Tag: Car Festival

  • Dharapurm Anjaneyar koil car festival

    தாராபுரத்தில் 700 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் . 700 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்த இன்றைய தாராபுரத்தில் ஸ்ரீ வியாசராயர் சுவாமிகள் இந்தியா முழுவதும் 732 ஆஞ்சநேய மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார், இதில் 89 ஆவது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர். 

      பொதுவாக சீதாராமர் திருக்கோவில்களில் மூலமூர்த்தியாக சீதாராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் இருப்பது வழக்கம், ஆனால் தாராபுரத்தில் ஏழு அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் தனி சிறப்பு. 

    அருள்மிகு ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம் இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேல் கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே இருப்பது இங்கு மட்டுமே, இக் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சார்த்தி ஆஞ்சநேயப் பெருமானே உள்ளம் உருக வேண்டிக் கொண்டாள் திருமணத்தடை உள்ளவர்களுக்கு சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும் என்பதும், கல்வி கேள்விகளில் அவர்கள் சிறந்து சிறந்து விளங்குவார்கள் என்பதும், தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் அது சுபிட்சம் அடையும் என்பதும் தனிச்சிறப்பு.
     
    வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வருடாந்திர தேர்வடம் பிடிப்பு நிகழ்ச்சி கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது ஆஞ்சநேய சுவாமிகளுடன் உற்சவ மூர்த்திகளான சீதாராமர் சிலைகள் பக்தர்கள் புடைசூழ திருத்தேருக்கு எடுத்துவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் நிறுத்தப்பட்டது தொடர்ந்து நாளை காலை ஏழு மணிக்கு திருத்தேர் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நிலையை அடையும்
       
    புகழ்பெற்ற தாராபுரம் ஸ்ரீ காடு ஹனுமந்தராய திருக்கோவிலில் நடைபெற்ற தேர்வடம் பிடித்து நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
     

  • Sri Rangam Chitirai Car Festival

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25 ஆம் தேதி தொடங்குகிறது. மே 5 ஆம் தேதி வரை நடைபெற இந்த விழாவுக்கு நாளை மறுநாள் காலை கொடி ஏற்றப்படுகிறது.

    28-ந்தேதி மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். மே 2-ந்தேதி காலை 7 மணிக்கு வண்டுலூர் சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேல் தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மே 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 5-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார்.

    முன்னதாக சித்திரை திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி மே  2-ந்தேதி நடைபெற உள்ளது.
     

  • Sri Rangam Panguni car festival

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி தேர்விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டு பங்குனி தேர்த்திருவிழா கடந்த மார்ச் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    அந்தவகையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நம்பெருமாளை வழிபட்டனர். 

    இதனை தொடர்ந்து நாளை பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

  • Pateeswarar koil car festival

    கோவை பே௫ர் பட்டீசுவரர் தி௫க்கோவில் தி௫த்தேரோட்ட தி௫விழா 1000 க்கனக்கான பக்தர்கள் மற்றும் பட்டக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றது

    பங்குனி உத்திரத் தி௫விழா 10 நாட்கள் நடைபெறும் இதனையொட்டி இன்று தி௫த்தேரோட்டத்தை மாதம்பட்டி சிவக்குமார் குடும்பத்தார் வடம்பிடித்து துவக்கிவைத்தனர் மேலும் பட்டக்காரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டடோர் வடம்பிடித்து தேரை இழுத்து கோவிலை வலம் வந்தனர்.

    பிரம்மன்,விஷ்ணு, ஆதிமூர்க்கம்மன்,காலவமுனிவர் ஆகியோர்களுக்கு ஆனந்த நடனம் தரிசனம் கொடுத்த பங்குனி உத்திரத் தி௫நாள் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெ௫விழாவாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.மேலும் இக்கோவிலில் இரண்டு தேர்கள் உள்ளன. 

    முதலில் பட்டீசுவரசுவாமி தி௫க்கோவில் தேரை வடம்பிடித்து கோவில் வலம்வந்துவிட்டு பிறகு இரண்டாவது பச்சைநாயகி அம்மன் தேரை பக்தர்கள் வடம்பிடித்து செல்வார்கள் இது இக்கோவிலின் ஜவிகம் ஆகும். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பட்டக்காரர்கள்,  பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானனோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
     

  • Palani theppa Ther Thiruvizha

    பழனி தைப்பூச திருவிழா நிறைவாக தெப்பத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இரவு தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    தெப்பத்திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய் வானையை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 

    6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து, 16 வகை அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனையும், உபசாரங்களும் நடைபெற்றது. 

    அதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை குளத்தில் வலம் வந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தோளுக்கினியாள் வாகனத்தில் வந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.