Tag: Koil

  • Thiruthani murugan koil Thiruppadi Thiruvizha

    புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில், நாளை காலை 8 மணி முதல் திருப்படி திருப்புகழ் திருவிழா தொடங்கி, மறுநாளான ஜனவரி 1 ஆம் தேதி தேதி காலை வரை தொடா்ந்து திருப்புகழ்பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒரு வருடத்தை குறிக்கும் விதமாக திருத்தணி முருகபெருமான் கோயிலில் 365 திருப்படிகள் உள்ளன. ஆங்கில புத்தாண்டு தொடங்கும் நாளுக்கு முதல் நாள் இங்கு படிப்பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி திருத்தணி முருகன் மலைக்கோயிலில் நடப்பாண்டுக்கான திருப்படித் திருவிழா நாளை காலை 8 மணிக்கு சரவணப்பொய்கை அருகே திருப்படி பூஜையுடன் தொடங்குகிறது. அப்போது பஜனை குழுவினரை வரவேற்று பக்தி பாடல் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.

    தொடா்ந்து, நூற்றுக்கணக்கான பஜனை குழுவினா், மறுநாள் ஜனவரி 1-ஆம் தேதி காலை வரை தொடா்ந்து பக்தி பாடல்களைப் பாடியவாறு மலைக் கோயிலுக்குச் சென்று வழிபடுவா். மேலும், 31-ஆம் தேதி நண்பகல் 11 மணிக்கு உற்சவா் வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதியில் திருவீதியுலா வருகிறார்.

    ஜன.1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும், இரவு 8 மணிக்கு உற்சவா் வெள்ளி நாக வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். 

  • Ponniamman koil kumbabishegam

    சென்னை திருவொற்றியூரில் பொன்னியம்மன் நகரில் உள்ள காட்டு பொன்னியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக 21 யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் ஹோம பூஜை செய்தனர் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து ஹோமம் நாடி சந்தனம் தம்பதி பூஜை கோமாதா பூஜை பூஜைகள் நிறைவுபெற்று. 

    புனிதநீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டது மூன்று நாட்கள்  தொடர்ந்து நடைபெறும் யாகசாலை பூஜைகள் இன்று அதிகாலை மீண்டும் தொடங்கப்பட்டு பூர்ணாஹுதி நிறைவுபெற்று  சிவாச்சாரியர்கள்  கலச நீரை தலையில் சுமந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

    இதனை அடுத்து புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை அடுத்து  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஓம்சக்தி கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். 

  • Kanchi Kamatchi amman koil pal kudam

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை ஒட்டி பால்குட விழா.

    உலகப் பிரசித்தி பெற்ற சக்தி பீடத்தின் முக்கிய ஸ்தலமான காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் ஐப்பசி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் காமாட்சி அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்ததாக ஐதீகம் அதனை ஒட்டி இன்று காஞ்சிபுரம் சங்கரமடம் காமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 700-க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பால்குடம் ஏந்தி சங்கர மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்கள் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்குபெற்றனர்

  • Madurai Meenatchi Amman Koil Laddu Prasadam

    மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் தினந்தோறும் லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில்.  ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு,  உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

    அவ்வாறு மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும், தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும், என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  அண்மையில் தூய்மைக்கான இந்திய அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Mariamman koil Car festival

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னகிருஷ்ணாபுரம் ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ புதுபட்டி மாரியம்மன் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 


    23 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். 

    மகாமாரியம்மன் கோவிலிருந்து இருந்து வழக்கம் போல அருமிகு பாலதண்டாயுதபாணி சுப்பிரமணியர் ஆலயம் அருகில் மாலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டது, பின்னர், மறுநாள் மாலை சுமார் 5 மணியளவில் பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நடு வீதி, வடக்கு வீதி மூலமாக மாரியம்மன்கோவில் திடலில் நிலைநிறுத்தப்பட்டது. 

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த விழாவின் முன்னதாக 50 திற்கும் மேற்பட்டோர் அழகு குத்தல், 20 திற்கும் மேற்பட்டோர் கரகம் எடுத்தல் , திருநங்கைகள் நடனம், தீவளையத்தில் தீ மிதித்து நடனம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் நடைபெற்றது.  
     

  • Moolanadhar Koil Kumbabishegam

    சிதம்பரம் அருகே சம்மந்தம் கிராமத்தில் உமையபார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

    சிதம்பரம் அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் ஏராளமான பொருட்செலவில் ஸ்ரீ உமைய பார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர் கோயில் கட்டப்பட்டது. இதில் ஸ்ரீ உமையபார்வதி சமேத ஸ்ரீ மூலநாதர், ஸ்ரீ அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயங்கள் எழுந்தருளியுள்ளது.

     இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 5 ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. தினமும் பல்வேறு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 

    இதற்காக யாகசாலையில் இருந்து மேள  வாத்தியங்கள் முழங்க கடம் ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. பின்னர் விமானத்தில் புனித கலச நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
     

  • Nellaiappar Koil Mulaikattu Vaibavam

    ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோயிலில் பத்தாம்  திருநாளில் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் முளைக்கட்டு வைபவம் நடைபெற்றது. 

    அருள்மிகு சுவாமி  நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. கடந்த 28-ஆம் தேதி மதியம் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  10-ஆம் நாளான சனிக்கிழமை இரவு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.  பக்தர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     

  • Saneeswaran koil bramorchava kodi

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்து கோயில் உள்ளது . நவகிரகங்களில் பரிகார ஸ்தலமான இக்கோவிலில்  ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தை ஒட்டி நடைபெறும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.   

    முன்னதாக பஞ்சமூர்த்திகள் கோவில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத ,மங்கள இசையுடன்  காலை 6.45 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது . இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தேரோட்டமும் , 13ஆம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது .   

    தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான்  திருவீதி உலாவை ஆண்டுக்கு ஒரு முறை  பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே காண முடியும் . இதை தொடர்ந்து தெப் போற்சவம் , சண்டிகேசுவரர் உற்சவம் நடைபெற்று ஜீன் மாதம் 16ம் தேதி  விசாக தீர்த்த நிகழ்ச்சியோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது

  • Pateeswarar koil car festival

    கோவை பே௫ர் பட்டீசுவரர் தி௫க்கோவில் தி௫த்தேரோட்ட தி௫விழா 1000 க்கனக்கான பக்தர்கள் மற்றும் பட்டக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றது

    பங்குனி உத்திரத் தி௫விழா 10 நாட்கள் நடைபெறும் இதனையொட்டி இன்று தி௫த்தேரோட்டத்தை மாதம்பட்டி சிவக்குமார் குடும்பத்தார் வடம்பிடித்து துவக்கிவைத்தனர் மேலும் பட்டக்காரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டடோர் வடம்பிடித்து தேரை இழுத்து கோவிலை வலம் வந்தனர்.

    பிரம்மன்,விஷ்ணு, ஆதிமூர்க்கம்மன்,காலவமுனிவர் ஆகியோர்களுக்கு ஆனந்த நடனம் தரிசனம் கொடுத்த பங்குனி உத்திரத் தி௫நாள் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெ௫விழாவாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.மேலும் இக்கோவிலில் இரண்டு தேர்கள் உள்ளன. 

    முதலில் பட்டீசுவரசுவாமி தி௫க்கோவில் தேரை வடம்பிடித்து கோவில் வலம்வந்துவிட்டு பிறகு இரண்டாவது பச்சைநாயகி அம்மன் தேரை பக்தர்கள் வடம்பிடித்து செல்வார்கள் இது இக்கோவிலின் ஜவிகம் ஆகும். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பட்டக்காரர்கள்,  பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானனோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
     

  • Ponni Amman Koil Kumbabishegam Vedio

    அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.  ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில்  உள்ள பல ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ  பொன்னியம்மன் திருக்கோயிலில்  ஜூர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  முன்னதாக நேற்று  கோ பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ தீபாராதனையும் நடைபெற்றது.

     அதே போல் இரவு அம்மனுக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராற்பணம், கலாகர்ஷணம் மற்றும் தீபாராாதனையும் நடைபெற்றது.   அதனைத் தொடர்ந்து இன்று காலை மஹா சங்கல்பம், தத்வார்ச்சனையும்,  அவம்ருத யாகமும் விசேஷ ஹோமமும் 10 மணியளவில் கலசத்தை கோயில் நிர்வாகிகள் எடுத்துவர, கலசத்தில் உள்ள புனித நீரை விமான கோபுரத்தில் ஊற்றினர். 

    அப்போது கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷம் எழுப்பினர்.  கலசத்தில் கொண்டு வந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்