Tag: Dhanvanthri

  • Sri Dhanvanthri peruman sirappu

    மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் தேசிய ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறது.  சிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

    ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

    காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

     

  • Dhanvanthri peedathil vasthu homam

    ரியல் எஸ்டேட் தொழில் சிறந்து விளங்கவும் தடைப்பட்ட கட்டிடப் பணிகள் விரைவில் முடியவும், வீடு மனை போன்றவைகளில் உள்ள வாஸ்து தோஷங்கள் அகலவும், வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம் வருகிற 6.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது.

    இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்துபகவானுக்கென்று ஒரு ஆலயம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

    வாஸ்து பகவான் அமைப்பு:

    வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

    வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    தனக்கென் ஒரு வீடு:

    சிறிய தொழில், பெரிய தொழில் செய்வோர்க்கும், வியாபாரம் செய்வோர்க்கும் மற்றும் பலவகை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும், குடும்ப பெண்களுக்கும் சொந்தமாக ஒரு வீடுகட்ட வேண்டும் என்ற கனவு எல்லோருடைய மனதிலும் இருப்பது உண்டு. இதற்காக அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப வீட்டு மனைகளை வாங்கிப்போடுவதும், தான் குடியிருக்கும் வாடகை வீட்டை விலைக்கு வந்தால் வாங்கி போடலாம் என்பது சிலர் நினைப்பதும் உண்டு. அப்படி வாங்கிப்போட்ட மனைகளில் எப்போது பூமி பூஜை போட்டு தொடங்க வேண்டும் என்பது பற்றி சிலருக்குன் கேள்வியாக இருக்கும்.

    மனை வீடு வாஸ்து:

    ''வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும் பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

    வாஸ்து விழிப்பு நாளில் வாஸ்து ஹோமம்:

    நிகழும் பிலவ வருஷம் மாசி மாதம் 22-ம் தேதி 6.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.32 முதல் 11.08 வரை வாஸ்து விழிப்பு நேரம் என்பதால், அந்த நேரத்தில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.
     
    வாஸ்து ஹோம பிரசாதங்கள்:

    ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்கள் பிரசாதமாக பெற்று செல்லாம்

    மேற்கண்ட காரணங்களுக்காகவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்படும் தடைகள் விலகவும் வீட்டு மனைகள் விரைவில் விற்கவும் பூமி லாபம் ஏற்படவும், விலை போகாத வீடு மனைகள் விலைபோகவும் அதனால பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெறவும் தடைப்பட்ட கட்டிடப் பணிகள் விரைவில் முடியவும் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி மேற்கண்ட நாளில் காலை வாஸ்து ஹோமமும் வாஸ்து பகாவனுக்கு அபிஷேகமும் பஞ்சபூதம் மற்றும் அஷ்டதிக் பாலகர்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • Dhanvanthri Bagavan

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    ஆயுள் வேதமே ஆயுர்வேதம்.

    ஆயுர்வேதம் 
    ஓர் 
    இயற்கை மருத்துவம்.

    சித்த மருத்துவம் 
    தமிழின் கொடை. அகத்தியர் பெருமானே ஆதார நாயகன்.

    அகத்தியரும் 
    தேரையரும் 
    யூகி முனிவரும்
    சித்த மருத்துவத்தை
    அதிகமாய் அருளினார்கள்.

    ஆயுர்வேதத்தின் பிதாமகன்
    தன்வந்திரி.

    அகத்தியர் 
    வடநாட்டவர். 
    தமிழ் கற்று சித்தமருத்துவம் அருளினார்.

    தன்வந்திரி 
    தமிழ் நாட்டவர். 
    வடமொழிப் புலமையில் வடநாட்டினரை
    விஞ்சியவர்.

    தமிழின் 
    சித்த வைத்தியத்தை வடமொழியில் வழங்கி 'தன்வந்திர்'
    என்ற 
    நிகண்டாக்கினார்.

    அந்நூலை 
    அருளியதாலேயே
    தன்வந்திரி 
    என்ற 
    காரணப் பெயரும் பெற்றார்.

    வாகட நூலில் வல்லவரான 
    தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம்.

    மகாவிஷ்ணுவின் 
    மறு அவதாரமே தன்வந்திரி என்பார் 
    சில ஆய்வர்.

    தன்வந்திரியின்
    பிறப்பு பற்றி 
    சில சுவையான குறிப்புகள் உண்டு.

    தேவர்களும் 
    அசுரர்களும் 
    பாற்கடலைக் கடைந்தபோது 
    அமுத கலசத்துடன் அவதரித்தார் 
    தன்வந்திரி 
    என்கிறார் 
    போகர் பெருமான்.

    தீர்த்ததமர் 
    என்பவரின் 
    மகனாய் பிறந்தவர். 

    காசிராஜன் 
    புதல்வராகத் தோன்றினார்.

    தீர்த்தப்பசு 
    என்பவரின் 
    திருமகனே 
    தன்வந்திரி. 
    அப்பிறப்பில் 
    அவர் பெயர் 
    சேதுமான்.

    சேதுமான் தான் சுச்சுருதருக்கு ஆயுர்வேதம் உபதேசித்தவர்.

    இவ்விதம் கூட பல 
    பிறப்புக் குறிப்புகள் உலவுகிறது..

    தன்வந்திரியின் 
    மகன் 
    சேதுமான் 
    என்று 
    அடித்துச் சொல்கிறது அபிதான சிந்தாமணி.

    அனு 
    என்ற அரசனின் வாரிசாகப் பிறந்து 
    பரத்பாசரிடம் 
    ஆயுர்வேதம் கற்று 
    அதை 
    எட்டு வகையாகப் பிரித்து உபதேசித்தார்
    என்றும் கூறுகிறார்கள்.

    இவ்விதம் 
    பலவித பிறப்பும் 
    பற்பல செய்திகளும்
    பரவிக் கிடக்கின்றன.

    அகத்தியர் பெருமான் 
    ஒருபடி மேலே போய் தன்வந்திரி
    விஷ்ணு பகவான் தான் எனச் சத்தியம் செய்கிறார்.

    முற்பிறப்பில் விஷ்ணுபிரானாக
    வலம் வந்ததால்…
    மனிதனாகப் பிறந்ததே ஆயுர்வேதத்தை அகிலத்திற்கு
    அளிக்கத் தானாம்.

    அவர் தந்தை 
    தம்புராவுடன் 
    பாடிச் சென்று 
    யாசகம் பெற்றே தன்வந்திரியை வளர்த்தார்.

    தந்தையே சகல சாஸ்திரங்களையும் கற்பித்தார்.

    18 சித்தர்களும் தன்வந்திரிக்கு உபதேசித்துள்ளார்கள்.

    மூன்று லட்சம்
    கிரந்தங்களையும் சித்தர்கள் 
    உபதேசித்தனர்.

    அதனால் 
    ஞானம் பெற்று ஞானியானார் 
    தன்வந்திரி.

    தன்வந்திரி 
    சூரியன் போல் பிரகாசித்தார் 
    என்கிறார் 
    அகத்தியர் பெருமான்.

    இது 
    சித்தரர்களுக்கான
    சித்த அடையாளம்.

    ஒரு கையில் 
    கமண்டலம்.
    மறு கையில் 
    கதை. 
    இதுவே 
    தன்வந்திரியின்
    தவக் கோலம்.

    விக்கிரமாதித்தன் சபையில் 
    'நவரத்தினம்'
    என்ற பட்டம் பெற்றவர்.
    பண்டிதர் குழுவில் பணியாற்றியதாகவும் 
    செய்தி உள்ளது.

    தன்வந்திரி 
    அருளிய நூல்கள் வைத்திய சிந்தாமணி வைத்திய காவியம் 
    நூறு கண்ட ஞாலம் 
    கலை ஞானம் 
    ஜெயம் தைலம் 
    சிமிட்டு ரத்தினச் சருக்கம் கருக்கிடை 
    நிகண்டு 
    வைத்தியம் 
    தண்டதம் 
    கருடாரூடம் 
    செயநீர் 
    மூப்பு சூத்திரம் 
    உள்ளிட்ட பல.

    ஐப்பசி மாதம் 
    புனர்பூசம் 
    4 ஆம் பாதத்தில் அவதரித்தவர் 
    தன்வந்திரி.

    அவர்
    800 வருடம்
    32 நாட்கள் 
    வாழ்வாங்கு வாழ்ந்தார்.

    தன்வந்திரி 
    பற்றிய 
    தகவல்கள் குறைவே.

    வைத்தீஸ்வரன் கோயிலில் 
    தன்வந்திரி 
    லயமானார் 
    என்கிறது ஓர் ஆய்வு.

    கோரக்கரின் குறிப்பு 
    தன்வந்திரிக்கு 
    60 மனைவிகள் 
    160 மக்கட் செல்வங்கள் என வியக்க வைக்கிறது.

    எண்ணற்ற 
    கோயில்களில் தன்வந்திரிக்கு 
    பிரதான இடமுண்டு.

    அவற்றில் 
    தீராத நோய் தீர்க்கும் தெய்வமாக 
    காட்சி அளிக்கிறார்
    தன்வந்திரி சித்தர்.

    எந்தவித நோயையும் தீர்க்கும் 
    சிறப்பு மருத்துவரே-
    ஸ்பெஷலிஸ்ட்டே
    தன்வந்திரி…
    என்று துதிக்கிறார்கள் 
    பாதிப்புகள் நீங்கி பயன்பெற்ற
    பக்தகோடிகள்.

    மரணமிலா பெருவாழ்வுக்கு
    வழிகாட்டும் 
    மகா சித்தர் 
    என்று தொழுகிறது
    ஆன்மீக உலகம்.
     

  • Dhanvanthri Peedathil Sirappu Homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி அகில உலக புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் நலன் கருதி இன்று 16.11.2019 சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 10 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமமும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது.

    ஸ்ரீ வேத வியாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றும் புரோகிதர்களுடைய க்ஷேமம், அவர்களின் குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜையுடன் மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், விக்னேஸ்வரபூஜை, கணபதியக்ஞம், நவக்ரஹ யக்ஞம், சுதர்சன யக்ஞம், மஹா தன்வந்திரி யக்ஞம், ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் புரோகிதர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் தனித்தனியாக ஹோம குண்டங்களில் அமர்ந்து அவரவரே செய்யும் ஹோமமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு பூஜைகளும், காலசக்கிர பூஜையும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் புரோகித சங்க தலைவர் வேலூர் திரு. சீதாராமன் அவர்கள், பொருளாளர் திரு. கோபாலன் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக திருவண்ணாமலை காகபுஜண்டர் ஆசிரம பீடாதிபதி திரு. தர்மலிங்க ஸ்வாமிகள் மற்றும் வாலாஜாபேட்டை தொழிலதிபர் திரு. மஹேந்திரவர்மன் அவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.