periyavar

  • Maha Periyavar Arul Mozhigal

    ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்…

    கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள் . 

    கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.

    பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். 

    போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.

    மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும் . அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.

    சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும் , வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.

    பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதை காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  • Kanchi Maha Periyavar Jayanthi Vizha

    சென்னையை அடுத்த பம்மலில் இருக்கும சிவா விஷ்ணு அலையத்தில் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்த்திரசேகரேந்திர ஸ்ரஸ்வதி சுவாமிகள் 126வது ஜெயந்தி மாஹோத்ஸவம் நடைபெற்றது. 

    காலை 6 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கிய மகா பெரியவரின் ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், நவகிரஹ, ஆயுஷ்ய, கலஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு ஸ்ரீ மகாபெரிவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டது, 

    அதனையடுத்து கோவிலில் உள்ள விநாயகர், வள்ளி தேவானையுடன் கூடிய சுப்பிரமணியர், ஐய்யப்பன், தட்ணாமூர்த்தி, விஷ்ணு துர்கை,கோதண்டராமர், அஞ்னேயர் உள்ளிட்ட நவகிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.

    சுற்றுவட்டத்தில் இருந்து  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர், மதியம் அன்னதாமனம் வழங்கப்பட்டது.