Tag: பகவான்

  • 3

    அங்கோர் வாட் ஆலயத்தை மேலிருந்து பருந்துப் பார்வையில் பார்த்ததை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு நினைவிலிருந்து அகற்ற முடியாது. அதன் பரப்பளவும் கம்பீரமும் எண்ணிப் பார்க்கப் பார்க்க பிரமிப்பை ஏற்படுத்தியது. மனிதனால் என்னென்ன சாதிக்க முடியும் என்பதற்கு, இதுபோன்ற கட்டடங்கள் மௌன சாட்சியாக நிற்கின்றன. எகிப்தியப் பிரமிடுகள், கம்போடியாவின் கெமர் பேரரசு காலத்தில் எழுந்த பேராலயங்கள், பிரம்பனான் கோயில் வளாகம், போராபுதூர் பௌத்த ஆலயம், தஞ்சைப் பெரிய கோயில், வட இந்தியக் கோட்டை, கொத்தளங்கள் இவற்றையெல்லாம் உருவாக்க, எவ்வளவு மனித உழைப்பும் திட்டமிடலும் தேவை? யாரோ ஒரு தனிமனிதர் முதலில் தன் மனக் கண்ணில் கண்டு அதை உருவாக்கிவிட்ட பின்னர்தானே அவை தூல வடிவம் பெறுகின்றன? என்னதான் மன்னரின் ஆணைக்கிணங்க அவை கட்டப்பட்டாலும் வெறும் கட்டளைக்கு அடிபணிந்தா இப்படிப்பட்ட அதிசயங்கள் மண்ணில் எழ முடியும்? இதுபற்றிப் பேச்சு எழும்போதெல்லாம், “இப்ப மாதிரி அப்ப பொழுதுபோக்கு வசதியெல்லாம் இல்லை. சோறு போட்டாப் போதும், சனங்க மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சிருப்பாங்க!” என்ற வாதம் முன்வைக்கப்படும். ஆனால், சோற்றுக்காகச் செய்யப்பட்ட பணியில் இவ்வளவு திருத்தம் இருக்க முடியுமா என்ன? அங்கோர் வாட் ஆலயத்தை உருவாக்க 30 ஆண்டுகள் பிடித்ததாக இணையத்தில் படித்தேன். ஒரு தலைமுறைக் காலம்… எவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டும் இவ்வளவு பெரிய ஆலயத்தைத் திட்டமிட்டபடி கட்டி முடிக்க? எத்தனை இடையூறுகள் வந்திருக்கும் இடையிடையே? கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் கடந்த பின்னரும் நம் முன்னே பழமைப் பாசிப் பிசுக்குடன் ஒளிவிடும் அங்கோர் வாட் மானுட சாதனையின் உச்சங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

    இந்தப் பயணத்திற்காகப் படித்த கட்டுரைகளும், பார்த்த ஆவணப் படங்களும் அங்கோர் மீதான ஆச்சர்யத்தை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. சென்று வந்த ஓராண்டு கழித்து இந்த அத்தியாயத்தை எழுதுகிறேன். இந்த ஓராண்டிலும் அவ்வப்போது கம்போடியா பற்றிப் படித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். எப்பேர்ப்பட்ட இடத்துக்கு நாம் சென்று வந்திருக்கிறோம் என்ற உணர்வு எங்கள் எல்லாருக்குமே எழுந்த வண்ணம் உள்ளது. நாங்கள் சந்திக்கும்போதெல்லாம், கம்போடியா எங்களுக்குள் வந்துவிடுகிறது. “ஆசை தீரத் தின்னவனும் கிடையாது, அலுப்புத் தீரக் குளிச்சவனும் கிடையாது” என்று ஒரு சொலவடை உண்டு. அந்தக் கதைதான் அங்கோர் வாட்டும். ஒவ்வொரு முறை அதைப் பற்றிப் படிக்கும்போதும் ஒழுங்காப் பார்த்தோமா நம்ம அதை? தப்புப் பண்ணிட்டோமோ? ஒரு வாரம் ஒதுக்கி இருக்கணுமோ? இன்னொரு தடவை போக வாய்ப்பு கிடைக்குமா? இப்படி சிந்தனை ஓடுகிறது. இன்னும் இளமையாக இருந்திருக்கும்போதே கம்போடியா போயிருக்க வேண்டும். இப்போது மனம் செல்லும் வேகத்தில் செல்ல உடம்பு ஒப்புவதில்லை. சரி, பரவாயில்லை. எத்தனை பேருக்கு இதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறது என்று நினைத்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.

    வாசல் நிலைப்படியில் ஒருவர் நிற்பதைப் பார்த்த பிறகுதான் யாரோ ஒருவருக்குப் படங்களுக்குச் சட்டமிடும் யோசனை வந்திருக்க வேண்டுமென வண்ணதாசன் எழுதுவார். அதுபோல, அங்கோர் வாட் ஆலயத்தை வானத்திலிருந்து பார்க்கும்போது, அகழிக்குள் கட்டப்பட்டதால் அதன் அழகு மேலும் பொலிவு பெறுவதுபோல் எனக்குத் தோன்றியது. நீரால் செய்யப்பட்ட சட்டம். காலை, மாலை வெயிலுக்கேற்ப அவ்வப்போது நிறம் மாறும் வண்ணச் சட்டம். அங்கோர் வாட்டின் முழுமையான கம்பீரத்தையும் அழகையும் பருந்துப் பார்வையில்தான் நன்கு அனுபவிக்க முடியும். வேறெந்தக் கோணத்தில் பார்த்தாலும் அதை முழுமையாகப் பார்ப்பது அசாத்தியம். ஆலயத்தின் நடுவிலுள்ள மகாமேருவும் அதைச் சுற்றியுள்ள நான்கு முகடுகளும் மட்டுமே ஓரளவு கண்ணுக்குள் நிறையும். அந்தக் காட்சியைத்தான் கம்போடிய தேசியக் கொடியில் பொறித்து வைத்திருக்கிறார்கள். மற்றபடி ஆலயத்தை ஓரிடத்திலிருந்து முழுமையாகப் பார்த்துவிட முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரு விதமாகவும், அருகே செல்லச் செல்ல வேறுவிதமாகவும் தோற்றமளிக்கின்றன ஆலய முகடுகள்.

    காலம் அதன் சுவர்களை அரித்து விட்டாலும், கம்பீரம் குலையவில்லை. தென் கிழக்காசிய நாடுகளுக்கே உரித்தான பசுமைக் காடுகள். அவற்றின் நடுவே பதித்து வைக்கப்பட்ட கல் நகைகள் போலிருக்கின்றன அங்கோர் ஆலயப் பகுதிகள். பேலூர், ஹளபேடு சிற்பங்களைப் பற்றி எழுதும்போது ஜெயமோகன் இப்படித்தான் கல்லில் செய்த நகைகள் என்பார். அழகான உவமை! கம்போடியர்கள் கல் கட்டுமானத்திலும் சிற்பத் திறனிலும் மட்டுமல்ல நீர் மேலாண்மையிலும் மிகச் சிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அகப்பட்டுக் கொண்டே வருகின்றன. அங்கோர் வாட்டைச் சுற்றி இருக்கும் அகழி அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

    ஆலயம் மேற்குப் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. மேற்கிலும் கிழக்கிலும் இரண்டு வழிகள் உட்செல்லவும் வெளிவரவும். மேற்கில் உள்ளே நுழையும் இடத்தில் இடப்பக்கத்திலிருந்து அகழியோடு சென்று ஆலயத்தைச் சுற்றித் திரும்ப நாம் நிற்கும் இடத்திற்கு வந்தால், நான்கு திசைகளையும் சுற்றிவரும் மொத்தத் தொலைவு சுமார் 5.5 கிலோ மீட்டராம். அகழியின் அகலம் சுமார் 200 மீட்டர். கற்பனைக்கும் எட்டாத துணிவு. அகழியின் ஆழம் 10 அடிக்கு மேலிருக்கும். எப்போதும் அதில் தண்ணீர் இருக்கும்வகையில் நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அகழியில் இருந்து வெட்டி எடுத்த மண்ணைத்தான் மகாமேருவுக்குக் கீழே கொட்டி உயர்த்தியிருக்கிறார்கள் சிற்பிகள் என்கின்றன ஆவணப் படங்கள். இன்றுவரை அகழியில் தண்ணீர் குறைந்ததில்லை.

    உலக மரபுடைமைத் தலமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இப்போது அகழியும் ஆலயமும் சீராகப் பராமரிக்கப்படுகின்றன. சரி, அங்கோர் வாட் கைவிடப்பட்ட காலத்தில் அகழியை யார் பராமரித்தார்கள்? எப்படி அது தூர்வாரப்பட்டிருக்கும்? தூர்வாராமற் போயிருந்தால் நாளாவட்டத்தில் அகழி தூர்ந்து போயிருக்காதா? அல்லது ஆறுகளைப் போல் தண்ணீரின் இயல்பான ஓட்டத்திலேயே வண்டல்மண் சேராமல் அடித்துச் செல்லப்படுமா? நான் பார்த்தவரை அகழித் தண்ணீர் தேங்கித்தான் நிற்கிறது, ஓடவில்லை. மேற்கு நுழைவாயிலிலும் சரி, கிழக்குப்புற வெளிவாயிலிலும் சரி, கீழே பாலம் போல் அகழி இணைக்கப்படவில்லை. இரண்டு ப வடிவங்களை ஒட்ட வைத்தாற்போல் பிரிந்துதான் இருக்கின்றன. அல்லது கண்ணுக்குத் தெரியாமல் கீழே நீரோட்டத்திற்காக இணைப்புப் பாலங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. எங்கோ உள்ள நதியை ஆலயத்தின் பக்கம் திசைதிருப்பி அதிலிருந்து வற்றாத நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்த பொறியியல் திறனை எவ்வளவு மெச்சினாலும் தகும்.

    ஆலயத்தின் அஸ்திவாரம் உறுதியாக இருப்பதற்கு, அகழியில் நீர் நிறைந்திருப்பது அவசியம் என்று ஓர் ஆய்வாளர் கூறுவதை யூ டியூபில் பார்த்தேன். அதுபற்றிப் படிக்க வேண்டும். மிக எளிமையான கருவிகளை வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய சாதனையைக் கம்போடியர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வளவும் ஓடியது மனத்திற்குள் ஹெலிகாப்டர் பயணத்தின்போது. எங்கள் மூவருக்கும் மூச்சு அடைத்துவிட்டது போலிருந்தது மேலிருந்து பார்க்கும்போது. ஒவ்வொருவரும் அவரவருக்குள் ஆழ்ந்து போனோம். கீழே இறங்கியதும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டபோது அதன் அர்த்தத்தை மனத்தால் விளங்கிக் கொள்ள முடிந்தது. எங்களையடுத்து ஹெலிகாப்டரில் பயணம் செல்லக் காத்திருந்த மகாதேவனும் நவீனும் எப்படி இருந்துச்சு ? எப்படி இருந்துச்சு ? என்று கேட்டபோது வாங்க பார்க்கலாம் என்றார் ராஜூ. வேறு ஒன்றும் சொல்லவில்லை. ஓரிரு வரியில் கண்டதைச் சொல்லிவிட முடியுமென அவருக்குத் தோன்றவில்லை போலும்.

    சென்ற பயணத்திற்கு எதிர்த்திசையில் அமர்ந்து ராஜூ இரண்டாவது பயணம் சென்று வந்தார். ஹெலிகாப்டர் பயணத்தின் நினைவாகச் சடசடவெனப் படங்கள் கிளிக்கிக் கொண்டோம். இறங்கி வந்து காத்திருந்த ஓட்டுநர் ரா-வுடன் அடுத்த பயணம் தொடங்கியது. இன்றைய நிகழ்ச்சி நிரலில், மலைமேல் இருக்கும் புத்தர் கோயில், ஆயிரம் லிங்க ஆறு, அருவிக் குளியல், நதியில் படகுப் பயணம் போய் தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய நன்னீர் ஏரியைப் பார்ப்பது, அப்சரஸ் நடனமணிகளின் ஆடலைக் கண்டு ரசிப்பது எனத் திட்டம் வகுத்திருந்தார் ரா. வேனில் ஏறிக் கொஞ்ச தூரம் போனவுடன் மலையேறத் தொடங்கியது வண்டி. உயரமாகப் போகப் போகக் காற்றில் குளிர் கூடிவந்தது. போகிற வழியில் ஆங்காங்கே கம்போடியக் கிராமங்கள். அறியாமை என்னும் அழகு பொதித்த கிராமிய முகங்கள். ஓரிடத்தில் நிறுத்தி இளநீர் குடித்தோம். ஒரு பெரிய குடும்பம். கடை வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்துக் குடும்ப வண்டி ஓடுகிறது போலும். அக்கடா என்று இருக்கிறார்கள்.

    அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்க்கவரும் அளவுக்கு இங்கே ஆயிரம் லிங்க ஆற்றைப் பார்க்க யாரும் வருவதில்லை. கூட்டம் இல்லாததால் மலையும் சுத்தமாக இருக்கிறது. அதிக நேரமாகவில்லை. புத்தர் கோயிலை அடைந்து விட்டோம். வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை விட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம். கம்போடியக் கைவினைப் பொருட்களும் தின்பண்டங்களும் விற்கும் கடைகளிருந்தன. மேலே என்ன இருக்கும்? அது எவ்வளவு பழமையானது என்ற தகவல் எதுவும் தெரியாது. ஓட்டுநரை நம்பி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்.

    பார்ப்போம்.. மேலே என்ன இருக்கிறது என்று.. – தொடரும்….

    பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
     
    ———————————————————————————————————————————
    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
  • 2016-07-04-04-14-54

    ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்…

    • நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள் . கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.
    • பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.
    • மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும் . அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.
    • சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும் , வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.
    • பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதை காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்
  • 2

    தொடர்ச்சி….
     
    புது இடத்தில் எனக்குத் தூக்கம் வருவது சிரமம். ஆனால், பயணக் களைப்பில் அதெல்லாம் பறந்து போனது. நல்ல தூக்கம். சாப்பிட்டவுடனே படுக்கப் போனதும் ஒரு காரணமாக இருந்திருக்கும். எட்டு மணிக்குத்தான் எல்லாரும் எழுந்தோம். நான், பரணி, ராஜூ மூவரும் ஓர் அறையில் தங்கிக் கொண்டோம். மகாதேவனும் நவீனும் ஓர் அறையில்.  
     
    அறைக்கு நேர் எதிரே, அடக்கமான நீச்சல் குளம். வெளியே எழுந்து வந்து பார்த்தபோது, நல்ல மழை பெய்து துடைத்து விட்டது போல் இருந்தது தோட்டம். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் அழகான தோட்டம் போட்டிருந்தனர். சின்னச் சின்ன வெள்ளைப் பூக்கள். அரளிசெம்பருத்தி, கல்வாழை என வெப்ப மண்டலத்துக்கே உரிய பூக்கள். அறைக்கு வெளியே வராந்தாவில், கம்போடிய பாணி ஓவியங்கள் தொடர் வரிசையில் வரையப்பட்டிருந்தன. எல்லாமே இராமாயண, மகாபாரதக் காட்சிகள். நகல் ஓவியங்களாக இருந்தாலும் நல்ல ஓவியங்கள்.
     
    விடுமுறை என்று வந்துவிட்டாலே அதற்கென ஒரு மனம் கூடிவிடுகிறது. வழக்கமான வேலையைச் செய்யாமல் மாற்றிச் செய்தாலே மனம் புத்துணர்ச்சி கொண்டு விடுகிறது. தங்கும் விடுதியிலேயே காலை உணவுக்கும் வசதி இருந்தது. அது எவ்வளவு பெரிய வசதி என்று இன்னும் இரண்டு நாள் கழித்துத் தெரிந்தது எங்களுக்கு. விடுதிக் கட்டணம் ஐம்பது அமெரிக்க டாலர்தான். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.
     
    இந்தியாவாக இருந்தால் இந்தத் தூய்மைக்கும் விசாலத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் தீட்டி விடுவார்கள். இங்கே தங்கும் அறை கொள்ளை மலிவுக் கட்டணத்தில் கிடைக்கிறது. மலேசியாசிங்கப்பூரில் கூட இவ்வளவு மலிவான கட்டணத்தில், இவ்வளவு தூய்மையான அறை கிடைப்பது சிரமம். காலை உணவுக்கு முன் நான் போட்ட சட்டையைப் பார்த்து பரணியும் ராஜூவும் ஒரே கிண்டல். இப்படி ஒரு சட்டையைப் போட்டா எங்களையெல்லாம் யாரு பாப்பா என்று கேள்வி. இது கிண்டலா பாராட்டா என்று கேட்டால், அதற்கும் ஒரு வியாக்யானம் வைத்திருப்பார்கள் இருவரும். சரி பாராட்டு என்றே வைத்துக் கொள்வோமே ! போத்தீஸில் எடுத்த நாலு சட்டையில் ஒரு சட்டையை அன்று வெள்ளோட்டம் விட்டேன். தீபாவளி விளம்பரத்தில் கூட ஒரு ஆள் அந்தச் சட்டையைப் போட்டிருந்தார். ஏனோ தெரியவில்லை. சில வாரம் கழித்து வந்த விளம்பரத்தில் ஐந்து சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்தச் சட்டையை மட்டும் எடுத்து விட்டார்கள். சரி சட்டையை விடுவோம்.
     
    சாப்பாட்டுக்கு வருவோம். சாப்பாடு சராசரிக்குச் சற்று மேல். பெரிய நட்சத்திர விடுதி அளவுக்கு அதிக வகைகள் இல்லை. ஆனால், அன்பாக கவனிக்கும் பணியாளர்கள் இருந்தனர். கேட்டதை உடனே சூடாகச் செய்து கொடுத்தனர். சாப்பிட்டு இரண்டாவது காஃபி அருந்திப் புறப்பட்டோம். எங்கே போவதுன்னு இன்னமும் முடிவாகலையே !
     
    இன்று அங்கோர் வாட் போக முடியாது. அதற்கு ஒரு முழு நாள் வேண்டும். சரியான தூக்கம் இல்லாமல் அதை முழுமையாக ரசிக்க முடியாது என்பதால் மற்ற இடங்களைப் பார்க்கலாம் என்று முடிவானது. என் வீட்டில் வாடகைக்கு இருக்கும் கார்த்தி சொல்லி அனுப்பியிருந்தார். சார் கம்போடியாவில், ஹெலிகாப்டர் பயணம் இருக்காம். நாங்க பார்க்கலை. நீங்க எப்படியாவது போயிட்டு வாங்க ! என்று. அதனால் அதுபற்றி ஓட்டுநர்வழிகாட்டி ரா-வைக் கேட்டோம். பக்கத்தில்தான் அலுவலகம், சென்று விசாரிக்கலாம் என்றார். எட்றா வண்டியை !
     
    உண்மையிலேயே ஹெலிகாப்டர் நிர்வாக அலுவலகம் பக்கத்தில்தான் இருந்தது. நாங்கள்தான் முதல் போணி என்று நினைக்கிறேன். ஒரு ஆளுக்கு 90 அமெரிக்க டாலர். எட்டு நிமிடப் பயணம். அங்கோர் வாட்டை  வலப்பக்கமாகச் சென்று பார்க்கலாம். பருந்துப் பார்வையில் சுற்றியுள்ள அகழியோடு சேர்த்து ஆலயத்தைப் பார்ப்பது, ஒரு தனி அனுபவம். விமானி தவிர, ஒரு பயணத்தில் குறைந்தது மூவராவது செல்ல வேண்டும். அதற்குக் குறைந்து வண்டி புறப்படாது. நாங்களோ ஐந்து பேர்.. ஒரு தடவைக்கு மூன்று பேர் என்றாலும் இரண்டாவது தடவைக்கு ஒரு ஆள் குறைந்தது. என்ன செய்யலாம் ?
     
    ராஜூ நான் ரெண்டு வாட்டி பறக்கிறேன் என்று முடிவெடுத்தார். உலங்கு வானூர்திப் பயணம் உறுதியானது. (அதுதாங்க ஹெலிகாப்டருக்குத் தமிழ்ப் பதம்..) பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு நேரே சியாம் ரியெப் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தோம். இது எனக்கு இரண்டாவது ஹெலிகாப்டர் பயணம். 1984-ல் என் அப்பா தஞ்சாவூரில் வருவாய்க் கோட்டாட்சியராகப் (RDO) பணியாற்றியபோது தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவுப் பொட்டலம் விநியோகிப்பதற்காக இராணுவத்தில் இருந்து ஹெலிகாப்டர் வந்தது. அதில் போய்ரொட்டி, புளிசாதப் பொட்டலங்களைப் போட்டு வந்தோம். அது அரை மணி நேரப் பயணம். பதின்ம வயதில் அந்தப் பயணத்தை முழுமையாக அனுபவித்தேனா தெரியவில்லை. ஆகவே, இம்முறை தவற விடக்கூடாது. சும்மா அசத்திரணும் என்ற முடிவோடு போனேன்.
     
    நிக்கான் படக்கருவியைத் தொட்டுத் தடவி, மின்கல நிலையைச் சோதித்து உறுதிப்படுத்தி நாலு படமும் எடுத்துப் பார்த்து விட்டேன். விமான நிலையக் கம்பி வேலிக்கு வெளியே வாகனத்தை நிறுத்திக் காத்திருந்தோம். சிவப்பு நிற ஹெலிகாப்டர் தொலைவில் ஒரு தட்டான்பூச்சி மாதிரித் தெரிந்தது.  டப டப டப டப என்ற சத்தத்துடன் ஒய்யாரமாக வந்து இறங்கி நின்றது. முதல் பயணத்தில், நான், பரணி, ராஜூ மூவரும் ஏறிக் கொண்டோம். அதற்கு நடக்கும்போதே படம் எடுத்துக் கொண்டோம். உள்ளே வெள்ளைக்கார விமானி இருந்தார். சிறுவயது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இங்கே வந்து இதை ஓட்ட வேண்டுமென்று இவருக்கு எம்பெருமான் விதித்திருக்கிறார். நல்ல நட்பான மனிதர். பேச்சில் உண்மையான சிநேகம் தெரிந்தது. 
     
    வலப்பக்க சன்னல் ஓரத்தில் ராஜூ. இடப்பக்க சன்னலோரம் எனக்கு. எனக்கு எதிரே, விமானிக்கு இணையாக உள்ள இருக்கையில் பரணி. உள்ளே உட்கார்ந்து காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டோம். இல்லாவிட்டால்,ஹெலிகாப்டர் புறப்பட்டு விட்டால், அது போடும் சத்தத்தில், விமானியின் உத்தரவும் விளக்கமும் எங்களுக்குக் கேட்காது. அது வழியாகத்தான் தொடர்பு சாத்தியம்.
     
    உட்கார்ந்து இருக்கை வார்களை மாட்டிக் கொண்டதுமே, ஜிவ்வென்று மேலே புறப்பட்டது ஹெலிகாப்டர். ரங்க ராட்டினம் சுற்றும்போது, அடிவயிற்றில் குபீரென்று ஒரு அசைவு வருமே ! அப்படி வருமென்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. சாதாரணமாகத்தான் இருந்தது. விமான ஓடுதளத்தில் சின்னச் சின்ன இலகு ரக விமானங்கள் சில நின்று கொண்டிருந்தன. சட்டென வளைந்து திரும்பியதும், தொலைவில், அங்கோர் வாட் ஆலயத்தைச் சுற்றியுள்ள அகழியின் நீரில் சூரியன் பிரதிபலிப்பது தெரிந்தது. அங்கோர் வாட்டை நெருங்கும் முன், மலைக்கு நடுவே இருந்த இன்னோர் ஆலயத்தைக் காண்பித்தார் விமானி. தெளிவாகத் தெரியவில்லை என்றபோதும் ஒரு பாசிபடர்ந்த கற்குவியல் தெரிந்தது. அங்கோர் வாட்டும் அப்படித்தான் இருந்தது.    
     
     
    முந்திய இரவில் மழை பெய்திருந்தது எங்கள் பாக்கியம். எல்லா இடங்களும், குளித்து விட்டு வந்து அம்மணமாய் நிற்கும் குழந்தைபோல் தெய்வீக அழகுடன் இருந்தன. அங்கோர் வாட்டைச் சுற்றிப் பெரிய அகழி. அதுவே ஒரு பிரம்மாண்டம். ஒன்றரை கிலோமீட்டருக்கு 1 புள்ளி 3 கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட அகழி. அகலம் 190-மீட்டராம். மேற்குப் பார்த்த ஆலயம் அங்கோர் வாட். அதன் தென் பகுதி அகழிக்கு மேலே சற்றுத் தள்ளிப் பறக்கிறது ஹெலிகாப்டர். ஆலயத்துக்கு நேர் மேலேயோ குறுக்கேயோ பறக்க அனுமதியில்லை. ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்தால், ஆலயம் சேதமுற்றுவிடும் என்பதால், நேர்மேலே பறக்க அனுமதியில்லையாம். சரிதான். தேவையான நிபந்தனைதான் என்று நினைத்துக் கொண்டேன்.
     
    படம் எடுக்கும் மும்முரத்தில் இயற்கையின் அழகைத் தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். சில படங்கள் எடுத்து விட்டுப் படக் கருவியை மூடி விட்டேன். சூரியனின் பொற் கிரணங்கள் அகழியில் பட்டுப் பிரதிபலிக்கையில், அதன் நடுவே ஆலயத்தைப் பார்த்தபோது சொல்லின்மை கைகூடியது. இதைக் கட்டிய மன்னனுக்குக்கூட கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். தங்க ஜரிகைக்கு நடுவே மரகதக் கற்களைக் குவித்துப் போட்ட மாதிரி எனக்குள் ஓர் உணர்வு. ஆலயத்தின் முகடுகள் ஏதோ கனவு லோகத்தில் கட்டப்பட்ட கட்டங்களைப் போல் தெரிந்தன. இந்த கட்டட பாணி நான் இதுவரை என் வாழ்நாளில் அதிகம் பார்த்திராத முற்றிலும் புதிய பாணி. தென்னிந்திய திராவிடக் கட்டடக் கலைக்கும் இதற்கும் அதிகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரிசாவிலும் அதன் பக்கத்து வட்டாரங்களிலும் உள்ள வாழைப் பூ போன்ற வடிவமுள்ள கோபுரங்களை ஒத்திருந்தன அங்கோர் வாட் ஆலய முகடுகள்.
     
    அகழிக்குத் தண்ணீர் வழங்கும் நீர்ப் பாதை, தொப்பூழ் கொடி போலத் தெரிந்தது மேலிருந்து பார்க்கையில். ப வடிவ சூலாயுதத்தை மேலிருந்து பார்ப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் திகட்டத் திகட்டப் பசுமை. தண்ணீர். மரங்கள். நல்லவேளை. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தோமே என்று நினைத்துக் கொண்டோம். கார்த்திக்கு நன்றி. இல்லாவிட்டால் இப்படி ஒரு பயணம் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். போன சுருக்கிலேயே ஹெலிகாப்டர் வளைந்து திரும்பி, விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. ஒன்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஏதோ ஒரு கனவுக்குள் புகுந்து வெளிவந்தது போல் உணர்ந்தேன்.
     
     
    ஆச்சு. என் ஆயுளில் நான் காண விரும்பிய இடங்களில் இரண்டில்  ஒன்றை,  எளிதில் பார்க்க முடியாத கோணத்தில் பார்த்து விட்டேன். நாளைஇதை அணு அணுவாகப் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும். அடுத்த கனவான எகிப்தியப் பிரமிடுகளை எப்போது காண்பேன் ? எப்போது அதுபற்றி இப்படி ஒரு கட்டுரை எழுதுவேன் 
     
    பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
     
    ———————————————————————————————————————————
    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
  • 2

    தொடர்ச்சி….
     
    புது இடத்தில் எனக்குத் தூக்கம் வருவது சிரமம். ஆனால், பயணக் களைப்பில் அதெல்லாம் பறந்து போனது. நல்ல தூக்கம். சாப்பிட்டவுடனே படுக்கப் போனதும் ஒரு காரணமாக இருந்திருக்கும். எட்டு மணிக்குத்தான் எல்லாரும் எழுந்தோம். நான், பரணி, ராஜூ மூவரும் ஓர் அறையில் தங்கிக் கொண்டோம். மகாதேவனும் நவீனும் ஓர் அறையில்.  
     
    அறைக்கு நேர் எதிரே, அடக்கமான நீச்சல் குளம். வெளியே எழுந்து வந்து பார்த்தபோது, நல்ல மழை பெய்து துடைத்து விட்டது போல் இருந்தது தோட்டம். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் அழகான தோட்டம் போட்டிருந்தனர். சின்னச் சின்ன வெள்ளைப் பூக்கள். அரளிசெம்பருத்தி, கல்வாழை என வெப்ப மண்டலத்துக்கே உரிய பூக்கள். அறைக்கு வெளியே வராந்தாவில், கம்போடிய பாணி ஓவியங்கள் தொடர் வரிசையில் வரையப்பட்டிருந்தன. எல்லாமே இராமாயண, மகாபாரதக் காட்சிகள். நகல் ஓவியங்களாக இருந்தாலும் நல்ல ஓவியங்கள்.
     
    விடுமுறை என்று வந்துவிட்டாலே அதற்கென ஒரு மனம் கூடிவிடுகிறது. வழக்கமான வேலையைச் செய்யாமல் மாற்றிச் செய்தாலே மனம் புத்துணர்ச்சி கொண்டு விடுகிறது. தங்கும் விடுதியிலேயே காலை உணவுக்கும் வசதி இருந்தது. அது எவ்வளவு பெரிய வசதி என்று இன்னும் இரண்டு நாள் கழித்துத் தெரிந்தது எங்களுக்கு. விடுதிக் கட்டணம் ஐம்பது அமெரிக்க டாலர்தான். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.
     
    இந்தியாவாக இருந்தால் இந்தத் தூய்மைக்கும் விசாலத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் தீட்டி விடுவார்கள். இங்கே தங்கும் அறை கொள்ளை மலிவுக் கட்டணத்தில் கிடைக்கிறது. மலேசியாசிங்கப்பூரில் கூட இவ்வளவு மலிவான கட்டணத்தில், இவ்வளவு தூய்மையான அறை கிடைப்பது சிரமம். காலை உணவுக்கு முன் நான் போட்ட சட்டையைப் பார்த்து பரணியும் ராஜூவும் ஒரே கிண்டல். இப்படி ஒரு சட்டையைப் போட்டா எங்களையெல்லாம் யாரு பாப்பா என்று கேள்வி. இது கிண்டலா பாராட்டா என்று கேட்டால், அதற்கும் ஒரு வியாக்யானம் வைத்திருப்பார்கள் இருவரும். சரி பாராட்டு என்றே வைத்துக் கொள்வோமே ! போத்தீஸில் எடுத்த நாலு சட்டையில் ஒரு சட்டையை அன்று வெள்ளோட்டம் விட்டேன். தீபாவளி விளம்பரத்தில் கூட ஒரு ஆள் அந்தச் சட்டையைப் போட்டிருந்தார். ஏனோ தெரியவில்லை. சில வாரம் கழித்து வந்த விளம்பரத்தில் ஐந்து சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்தச் சட்டையை மட்டும் எடுத்து விட்டார்கள். சரி சட்டையை விடுவோம்.
     
    சாப்பாட்டுக்கு வருவோம். சாப்பாடு சராசரிக்குச் சற்று மேல். பெரிய நட்சத்திர விடுதி அளவுக்கு அதிக வகைகள் இல்லை. ஆனால், அன்பாக கவனிக்கும் பணியாளர்கள் இருந்தனர். கேட்டதை உடனே சூடாகச் செய்து கொடுத்தனர். சாப்பிட்டு இரண்டாவது காஃபி அருந்திப் புறப்பட்டோம். எங்கே போவதுன்னு இன்னமும் முடிவாகலையே !
     
    இன்று அங்கோர் வாட் போக முடியாது. அதற்கு ஒரு முழு நாள் வேண்டும். சரியான தூக்கம் இல்லாமல் அதை முழுமையாக ரசிக்க முடியாது என்பதால் மற்ற இடங்களைப் பார்க்கலாம் என்று முடிவானது. என் வீட்டில் வாடகைக்கு இருக்கும் கார்த்தி சொல்லி அனுப்பியிருந்தார். சார் கம்போடியாவில், ஹெலிகாப்டர் பயணம் இருக்காம். நாங்க பார்க்கலை. நீங்க எப்படியாவது போயிட்டு வாங்க ! என்று. அதனால் அதுபற்றி ஓட்டுநர்வழிகாட்டி ரா-வைக் கேட்டோம். பக்கத்தில்தான் அலுவலகம், சென்று விசாரிக்கலாம் என்றார். எட்றா வண்டியை !
     
    உண்மையிலேயே ஹெலிகாப்டர் நிர்வாக அலுவலகம் பக்கத்தில்தான் இருந்தது. நாங்கள்தான் முதல் போணி என்று நினைக்கிறேன். ஒரு ஆளுக்கு 90 அமெரிக்க டாலர். எட்டு நிமிடப் பயணம். அங்கோர் வாட்டை  வலப்பக்கமாகச் சென்று பார்க்கலாம். பருந்துப் பார்வையில் சுற்றியுள்ள அகழியோடு சேர்த்து ஆலயத்தைப் பார்ப்பது, ஒரு தனி அனுபவம். விமானி தவிர, ஒரு பயணத்தில் குறைந்தது மூவராவது செல்ல வேண்டும். அதற்குக் குறைந்து வண்டி புறப்படாது. நாங்களோ ஐந்து பேர்.. ஒரு தடவைக்கு மூன்று பேர் என்றாலும் இரண்டாவது தடவைக்கு ஒரு ஆள் குறைந்தது. என்ன செய்யலாம் ?
     
    ராஜூ நான் ரெண்டு வாட்டி பறக்கிறேன் என்று முடிவெடுத்தார். உலங்கு வானூர்திப் பயணம் உறுதியானது. (அதுதாங்க ஹெலிகாப்டருக்குத் தமிழ்ப் பதம்..) பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு நேரே சியாம் ரியெப் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தோம். இது எனக்கு இரண்டாவது ஹெலிகாப்டர் பயணம். 1984-ல் என் அப்பா தஞ்சாவூரில் வருவாய்க் கோட்டாட்சியராகப் (RDO) பணியாற்றியபோது தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவுப் பொட்டலம் விநியோகிப்பதற்காக இராணுவத்தில் இருந்து ஹெலிகாப்டர் வந்தது. அதில் போய்ரொட்டி, புளிசாதப் பொட்டலங்களைப் போட்டு வந்தோம். அது அரை மணி நேரப் பயணம். பதின்ம வயதில் அந்தப் பயணத்தை முழுமையாக அனுபவித்தேனா தெரியவில்லை. ஆகவே, இம்முறை தவற விடக்கூடாது. சும்மா அசத்திரணும் என்ற முடிவோடு போனேன்.
     
    நிக்கான் படக்கருவியைத் தொட்டுத் தடவி, மின்கல நிலையைச் சோதித்து உறுதிப்படுத்தி நாலு படமும் எடுத்துப் பார்த்து விட்டேன். விமான நிலையக் கம்பி வேலிக்கு வெளியே வாகனத்தை நிறுத்திக் காத்திருந்தோம். சிவப்பு நிற ஹெலிகாப்டர் தொலைவில் ஒரு தட்டான்பூச்சி மாதிரித் தெரிந்தது.  டப டப டப டப என்ற சத்தத்துடன் ஒய்யாரமாக வந்து இறங்கி நின்றது. முதல் பயணத்தில், நான், பரணி, ராஜூ மூவரும் ஏறிக் கொண்டோம். அதற்கு நடக்கும்போதே படம் எடுத்துக் கொண்டோம். உள்ளே வெள்ளைக்கார விமானி இருந்தார். சிறுவயது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இங்கே வந்து இதை ஓட்ட வேண்டுமென்று இவருக்கு எம்பெருமான் விதித்திருக்கிறார். நல்ல நட்பான மனிதர். பேச்சில் உண்மையான சிநேகம் தெரிந்தது. 
     
    வலப்பக்க சன்னல் ஓரத்தில் ராஜூ. இடப்பக்க சன்னலோரம் எனக்கு. எனக்கு எதிரே, விமானிக்கு இணையாக உள்ள இருக்கையில் பரணி. உள்ளே உட்கார்ந்து காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டோம். இல்லாவிட்டால்,ஹெலிகாப்டர் புறப்பட்டு விட்டால், அது போடும் சத்தத்தில், விமானியின் உத்தரவும் விளக்கமும் எங்களுக்குக் கேட்காது. அது வழியாகத்தான் தொடர்பு சாத்தியம்.
     
    உட்கார்ந்து இருக்கை வார்களை மாட்டிக் கொண்டதுமே, ஜிவ்வென்று மேலே புறப்பட்டது ஹெலிகாப்டர். ரங்க ராட்டினம் சுற்றும்போது, அடிவயிற்றில் குபீரென்று ஒரு அசைவு வருமே ! அப்படி வருமென்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. சாதாரணமாகத்தான் இருந்தது. விமான ஓடுதளத்தில் சின்னச் சின்ன இலகு ரக விமானங்கள் சில நின்று கொண்டிருந்தன. சட்டென வளைந்து திரும்பியதும், தொலைவில், அங்கோர் வாட் ஆலயத்தைச் சுற்றியுள்ள அகழியின் நீரில் சூரியன் பிரதிபலிப்பது தெரிந்தது. அங்கோர் வாட்டை நெருங்கும் முன், மலைக்கு நடுவே இருந்த இன்னோர் ஆலயத்தைக் காண்பித்தார் விமானி. தெளிவாகத் தெரியவில்லை என்றபோதும் ஒரு பாசிபடர்ந்த கற்குவியல் தெரிந்தது. அங்கோர் வாட்டும் அப்படித்தான் இருந்தது.    
     
     
    முந்திய இரவில் மழை பெய்திருந்தது எங்கள் பாக்கியம். எல்லா இடங்களும், குளித்து விட்டு வந்து அம்மணமாய் நிற்கும் குழந்தைபோல் தெய்வீக அழகுடன் இருந்தன. அங்கோர் வாட்டைச் சுற்றிப் பெரிய அகழி. அதுவே ஒரு பிரம்மாண்டம். ஒன்றரை கிலோமீட்டருக்கு 1 புள்ளி 3 கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட அகழி. அகலம் 190-மீட்டராம். மேற்குப் பார்த்த ஆலயம் அங்கோர் வாட். அதன் தென் பகுதி அகழிக்கு மேலே சற்றுத் தள்ளிப் பறக்கிறது ஹெலிகாப்டர். ஆலயத்துக்கு நேர் மேலேயோ குறுக்கேயோ பறக்க அனுமதியில்லை. ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்தால், ஆலயம் சேதமுற்றுவிடும் என்பதால், நேர்மேலே பறக்க அனுமதியில்லையாம். சரிதான். தேவையான நிபந்தனைதான் என்று நினைத்துக் கொண்டேன்.
     
    படம் எடுக்கும் மும்முரத்தில் இயற்கையின் அழகைத் தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். சில படங்கள் எடுத்து விட்டுப் படக் கருவியை மூடி விட்டேன். சூரியனின் பொற் கிரணங்கள் அகழியில் பட்டுப் பிரதிபலிக்கையில், அதன் நடுவே ஆலயத்தைப் பார்த்தபோது சொல்லின்மை கைகூடியது. இதைக் கட்டிய மன்னனுக்குக்கூட கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். தங்க ஜரிகைக்கு நடுவே மரகதக் கற்களைக் குவித்துப் போட்ட மாதிரி எனக்குள் ஓர் உணர்வு. ஆலயத்தின் முகடுகள் ஏதோ கனவு லோகத்தில் கட்டப்பட்ட கட்டங்களைப் போல் தெரிந்தன. இந்த கட்டட பாணி நான் இதுவரை என் வாழ்நாளில் அதிகம் பார்த்திராத முற்றிலும் புதிய பாணி. தென்னிந்திய திராவிடக் கட்டடக் கலைக்கும் இதற்கும் அதிகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரிசாவிலும் அதன் பக்கத்து வட்டாரங்களிலும் உள்ள வாழைப் பூ போன்ற வடிவமுள்ள கோபுரங்களை ஒத்திருந்தன அங்கோர் வாட் ஆலய முகடுகள்.
     
    அகழிக்குத் தண்ணீர் வழங்கும் நீர்ப் பாதை, தொப்பூழ் கொடி போலத் தெரிந்தது மேலிருந்து பார்க்கையில். ப வடிவ சூலாயுதத்தை மேலிருந்து பார்ப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் திகட்டத் திகட்டப் பசுமை. தண்ணீர். மரங்கள். நல்லவேளை. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தோமே என்று நினைத்துக் கொண்டோம். கார்த்திக்கு நன்றி. இல்லாவிட்டால் இப்படி ஒரு பயணம் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். போன சுருக்கிலேயே ஹெலிகாப்டர் வளைந்து திரும்பி, விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. ஒன்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஏதோ ஒரு கனவுக்குள் புகுந்து வெளிவந்தது போல் உணர்ந்தேன்.
     
     
    ஆச்சு. என் ஆயுளில் நான் காண விரும்பிய இடங்களில் இரண்டில்  ஒன்றை,  எளிதில் பார்க்க முடியாத கோணத்தில் பார்த்து விட்டேன். நாளைஇதை அணு அணுவாகப் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும். அடுத்த கனவான எகிப்தியப் பிரமிடுகளை எப்போது காண்பேன் ? எப்போது அதுபற்றி இப்படி ஒரு கட்டுரை எழுதுவேன் 
     
    பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
     
    ———————————————————————————————————————————
    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
  • 2016-07-03-06-49-28

    அரச மரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அரச மரத்தின் அடிப்பக்கம் பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்பர். இம்மரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. எனவே இந்த மரத்தை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டுவதும், அதன்மேல் ஏறுவதும், கிளைகளை ஒடிப்பதும் தகாத செயல்கள் ஆகும். அரச மரத்திற்கு “அஸ்வத்தா’ என்ற பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால்,”வழிபடுபவர்களின் பாவத்தை மறு நாளே தீர்ப்பது’ என்று பொருள்.

    இந்த அரச மரத்தை திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று விரதம் கடைப்பிடித்து வழிபட்டால் வாழ்வில் வசந்த ராகம் பாடும்; வளமான வாழ்வு கிட்டும். காலை வேளையில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நூற்றியெட்டு முறை வலம்வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். மழலைச்செல்வம் கேட்க அரசமர வழிபாடு போல் வேறு எதுவும் இல்லை.

    அரசமர நிழல்படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் நீராடுவது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.

    சோமவார அமாவாசை என்றாலே நம்முன் அரசமரம் தோன்றும். இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும். பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி பூஜை செய்து வைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணை கொடுக்க வேண்டும். இதுபோல் சோமவார அமாவாசை விரதம் மூன்றாண்டுகளாவது செய்ய கைமேல் பலன் கிடைக்கும். பித்ருக்களை வழிபட்டு அவர்கள் ஆசி பெற சோமவார அமாவாசை மிகச்சிறந்த ஒரு நாள். வடநாட்டில் அரசமரத்தை வெள்ளை நூலினல் 108 சுற்று சுற்றி வருவார்கள்

    “ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்’ என்று பத்ம புராணம்சொல்கிறது. அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வ வளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்தி உண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார். அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும். இதனால் இது தோஷ நிவர்த்தி மரமாகவும் கருதப்படுகிறது.

    அரச மரத்தை காலை வேளையில் ஏழு மணிக்கு முன் வலம் வருவது சிறப்பு. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மரத்தைத் தொடக்கூடாது.சனிக்கிழமையன்று அரச மரத்தடியில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

    அரச மரத்தைச் சுற்றும்போது கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வந்தால் கூடுதல் பலன் கிட்டும்.

    “மூலதோ ப்ரும்மரூபாய

    மத்யதோ விஷ்ணு ரூபிணே

    அக்ரத் சிவரூபாய

    வ்ருக்ஷ ராஜாயதே நம!’

    இம்மரத்திலிருந்து 30 மீட்டருக்குள் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில் மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்பதிலும் ரத்த ஓட்டத்தைச்சீர்செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. புத்தருக்கு ஞானம்பிறந்த போதி மரம், அரசமரம்தான்.

    விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப்பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு, அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள், கிருமிகள் அழிந்துவிடும்.

    இப்படி ஆயிரக்கணக்கான பலன்களை அள்ளித்தரும் அரச மரத்தை உரிய முறையில் தொடர்ந்து வழிபட்டு வந்தால், குழந்தைச் செல்வம் உள்ளிட்ட பல பாக்கியங்களையும் பெற்று நீடுழி வாழ்வர்.

  • arasamara-palangal

    அரச மரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அரச மரத்தின் அடிப்பக்கம் பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்பர். இம்மரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. எனவே இந்த மரத்தை எக்காரணத்தைக் கொண்டும் வெட்டுவதும், அதன்மேல் ஏறுவதும், கிளைகளை ஒடிப்பதும் தகாத செயல்கள் ஆகும். அரச மரத்திற்கு “அஸ்வத்தா’ என்ற பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால்,”வழிபடுபவர்களின் பாவத்தை மறு நாளே தீர்ப்பது’ என்று பொருள்.

    இந்த அரச மரத்தை திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று விரதம் கடைப்பிடித்து வழிபட்டால் வாழ்வில் வசந்த ராகம் பாடும்; வளமான வாழ்வு கிட்டும். காலை வேளையில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நூற்றியெட்டு முறை வலம்வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். மழலைச்செல்வம் கேட்க அரசமர வழிபாடு போல் வேறு எதுவும் இல்லை.

    அரசமர நிழல்படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் நீராடுவது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.

    சோமவார அமாவாசை என்றாலே நம்முன் அரசமரம் தோன்றும். இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும். பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டி பூஜை செய்து வைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணை கொடுக்க வேண்டும். இதுபோல் சோமவார அமாவாசை விரதம் மூன்றாண்டுகளாவது செய்ய கைமேல் பலன் கிடைக்கும். பித்ருக்களை வழிபட்டு அவர்கள் ஆசி பெற சோமவார அமாவாசை மிகச்சிறந்த ஒரு நாள். வடநாட்டில் அரசமரத்தை வெள்ளை நூலினல் 108 சுற்று சுற்றி வருவார்கள்

    “ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்’ என்று பத்ம புராணம்சொல்கிறது. அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வ வளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்தி உண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார். அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும். இதனால் இது தோஷ நிவர்த்தி மரமாகவும் கருதப்படுகிறது.

    அரச மரத்தை காலை வேளையில் ஏழு மணிக்கு முன் வலம் வருவது சிறப்பு. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மரத்தைத் தொடக்கூடாது.சனிக்கிழமையன்று அரச மரத்தடியில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

    அரச மரத்தைச் சுற்றும்போது கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வந்தால் கூடுதல் பலன் கிட்டும்.

    “மூலதோ ப்ரும்மரூபாய

    மத்யதோ விஷ்ணு ரூபிணே

    அக்ரத் சிவரூபாய

    வ்ருக்ஷ ராஜாயதே நம!’

    இம்மரத்திலிருந்து 30 மீட்டருக்குள் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில் மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்பதிலும் ரத்த ஓட்டத்தைச்சீர்செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. புத்தருக்கு ஞானம்பிறந்த போதி மரம், அரசமரம்தான்.

    விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப்பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு, அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள், கிருமிகள் அழிந்துவிடும்.

    இப்படி ஆயிரக்கணக்கான பலன்களை அள்ளித்தரும் அரச மரத்தை உரிய முறையில் தொடர்ந்து வழிபட்டு வந்தால், குழந்தைச் செல்வம் உள்ளிட்ட பல பாக்கியங்களையும் பெற்று நீடுழி வாழ்வர்.

  • 2016-07-02-02-53-11

    சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். 

    இந்த பிரதோஷம் எப்போது எப்படி ஏற்பட்டது என்பதற்கு ஒரு புராண கதை இருக்கிறது. அது இதுதான்..

    பன்னெடுங் காலத்திற்கு முன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஒரு அதிபயங்கர போர் மூண்டது. இருபுறத்திலும் ஏராளமானோர் மடிந்தனர். எனவே தேவர்கள், பிரமனை அடைந்து சாகாமல் இருக்க என்ன வழி என ஆராய்ந்தனர். அவர், தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார்.

    பாற்கடலைக் கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும், அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலை கடைய முடியாது. அவர்களை சேர்த்துக் கொண்டால், அசுரர்களுக்கும் பங்குதர வேண்டும். வேறு வழியில்லாததால், தேவர்கள் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர்.

    தந்திரசாலியான, விஷ்ணுவின் ஏற்பாட்டின்படி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், ஆயிரம் நாக்குடைய வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு, வால்பக்கம் தேவர்களும் தலைப்புறத்தை அசுரர்களும் பிடித்துக் கடைய ஆரம்பித்தனர்.

    இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர். இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அவன் தன்னையும், அறியாமல் வலி பொறுக்காமல், ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான். அச்சமயத்தில், கடலில் இருந்து விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ‘காளம்’ என்று நீல விஷமும், பாற்கடலில் பிறந்த ‘ஆலம்’ என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.


    தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக தேவர்கள் தறி கெட்டு, ஓடி ஒளிந்தனர். எல்லோரும் பயந்து போய், ஈசனிடம் முறையிட கயிலங்கிரி சென்றனர்.

    நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய ‘சுந்தரர்’ என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி “அவ்விஷத்தை இவ்விடம் கொண்டுவா!” என்று பணிந்தார்.

    சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.

    எல்லோரும் அதிசயிக்க, சிவபெருமான் ஒரு கண நேரம் ‘விஷாபகரணமூர்த்தி’ என்னும் ரௌத்ர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள். ‘கண்டத்தில்’ விஷத்தை நிறுத்தியதால் ‘நீலகண்டர்’ ஆனார். விஷம் கொண்டுவந்த ‘சுந்தரர்’ ‘ஆலால சுந்தரர்’ என்று அழைக்கப்பட்டார்.

    கயிலையில் ஈசன் விஷம் உண்ட பிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரை போற்றித் துதி பாடியவாறு இருந்தனார்.

    ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து ‘சந்தியா நிருத்தம்’ எனும் நடனம் ஆடினார்.

    இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் ‘ஹரஹர’ என்று துதித்தனர்.

    அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்த்தி வருகிறார். இவ் கூத்தில், சரஸ்வதி வீணையையும், பிரமன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும் பூதங்கணங்கள் எண்ணற்ற இசைக்கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.

    பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள். 

  • 2016-07-02-09-50-36

    இந்த தலைப்பை கண்டவுடன், நம் மனதுக்கு வருபவர்கள் ஹனுமாரும், சீதையும் தான். அல்லது சொல்பவர்களுக்கு சொந்தமாக இருக்கலாம் என்று நமக்குத் தோன்றும், ஆனால் உண்மையில் அதற்கு சொந்தக்காரரை நாம் சந்திப்போமா, வாருங்கள்.
     
    இராமாயணம் எழுதி முடித்து சில காலம் கழித்து மனிதர்கள்,தேவர்கள்,ரிஷிகளுக்கிடையே ஒரு வாக்குவாதம் எழுந்தது. இராமாயணமும் அதில் உள்ள ஒரு லட்சம் ராம நாமமும் யாருடையது என்று. மனிதர்கள் ராமாவதாரமே மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கத் தான் ஆதலால், இராமாயணம் மனிதர்களுக்கே சொந்தம் என்றனர். தேவர்களோ உலகில் அரிதான விஷயங்கள் அனைத்தும் தேவர்களுக்கே உரியது என்று குரல் எழுப்பினர். ரிஷிகளோ ராமாவதாரத்தின் போது வனவாசத்தில் ராமர் தங்கியது ரிஷிகளுடன்தான், ஆதலால் இராமாயணமும் அதில்  உள்ள ஒரு லட்சம் ராம  நாமமும் தங்களுக்கே சொந்தம் என வாதிட்டனர்.
     
    இந்த வழக்கு நாரதரிடம் சென்றது. அவரோ இதற்கு தக்க நீதிபதி உலகின் தந்தையான சிவபெருமானே, எனவே அவரிடமே செல்வோம் என்றார். வழக்கை விசாரித்த நீலகண்டரோ, ஒரு லட்சம் ராம நாமத்தை சரிவிகிதமாக பிரித்தார். அதன்படி 30000,30000,30000 ஆக பிரித்தார்.
    மிச்சம் இருந்த 10000த்தை 3000,3000,3000, ஆக பிரித்தார். மீதி இருந்த 1000த்தை 300,300,300 ஆகப் பிரித்தார். மீதமிருந்த 100ஐ 30,30,30 ஆக பிரித்தார். மிச்சமிருந்த 10ஐ 3,3,3 ஆக பிரித்தார். 
     
    இப்போது எஞ்சியிருந்த ராமா என்ற‌ ஒற்றை வார்த்தையை, இந்த வழக்கிற்கு நீதிபதியாக இருந்த தனக்கு தருமாறு கேட்டார். அதற்கு
    அனைவரும்  சம்மதித்தனர். அதன்படி ராம என்ற சொல்லுடன் ஒரு லட்சம் ராம நாமமும் சிவனையே சென்றடைந்தது. எனவே ராம நாமத்தை கூறும்போது அதற்கு சொந்தமான சிவனின் அருளையும் நாம் பெருகிறோம். அரியும் சிவனும் ஒன்று என்று உணர்த்திய அழகிய நிகழ்வு இது.
     
    – ரம்யா சுரேஷ்
    —————————————————————————–
     
    ரம்யா சுரேஷ் – சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள – sangemahathi@gmail.com  
  • 2016-07-01-13-58-04

    மகாப்பெரியவா என்று மக்களால் பெரிதும் போற்றப்படும் காஞ்சி மகானைப் பற்றிய செய்திகள், சம்பவங்கள் படிக்க படிக்கத் திகட்டாதவை. மகாப்பெரியவா பற்றி  ஏராளமான முத்துக்கள், நவரத்தினங்கள் இணையத்தில் பரவியுள்ளன. அப்படிப்பட்ட நவரத்ன கட்டுரை ஒன்றை சக்திஆன்லைன் வாசகர்களுக்காக சமர்பிக்கின்றோம். முகமறியாத மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றியுடன்.

    பாரத கலாச்சாரத்தைப் போற்றி வணங்கிய ஏராளமானவர்களில் குலபதி கே.எம்.முன்ஷி ஒருவர். போற்றியதோடு நில்லாமல் அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அப்படியே தர வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவராய் அவர் இருந்தார். ‘பாரதீய வித்யா பவன்‘ என்ற நிறுவனத்தை நிறுவியதோடு பாரம்பரியச் செல்வ ரகசியத்தை அனைவருக்கும் அள்ளித் தர ‘பவன்ஸ் ஜர்னல்‘ என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். அந்த பவன்ஸ் ஜர்னலுக்கு  காஞ்சி பரமாச்சார்யாள் (ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) அருளிய ‘வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?‘ என்ற அற்புதமான கட்டுரையை வெளியிடும் பெரும்பேறு  கிடைத்தது. பொதுவாக, பெரும் அருளாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதுவும் காஞ்சிப் பெரியவர், லோக க்ஷேமம் எனப்படும் உலக நன்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதைப் பற்றி மட்டுமே பேசுபவர். அவரே மிகுந்த வினயத்துடன் மிக அரிதான ஒரு கட்டுரையை அருளி, அதில் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை இறுதி வாக்கியத்தில் கூறியிருப்பது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

    மரநாயும் பொன்னுச்சாமி எடுத்த தங்க வளையலும்

    அவரது மூன்றாம் வயதிலோ அல்லது நான்காம் வயதிலோ நடந்த இரு சம்பவங்களுடன் கட்டுரை ஆரம்பிக்கிறது. மரநாய் ஒன்று, வெல்லம் இருந்த ஜாடியில் தலையை விட்டுக் கொண்டு அதை மீண்டும் எடுக்க முடியாமல் தவித்துக் கூக்குரலிட்டதைக் கேட்டுத் திருடன்தான் வந்து விட்டானோ என்று எண்ணிய அண்டை அயலார் கம்பு தடிகளுடன் வர, நாய் பிடிபட்டது. அதை ஒரு கம்பத்தில் கட்டி ஒருவாறாக ஜாடியைப் பிரித்தனர். பேராசை தந்த பெருங்கேட்டை ஆச்சார்யாள் விளங்கிக் கொண்டாராம்.

    அடுத்த சம்பவம் அவரது தங்க வளையலைப் பற்றியது. தனியாக இருந்த குழந்தையைப் பார்த்த திருடன் ஒருவன் தங்க வளையலைக் குறி வைத்து வீட்டின் உள்ளே வர, அவரே அதைக் கழட்டும் விதத்தைச் சொல்லி அதை ரிப்பேர் செய்து எடுத்து வரக் கூறுகிறார். மிக்க மகிழ்ச்சியுடன் பொன்னுசாமி (அப்படித்தான் வந்தவன் தன் பெயரைக் கூறி இருந்தான் – தங்கத்திற்குச் சாமி!) தன் வளையலை ரிப்பேர் செய்து எடுத்து வரப்போகும் செய்தியைத் தன் வீட்டாருக்குக் குழந்தை கூறியது.

    அவசரம் அவசரமாக வெளியில் வந்த குழந்தையின் வீட்டாருக்குப் பொன்னுசாமி தென்படவே இல்லை. கவர்ச்சி, திருடு, பேராசை, ஏமாற்றுதல், புலம்பல் ஆகிய அனைத்தையும் இந்த இரு சம்பவங்களும் ஆச்சார்யாளுக்கு விளக்கி விட்டன! ஆனால் வயதாக ஆக, சில ஆத்மாக்கள் பிறருக்காகவே அறநெறியின் அடிப்படையில் வேரூன்றி வாழ்கின்றனர் என்ற பேருண்மையை அவர் உணர்ந்தார்.

    பீடம் ஏறிய வரலாறு

    அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராச்சார்யார் சித்தி அடைந்து விட்டார். ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் செல்கிறார் பரமாச்சார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்தச் சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது. சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சக்கட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும், ஆகையால் அவரையே அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாச்சார்யாள்!

    இப்படியாகத்தான், சிறு வயதில் திடீரென்று நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் பீடமேறினார் சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி என்னும் திருநாமம் கொண்ட பரமாச்சார்யாள். அவருக்கு சாஸ்திர பாடமும் பயிற்சிகளும் ஆரம்பமாயின.

    இரு நிகழ்ச்சிகள்

    1923ஆம் ஆண்டு திருச்சியில் முகாம் இட்டிருந்தபோது 12 வயதுச் சிறுமி ஒருத்தி தன் சகோதரனைப் பொய் சொன்னதற்காகக் கண்டித்ததைப் பார்த்து வியந்தார் ஆச்சார்யாள். அந்தச் சம்பவத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.

    இன்னொரு சம்பவம் கேரளாவில் நடந்தது. அவர் முகாமிட்டிருந்த இடத்தில் பக்கத்து அறையில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவரது கவனத்தைக் கவர்ந்தது. பக்கத்து அறையில் பூஜை செய்யப் போன ஒரு நம்பூதிரி அங்கிருந்தவர்களுடன் அரட்டையில் பங்கு கொண்டார். சிறிது நேரத்தில் அவர் தன் தவற்றை உணர்ந்து கொண்டார். பூஜையில் அவர் மனம் செல்லவில்லை. தன் தவற்றைப் பகிரங்கமாகக் கூறி, மனம் பூஜை செய்யும் லயத்தில் இல்லை என்று அவர் கூறியதையும் ஆச்சார்யாள் கேட்டார். அவரது குறிக்கோளில் இருந்த நேர்மை ஆச்சார்யாளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

    நேசித்துப் போற்றியோர்

    அடுத்து ஆசார்யாள், தன்னை மிகவும் அன்பு பாராட்டி மதித்து நேசித்தவர்கள் எப்படித் தன்னைப் போற்றினர் என்பதை எடுத்துக் கூறுகிறார், இறுதியில் கட்டுரையை “கடவுள், சிலரைப் பிறருக்காகவே வாழப் படைத்திருக்கிறார்” என்ற வரியுடன் முடிக்கிறார்.

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

    – கோமதி சுரேஷ்

  • 2016-06-30-11-57-54

    யாதுமாகி நின்றாய் காளி

    எங்கும் நீ நிறைந்தாய்

    தீது நன்மை எல்லாம் – நிந்தன்

    செயல்கள் அன்றி இல்லை.

     – மகாகவி பாரதி

     

    ஆதிபராசக்தியே க்ரியாசக்தி (துர்கை), இச்சாசக்தி (லக்ஷ்மி), ஞானசக்தியாய் (சரஸ்வதி) தன் பிள்ளைகளுக்கு தாயாக அருள் பாலிக்கிறாள்.துர்கா தேவி அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்கிறாள் . அதில் ஒரு அம்சம்.  தான் காளி. இவளின் புறத்தோற்றம் அச்சம் தரக் கூடியதாக இருந்தாலும் அரவணைக்கும் தாயவள் .அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், ‘திகம்பரி ஆவாள் . சக்தி வழிபாட்டு முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக இருக்கிறாள் . 

    ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், போர் மூண்டபோது, துர்கை தனது அதீத சக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய் சொல்லப்படுகிறது. காளிகாதேவி, அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து,மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ஒரு யுகமே முடிந்த அறிகுறியுடன், கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உரு கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.

    காளியே பின்பு ‘பத்ரகாளி’யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள்.’பத்ர’ என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள். கோப வடிவமாக இருக்கும் அன்னையை சாந்தம்  செய்தால் உடனே இளகி அருள்பாலிப்பாள் .

    கல்கத்தா  நகரில் உள்ள காளிக் கோயிலை போலவே  தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு காளி கோவில் இருக்கிறது. திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில்,மதுரகாளியம்மன்  கோவில் இன்றும் பல பக்தர்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு ஸ்தலமாக சிறந்து விளங்குகிறது.

    பல பக்தர்களுக்கு குலதெய்வமாய் விளங்கும் அன்னையின் திருக்கோவில்,திங்கள்  மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கிறது. திருக்கோயில் வளாகத்தில் உள்ள  கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.. உடுக்கை ஒலிக்க அம்மனை பூஜை செய்து அழைக்கும் பொழுது சிலிர்ப்பு உண்டாவதை உணர முடியும் .

    ஸ்தல வரலாறு 

    ஆதியிலே சிறுவாச்சூரிலே செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம்  ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அந்த அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன் படுத்தி வந்தான் அவன். மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான், தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை சாதாரண மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து அவனை வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் மதுர காளியம்மன் .

    செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே எப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை காட்டும் போது முதலில் மலை நோக்கி தீபாரதனைக் காட்டப்பட்டு பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

    இத்தலத்தின் மற்றொரு ஐதீகம், அம்பிகை சிலப்பதிகார நாயகி மதுரை கண்ணகி என்றும், கற்புடை தெய்வம் கண்ணகி தன்னுடைய கணவருக்கு பாண்டியன் நெடுஞ்செழியனால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க முடியாது கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்த போது இத்தலம் வந்ததாகவும் அந்த மதுரை காளியம்மனே மதுர காளியானாள் என்பது செவிவழிச் செய்தி.மதுரை காளியம்மன் என்ற திருநாமமே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் நம்பப்படுகின்றது. சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் – இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.

     

    கோவில் திறக்கும் நேரம் 

    சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பின்பு தங்கக் கவசம் சார்த்தப்படுகின்றது. இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது.

     

    சிறப்பு அம்சம்

    மதுரகாளி  மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் .ஒரு முறை அம்மனை தரிசனம் செய்தவர்களை மறுபடியும் மறுபடியும் தன்னிடம் ஈர்க்கின்றாள் அன்னை. எழிலார்ந்த ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய சன்னதி. பூசை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர் அன்னையை அழைக்கின்றனர், அப்போதுதான் மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

    சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்திற்கு எழுந்தருளி அன்னை சன்னதியில் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்ததாக கூறுகின்றார்கள்.

    பலனளிக்கும் பிராத்தனைகள்

    செல்லி அம்மனிடம்  குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ,  குழந்தை பிறந்தால் “பால் முடி” கொடுப்பதாக வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது.அவ்வாறு அன்னையின் கருணையால் பலன் பெற்றவர்கள் குழந்தைக்கு மூன்று மாதம் முடிவடையும் முன்  சென்று முடி காணிக்கை செலுத்துகிறனர்

    அங்க பிரதக்ஷணம் அம்மனுக்கு ஒரு சிறந்த பிரார்த்தனை. மற்றுமொறு சிறந்த பிரார்த்தனை மாவிளக்கு. வெளியில் எங்கும் மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளாவே அரிசி கொணர்ந்து ஊற வைத்து மாவு தயாரித்து நெய் விளக்கிடுகின்றனர் பக்தர்கள்.

    பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி,சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன

    தன்னை நாடி வரும் அடியாருக்கு தன் கருணைத் திறத்தால் நல்லன நல்கி நலமான வாழ்வமைத்து தரும் மதுர காளியம்மனை மனமுருகி வழிபட்டு நன்மை அடைவோமாக.

    மதுரகாளியம்மன் ஆலயத்தின் அதிகார பூர்வ இணையதளம் :

    http://siruvachurmadhurakaliamman.tnhrce.in/index.html

    – ப .கோமதி சுரேஷ்