Tag: Atthi Varadhar

  • Atthi Varadhar Dharisam Illai

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 48 நாட்கள் நடைபெறும் அத்தி வரதர் உற்சவத்தின் 33 நாளான இன்று நின்ற  கோலத்தின் 2ம்  நாள்.

    நின்ற கோலத்தின் 2  நாளான இன்று அத்திவரதர் கரும் பச்சை  பட்டு உடுத்தி  மல்லிகை பூ, சம்பங்கி பூ, செண்பகப் பூ மலர் மாலைகள் அணிவித்து காலை 5 மணி முதல் மக்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    நாளை ஆடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதை ஒட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் உற்சவம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் நடைபெறும்.

    5 மணிக்குப் பிறகு தரிசனம் நிறுத்தப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் முடிவடைந்தவுடன் இரவு 8 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

  • Atthi Varadhar Dharisanam

    சயன கோலத்தில் அத்திவரதர் அருள்பாலிக்கும் கடைசி நாளான இன்று மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 30  நாட்களாக விமர்சையாக நடைபெற்று வருகிறது. சயன கோலத்தில் அத்தி வரதர் அருள் பாலிக்கும் கடைசி நாளான இன்று மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி மல்லிகை சம்பங்கி ரோஜா பூவால் அலங்கரிக்கப்பட்ட வண்ண மலர் மாலைகளால் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

     30 ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளார்கள். கடந்த 30 நாட்களாக சுமார் 45 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டிருக்கிறார்கள். வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன.

     நாளை முதல் அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதனால்  பக்தர்களுக்கு இன்று 12 மணியோடு கோயில் வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். 5 மணியோடு அத்தி வரத தரிசனம் செய்வது நிறுத்தப்பட்டு நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதரை  நிறுத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளை  மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் சயன கோலத்தில் இன்னும் சில மணி நேரம் மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் என்பதனால் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகமாகவே உள்ளது.
     

  • Atthi Varadhar 28 th Day

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 

    28-வது நாளான நேற்று அத்தி வரதர் நீல நிற பட்டாடையில் காட்சி அளித்தார். நேற்று ஞாயிறு விடுமுறைநாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.  பொது தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் திக்குமுக்காடி வருகிறது. பொது தரிசனத்தில் அத்தி வரதரை தரிசிக்க 6 மணி நேரம் ஆனது.

     27 நாட்களில், 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் . 28 வது நநாளான நேற்று மட்டும் 3 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கின்றனர். 

  • Atthi Varadhar VIP Dhnarshan

    40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொது தரிசனத்திற்கு சுமார் 6 மணி நேரம் வரை ஆகிறது. 

    இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவக்டிககைகளை எடுத்து வருகிறது. 

    இதன்படி விஐபி தரிசனம் நன்கொடை பாஸ் வைத்திருப்பவர்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் வந்தால் நன்கொடை பாஸ் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

    ஆன்லைன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கபடுவார்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 

  • Atthi Varadhar August 1

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரத பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்திற்கு கோயில் நிற்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

    முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் காட்சி தருவார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 25ம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற நிலை தரிசனம் தருவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது நின்ற நிலை தரிசனம் குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வைக்க வாய்ப்பில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சிலையை நிற்கும் நிலைக்கு மாற்றி ஆகஸ்ட் 1 – 17 வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி தருவரர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் நின்ற நிலையில் இருக்கும் அத்தி வரதரை  மீண்டும் தரிசனம் செய்ய வர வாய்ப்புள்ளதால், பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     

  • Atthi varadhar thiruvizha

    நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் தேவராஜர் கோயில் தரிசன திருவிழா கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது.  கடந்த ஒரு மாதமாகவே காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்துக்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 

    கடந்த 27-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அனந்த சரஸ் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைத்தனர். சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதர் சிலையை சுத்தம்செய்து, அவருக்கு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 11 மணிக்கு புண்ணியாக வாசனம், ஜலசம்ரோஷம், தைலக்காப்பு, ஹோமம் ஆகிய பூஜைகள் முடித்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் கொடுக்கும் வசந்த மண்டபம் பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு மிக எழிலுடன் காணப்பட்டது.

    அதிகாலை 2.45 மணிக்கு அத்திவரதர் சிலை மைய மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. இதனை அடுத்து, பக்தர்கள் தரிசனம் தொடங்கியது.

    ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் பக்தர்கள் அணி திரண்டு வந்துள்ளனர்.
     

  • Atthi Varadharai Kaana Sirappu Erpadu

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீஆதி அத்தி வரதர் நிகழ்வில் பக்தர்கள் இலவச தரிசனம் மற்றும் ரூ50 ரூபாயில் கட்டண தரிசனத்தில் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    புகழ்பெற்ற ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆதி அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை ஒன்றாம் தேதி பொதுமக்கள் தரிசனத்திற்காக  திருக்குளத்திலிருந்து வெளியே  கொண்டுவரப்பட உள்ளார்.

     இந்த நிகழ்வுக்காக இந்து சமய அறநிலையத் துறையும் காஞ்சி மாவட்ட நிர்வாகமும் பல்வேறு பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றது.  இதில் பொதுமக்கள் பக்தர்கள் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனத்திற்கு வரும் ஸ்ரீ ஆதி அத்தி வரதர் நிகழ்வு இந்து சமய அறநிலையத் துறையால் சிறப்பாக நடத்தப்படும் எனவும் இதற்காக மாவட்டம் சார்பில் 3 தற்காலிக பேருந்து நிலையங்களும் 4 சிற்றுந்து நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிதண்ணீர் மட்டுமில்லாமல் 2 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்கப்படும் எனவும் நகர் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளை அமைத்து பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிகழ்வுக்காக 12.8 ஒன்பது கோடி ரூபாய் இந்து சமய அறநிலையத் துறையால் செலவிடப்பட்டு வருவதாகவும் திருக்கோயில் வளாகத்தில் மட்டும் புனரமைக்கும் பணிகளில் 2.50 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவாக தற்போது நடந்து வருவதாகும் இந்த வைபவத்தை காண பொதுமக்கள் பக்தர்களுக்கு இலவச தரிசனமும் அனுமதிக்கப்படும் கட்டணம் தரிசனமாக ரூபாய் 50 செலுத்தியும் எம்பெருமானை தரிசிக்கலாம் எனவும் இந்த அனைத்து வசதிகளும் சிறப்பாக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அனைத்து பல் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்வார்கள் எனவும் பொதுமக்கள் எம்பெருமானை சிறப்பாக தரிசனம் செய்ய வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
     

  • Atthi Varadhar

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவம்,  ஜூலை 1 ஆம் தேதி துவங்குவதை அடுத்து குளத்துநீர் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. 

    கோவில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கையில் இதுவும் ஒன்று. குளத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், கிழக்கு கோபுரம் அருகில் உள்ள பொற்றாமரை குளத்தில் விடப்படுகிறது. மேலும், குளத்தில் உள்ள மீன்களையும் பிடித்து அந்த குளத்தில் விட இருக்கிறது. 

    அனந்த சரஸ் குளத்தின் தண்ணீர் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. முழுவதும் வரும், 20ம் தேதிக்கு மேல் எடுக்கப்படும். அதன் பின். குளத்தில் அடியில் தேங்கியுள்ள சேறும், சகதியும் அப்புறப்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. 

    இம்மாத இறுதிக்குள் முழுதும் சுத்தம் செய்து, குளத்தில், மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர் வெளியில் எடுக்கப்படுவார். பின், அதற்கான ஆகம விதிபடி பூஜைகள் முடிந்து, ஜூலை, 1 முதல் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக 48 நாட்கள் அத்தி வரதர் எழுந்தருள்வார்.