Tag: பகவான்

  • Rishabam Shakthi Online – November Monthly Prediction – 2024

    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

    கிரகநிலை:

    ராசியில் குரு(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் – பஞசம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன்  – சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    குணத்தில் சாந்தமாக இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

    பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.  

    கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.

    அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.  

    கார்த்திகை:
    இந்த மாதம் தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

    ரோகினி:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.

    பரிகாரம்:  மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 5, 6, 7

    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Mesham Shakthi Onine – November Monthly Prediction – 2024

    மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சூரியன்  – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், புதன், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சனி (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  லாப  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  களத்திர ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தும் மேஷ ராசியினரே நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர் இந்த மாதம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் நீங்கும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும்.
    தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.
    குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

    பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
    அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
    மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

    அஸ்வினி:

    இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

    பரணி:

    இந்த மாதம் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும்.

    கார்த்திகை:

    இந்த மாதம் வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சூரியன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 3, 4, 30

    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • October 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஆர்வம்  
    ரிஷபம்         – அசதி
    மிதுனம்     – பாராட்டு
    கடகம்         –  நட்பு   
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    நிம்மதி
    துலாம்         –     சோதனை  
    விருச்சிகம்     –  ஆக்கம்
    தனுசு         –    நலம்  
    மகரம்         –   சிந்தனை
    கும்பம்         –     பரிசு
    மீனம்         –    அச்சம்
    சந்திராஷ்டமம்    –        அனுஷம், கேட்டை

  • October 24 2024 Indrayanaal

    அக்டோபர் 24 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – ஐப்பசி 07
    அக்டோபர் 24 – 2024
    வியாழன்
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00    
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  சப்தமி கா 6.59
    நட்சத்திரம் :  புனர்பூசம் ம 12.10
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் :   கேட்டை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • October 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஓய்வு
    ரிஷபம்         – சாந்தம்
    மிதுனம்     – உழைப்பு   
    கடகம்         –  உற்சாகம்  
    சிம்மம்         –   எதிர்ப்பு
    கன்னி         –    லாபம்
    துலாம்         –     ஜெயம்
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –    தனம்   
    மகரம்         –   பரிவு
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    அனுகூலம்
    சந்திராஷ்டமம்    –        விசாகம், அனுஷம்

  • October 23 2024 Indrayanaal

    அக்டோபர் 23 – இன்றைய நாள் எப்படி…?
    குரோதி வருடம் – ஐப்பசி 06
    அக்டோபர் 23 – 2024
    புதன்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சஷ்டி கா 7.21
    நட்சத்திரம் :  திருவாதிரை கா 11.48
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   அனுஷம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • October 22 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நேர்மை  
    ரிஷபம்         – வெற்றி
    மிதுனம்     – ஆதரவு  
    கடகம்         –  ஆதாயம்  
    சிம்மம்         –   தேர்ச்சி
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     –  சிந்தனை
    தனுசு         –    நன்மை  
    மகரம்         –   விருத்தி  
    கும்பம்         –     களிப்பு
    மீனம்         –    மேன்மை  
    சந்திராஷ்டமம்    –        சுவாதி, விசாகம்

  • October 22 2024 Indrayanaal

    அக்டோபர் 22 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – ஐப்பசி 05
    அக்டோபர் 22 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  பஞ்சமி கா 8.12
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் கா 11.55
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   விசாகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • nagareeswarar koil kumbabishegam

    காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை நேரத்திலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது  அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோவில். பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள், பங்களிப்புடன்பல லட்சம் ரூபாய் செலவில்  பழமை மாறாமல் நகரீஸ்வரர் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை  பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க, அதிர்வெட்டுக்கள் முழங்க, கலசத்திலிருந்து  புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.

    பின்னர் கோவில் கருவறையில் உள்ள நகரீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்க வைத்தனர். அதிகாலை நேரத்திலேயே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

  • mutharamman koil kumbabishegam

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினிமகாளி அம்மன், சக்தி விநாயகர், பெருமாள் சுவாமி, ஸ்ரீ சுடலை மாட சுவாமி சகிதாய பரிவார மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாவித்து வருகின்றனர். இக்கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டது.  

    இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை  விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மற்றும் மூன்றாவது யாகசாலை பூஜைகள், வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இன்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை கோபுர கும்பாபிஷேகம், ஸ்ரீ முத்தாரம்மன் மற்றும் பரிவாரம்பிகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாதீபாராதனை மகேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.