Tag: பகவான்

  • 2016-07-19-14-41-29

    கங்கைக் கரையில் வைக்கிறேன் என்று சொல்லி தமிழகத்தில் இருந்து எடுத்துச் சென்று கடைசியில் பூங்காவில் பாலிதீன் கவர் சுற்றிக் கிடக்கும் நமது திருவள்ளுவருக்கும் சித்தர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த சுவாரஸ்ய தொடர்பு பற்றியதுதான் இந்த பதிவு..

    தமிழகத்தில் அவதரித்த சித்தர்களில் முக்கியமானவர் கொங்கணவர். இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் 
    என்று சொல்பவர்களும் உண்டு.

    கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர் பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டில் வாழ்ந்தவர். அதனால் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.

    இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் “வாலைக் கும்மி” என்பது ஒன்று. வாலை என்றால் சக்தி என்றும், கன்னி என்றும் இரு பொருள் உள்ளது. கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது. இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அல்ல. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

    சரி, இப்போது கொங்கணர் பற்றிய கதைக்கு வருவோம். கொங்கணர் ஒருமுறை, ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்த போது, மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டுவிட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அந்த கொக்கை பார்த்தார். உடனே அது எரிந்து சாம்பலாகிவிட்டது. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். எனவே அவர் பிச்சை கொண்டுவர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்டாராம். எங்கோ நடந்த விஷயம் வீட்டிற்குள் இருந்த இந்த அம்மாளுக்கு தெரிகிறதென்றால் இவர் எத்தனை பெரிய சித்த ஞானியாக இருப்பார் என்று எண்ணி கொங்கணர் வாசுகியை வணங்கினாராம். பின்னர் திருவள்ளுவர் சீடரானார் என்கிறது அந்த கதை.

  • 2016-07-19-14-41-29

    கங்கைக் கரையில் வைக்கிறேன் என்று சொல்லி தமிழகத்தில் இருந்து எடுத்துச் சென்று கடைசியில் பூங்காவில் பாலிதீன் கவர் சுற்றிக் கிடக்கும் நமது திருவள்ளுவருக்கும் சித்தர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த சுவாரஸ்ய தொடர்பு பற்றியதுதான் இந்த பதிவு..

    தமிழகத்தில் அவதரித்த சித்தர்களில் முக்கியமானவர் கொங்கணவர். இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் 
    என்று சொல்பவர்களும் உண்டு.

    கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர் பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டில் வாழ்ந்தவர். அதனால் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.

    இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் “வாலைக் கும்மி” என்பது ஒன்று. வாலை என்றால் சக்தி என்றும், கன்னி என்றும் இரு பொருள் உள்ளது. கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது. இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அல்ல. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

    சரி, இப்போது கொங்கணர் பற்றிய கதைக்கு வருவோம். கொங்கணர் ஒருமுறை, ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்த போது, மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டுவிட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அந்த கொக்கை பார்த்தார். உடனே அது எரிந்து சாம்பலாகிவிட்டது. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். எனவே அவர் பிச்சை கொண்டுவர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்டாராம். எங்கோ நடந்த விஷயம் வீட்டிற்குள் இருந்த இந்த அம்மாளுக்கு தெரிகிறதென்றால் இவர் எத்தனை பெரிய சித்த ஞானியாக இருப்பார் என்று எண்ணி கொங்கணர் வாசுகியை வணங்கினாராம். பின்னர் திருவள்ளுவர் சீடரானார் என்கிறது அந்த கதை.

  • 2016-07-18-10-47-04

    ல்மதபமத்பம்உல கம்பதமுஃ தபதம்பஃஉ உதகம்பம் ஃ புமதபுமதமு

    ருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

    வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

    அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

    சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து

  • 2016-07-16-02-17-16

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில், ஆடி திருவிழா இன்று காலை தொடங்கியது. ஆடி திருவிழாவின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இவர்கள் இரவு தங்கி  மறுநாள் காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, வேப்பிலை ஆடை அணிந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவார்கள். 

    உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள். அம்மனுக்கு உகந்த வேப்பிலைகளை உடலில் கட்டிக்கொண்டு கோயிலைச் சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

    வழக்கமான உற்சாகத்துடன் ஆடி திருவிழா பெரியபாளையத்தில் தொடங்கியிருக்கிறது. முடிந்தால் நீங்களும் இந்த ஆடியில் அம்மனை தரிசித்து எல்லா நலமும் வளமும் பெற்றிடுங்கள்.

  • 5

    ஒரு மரத்துக்குக் கீழே நின்று கொண்டு தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் லிங்கங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பரணி கத்தினார். மகா, சிவன் மேல ஒரு பாட்டுப் பாடுங்களேன் என்று. நானே கிட்டத்தட்ட நெகிழ்ந்து போய், அந்த மனநிலையில்தான் இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ME படிக்கும்போது நானும் நண்பர் சந்துருவும் கோயில் கோயிலாகப் போவோம். கங்கை கொண்ட சோழபுரமும் தாராசுரமும் எங்கள் இருவருக்கும் ஆகப் பிடித்தமான ஆலயங்கள்.

    ஒவ்வொருமுறை போகும்போதும் கருவறைக்கு அருகே நின்று சில பாடல்களைப் பாடுவது எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் சந்துரு “இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவயே..நெஞ்சே”” என்ற பாடல் என்னை உருக்கிவிடும். சந்துரு புல்லாங்குழல் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். நாங்கள் போகும் முன்மாலை வேளையில் பெரும்பாலும் ஆளரவம் இருக்காது பழைய கோயில்களில். நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கமுள்ள கோயில்களில்லை என்பதால், பக்தர்கள் யாரும் சீந்தாத கோயிலாகத்தான் இருக்கும் நாங்கள் போகும் கோயில்கள்.

    அந்தக் காலத்தில் எங்களிடம் அதிகக் காசு இருக்காது. முதலில் சாமி கும்பிட்டு தீபாராதனை முடித்து 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் தட்டில் போட்டாலே பெரிசு எங்கள் இருவருக்கும். அதனால், அர்ச்சகரும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். தீபாராதனை முடிந்ததும் ஆச்சு என் கடமை என்று போய் முன்னால் உட்கார்ந்து விடுவார். அதற்கப்புறம், சந்துரு மெல்ல முனகிப் பாட ஆரம்பிப்பார். திடீரென ஊற்றுக்கண் திறந்து கிணற்றில் குளிர்நீர் பீறிடுவது போல சந்துருவின் வெண்கலக் குரல் கர்ப்பக்கிருஹத்தை நோக்கிப் பாயும் அந்தக் கணம்…. ஆஹா.. நான் பேறுபெற்றவன்..

    லிங்கத் திருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

    வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

    அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

    சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து கொடுப்பார்.

    அது ஒரு காலம். அந்தணரான என் சந்துரு இப்போது ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலை செய்கிறார். காலம் எங்களை விசிறி வீசிவிட்டது. எத்தியோப்பியாவில் அவர் பாட்டைக் கேட்டு மயங்க ஈசன் எந்த வடிவில் இருக்கிறானோ? சந்துரு முறைப்படி சங்கீதம் கற்றவர்.

    அவர் மூலமாக யாருமற்ற ஆலயங்களில் பாடும் பழக்கம் எனக்கு வந்தது. அந்தப் பழக்கம் திருப்பதியில் பெருமாளை அதிக நேரம் தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்திருக்கிறது. என்னோடு படித்த கலைச்செல்வன், துரை அருள்நேயத்துடன் ஒருமுறை திடீரெனத் திருப்பதி கிளம்பிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்குவதாகத் திட்டம். முதல்நாள் பகலில் 3 மணி நேரம் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தோம்.

    என்ன தோன்றியதோ தெரியவில்லை எனக்குப் பெருமாளைப் பார்த்ததும், பிரபந்தம் பாடத் தோன்றியது. பம்பாய் சகோதரிகள் லலிதா, சரோஜா பாடிய பிரபந்தங்கள் அடங்கிய கேசட் ஒன்று தமிழ் சுப்ரபாதத்துடன் T Series-சில் வெளியாகி இருந்தது. அதைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். காலையில் சுப்ரபாதமும் மாலையில் பிரபந்தமும் கேட்டுப் பழகி மனப்பாடமாகி இருந்தது.

    அந்த நினைவில், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே.. நெடியோனே வேங்கடவா “ என்று பாடத் தொடங்கிவிட்டேன். ஜரிகண்டி ஜரிகண்டி என்று கையைப் பிடித்து இழுத்துத் தள்ளாத குறையாய் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருந்த ஆலய ஊழியர் என் மற்ற நண்பர்களைத் தள்ளிவிட்டு என்னை மட்டும், கூட்ட வரிசைக்குப் பின்னால் உந்தித் தள்ளினார். கையால் பாடு என்று சைகை காட்டினார். நான், என் நேர் முன்னே நகரும் வரிசை, அதற்கு அப்பால் பெருமாள்..

    அவ்வளவுதான்… எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் எல்லாம் சரக்குத் தீரும்வரை பாடினேன். அதில், திருமாலே சீராளும் மணிவண்ணா, கோபியர் கொஞ்சும் ரமணா உள்ளிட்ட திரையிசைப் பாடல்களும் அடக்கம். எனக்கே போதுமென்று தோன்றும்வரை திகட்டத் திகட்டப் பெருமாளைப் பார்த்துவிட்டு நானே வரிசையில் சேர்ந்து வெளியேறி வந்தால் கிட்டத்தட்ட கால்மணி நேரமாய் எனக்காகக் காத்திருந்த நண்பர்களின் முகத்தில் அனலடித்தது. ஏண்டா ஒனக்குப் பாடத் தெரியுங்கிறதைக் காட்றதுக்கு இதுதான் இடமா? என்று காதில் புகைவராத குறை..

    அதுக்கு நான் என்ன சேறது? அன்று அப்படி அமைந்தது. அதெல்லாம் நினைவு வருகிறது கம்போடியப் பயணத்தை எழுதும்போது. சிதம்பரத்தில் 13 ஆண்டுகள் நாட்டியாஞ்சலி பார்த்ததும் ஒருவிதத்தில் எனக்கு நிறையப் பாடல்களை அறிமுகம் செய்தது. தேடித் தேடி தெரிந்து கொண்ட பருவம் அது. பாட்டைப் பொறுத்தவரை, எல்லாம் கேள்வி ஞானம்தான். முறைப்படியெல்லாம் கற்கவில்லை. இருந்தாலும் கேசட்டில் கேட்டதைத் திருப்பி அச்சுப் பிசகாமல் பாடிவிடுவேன். அது பரணிக்குத் தெரியும். அந்த நினைவில், கம்போடியத் தண்ணீர் லிங்கங்களைப் பார்த்ததும் என்னைப் பாடச் சொன்னதும் நான் பாடினேன்.

    அதே ஆடிக் கொண்டார் கீர்த்தனைதான். மகாதேவன் நான் பாடுவதைப் படத்தோடு பதிவு செய்து கொண்டார். நான் பாடியதைக் கேட்டு உள்ளூர்க் குழந்தைகள் வித்தியாசமாகப் பார்த்தன. இவன் என்ன மொழியில் பாடுகிறான்? எங்கிருந்து வந்திருப்பான்? அவர்களிடம் நான் எப்படிச் சொல்வது, நான் தென்பாண்டி நாட்டான் என்று… அதனாலென்ன எந்நாட்டவர்க்கும் உரிய இறைவனைப் பாடிய பாடல் என்று அந்தக் குழந்தைகளின் ஆன்மா உணர்ந்திருக்கக் கூடும்.

    இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு காட்டுக்குள் வந்து இத்தனை லிங்கங்களைச் செதுக்கிய சிற்பிக்கு எங்களால் முடிந்த நன்றியை மனத்துக்குள் சொல்லிக் கொண்டோம். “எங்கே இருந்து இங்க வந்துருக்கு நம்ம சமயமும் பண்பாடும்” என்று ராஜூ சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

    உப்புக்கல்லுக்குப் பிரயோஜனமில்லாத கான்கிரீட் குவியலைக் காண்பித்த பாவத்துக்கு ஆயிரம் லிங்கங்கள் மூலம் கழுவாய் தேடிக்கொண்டார் ரா. அடுத்து உங்களை ஒரு பெரிய அருவியில் குளிக்கக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் ரா. ராஜூ, நவீன் இருவரும் அகண்ட தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பரணிக்குத் திருச்சி. சின்ன வயதில் அருவிகளை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அப்பாவி ஜீவன்கள்.

    ஆனால் நான் அப்படியில்லையாக்கும். இராஜபாளையத்துக்காரன். என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே ஏழெட்டு அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டுவது தெரியும். ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் அய்யனார் கோயில் அருவி. முப்பழபூசை, காது குத்த, முடியிறக்க என்று அவ்வப்போது போய் அருவியில் ஆட்டம் போடும் கொடுப்பினை உள்ள ஆத்மா. போதாக் குறைக்கு, திருக்குற்றாலத்துக்கு எங்கள் ஊரைத் தாண்டித்தான் போயாக வேண்டும். ஆனால், நான் மூன்று முறைதான் திருக்குற்றாலம் போய் வந்திருக்கிறேன் என்பது வரலாற்றுச் சோகம்.. அதை விடுவோம்.

    அருவி எனக்குத் தண்ணிபட்ட பாடு. ஆகவே, என்னத்த பெரிய அருவி, என்னத்த பெரிய தண்ணீர் என்று எகத்தாளமாக ரா-வுடன் வண்டியில் ஏறினேன். ஏறிக் கொஞ்ச தூரம் போனதும் இறங்குங்கள் என்றார். எல்லாத்தையும் இங்கேயே கழட்டி வைச்சுட்டுக் குளிக்கிற மாதிரி வாங்க அப்பு என்றார். வேனுக்கு வெளியே அம்புட்டையும் உருவிப் போட்டு உள்ளாடைக்கு மேல் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

    பரணி சரியான நாட்டுக் கட்டை. கடகடவெனக் காட்டுப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். எனக்குக் காலில் செருப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைக்குப் போய் சாண்டல்ஸ் இரண்டு இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டேன். வெறும் துண்டுடன் அங்கிருந்த பெண்களைப் பார்த்துச் செருப்புக் கேட்கக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் கால் நோகுதே ?

    அவர்களும் எதையோ தின்றுகொண்டே முகத்தை மூடிச் சிரித்துக் கொண்டே செருப்பைக் கொடுத்துப் போ போ என்றார்கள். எதிரே கூட்டம் கூட்டமாய்க் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குதூகலத்தில் ஈடுபட்டால் மட்டுமே வரக்கூடிய மனக்கிளர்ச்சி எல்லார் முகத்திலும் தெரிவதைக் கவனித்தேன். அருவிக் குளியல் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.                                                   

    ஆனாலும் எதிரே வந்தவர்களின் முகங்களில் அதையும் தாண்டி ஓர் ஆனந்தம். இடுப்பில் உட்கார்ந்திருந்த அம்மணமான கைக்குழந்தைகள் கூட எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன. பெண்கள் ஈரக்கூந்தலை விரித்துப் போட்டபடி சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர். கொஞ்ச தூரம் நடக்கத் தொடங்கியதும் அருவியின் ஓசை கேட்கத் தொடங்கியது. உயரமான ஓரிடத்திலிருந்து மரங்களின் வேர்களைப் பிடித்தவாறு பாதாளத்தில் இறங்க வேண்டியிருந்தது. படியெல்லாம் இல்லை.

    பரணி வெகு லாகவமாக இறங்கினார். ராஜூ யோகா பயிற்சி செய்யும் பார்ட்டி. சொல்லவே வேண்டாம். வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எப்போதும் ஒரு விரைவு இருக்கும் அவரிடம். நவீன் ஒப்புநோக்க எங்களை விட இளையவர். நானும் மகாதேவனும் கொஞ்சம் தடுமாறிக் கீழே இறங்கினோம். அருவியில் குளித்தவர்கள் நடந்து நடந்து பாதை ஈரமாகிச் சொத சொதவென்றிருந்தது. பிடிமானமில்லாத செருப்பு வழுக்கத் தொடங்கியது.

    ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு அருவியை நோக்கி நடந்தோம். ஒரு கட்டத்தில் திரைவிலகியதுபோல் திடீரென எங்கள் முன் தொலைவில் அருவி தோன்றியது. கடவுளே !!!…..

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • 5

    ஒரு மரத்துக்குக் கீழே நின்று கொண்டு தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் லிங்கங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பரணி கத்தினார். மகா, சிவன் மேல ஒரு பாட்டுப் பாடுங்களேன் என்று. நானே கிட்டத்தட்ட நெகிழ்ந்து போய், அந்த மனநிலையில்தான் இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ME படிக்கும்போது நானும் நண்பர் சந்துருவும் கோயில் கோயிலாகப் போவோம். கங்கை கொண்ட சோழபுரமும் தாராசுரமும் எங்கள் இருவருக்கும் ஆகப் பிடித்தமான ஆலயங்கள்.

    ஒவ்வொருமுறை போகும்போதும் கருவறைக்கு அருகே நின்று சில பாடல்களைப் பாடுவது எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் சந்துரு “இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவயே..நெஞ்சே”” என்ற பாடல் என்னை உருக்கிவிடும். சந்துரு புல்லாங்குழல் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். நாங்கள் போகும் முன்மாலை வேளையில் பெரும்பாலும் ஆளரவம் இருக்காது பழைய கோயில்களில். நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கமுள்ள கோயில்களில்லை என்பதால், பக்தர்கள் யாரும் சீந்தாத கோயிலாகத்தான் இருக்கும் நாங்கள் போகும் கோயில்கள்.

    அந்தக் காலத்தில் எங்களிடம் அதிகக் காசு இருக்காது. முதலில் சாமி கும்பிட்டு தீபாராதனை முடித்து 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் தட்டில் போட்டாலே பெரிசு எங்கள் இருவருக்கும். அதனால், அர்ச்சகரும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். தீபாராதனை முடிந்ததும் ஆச்சு என் கடமை என்று போய் முன்னால் உட்கார்ந்து விடுவார். அதற்கப்புறம், சந்துரு மெல்ல முனகிப் பாட ஆரம்பிப்பார். திடீரென ஊற்றுக்கண் திறந்து கிணற்றில் குளிர்நீர் பீறிடுவது போல சந்துருவின் வெண்கலக் குரல் கர்ப்பக்கிருஹத்தை நோக்கிப் பாயும் அந்தக் கணம்…. ஆஹா.. நான் பேறுபெற்றவன்..

    லிங்கத் திருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

    வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

    அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

    சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து கொடுப்பார்.

    அது ஒரு காலம். அந்தணரான என் சந்துரு இப்போது ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலை செய்கிறார். காலம் எங்களை விசிறி வீசிவிட்டது. எத்தியோப்பியாவில் அவர் பாட்டைக் கேட்டு மயங்க ஈசன் எந்த வடிவில் இருக்கிறானோ? சந்துரு முறைப்படி சங்கீதம் கற்றவர்.

    அவர் மூலமாக யாருமற்ற ஆலயங்களில் பாடும் பழக்கம் எனக்கு வந்தது. அந்தப் பழக்கம் திருப்பதியில் பெருமாளை அதிக நேரம் தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்திருக்கிறது. என்னோடு படித்த கலைச்செல்வன், துரை அருள்நேயத்துடன் ஒருமுறை திடீரெனத் திருப்பதி கிளம்பிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்குவதாகத் திட்டம். முதல்நாள் பகலில் 3 மணி நேரம் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தோம்.

    என்ன தோன்றியதோ தெரியவில்லை எனக்குப் பெருமாளைப் பார்த்ததும், பிரபந்தம் பாடத் தோன்றியது. பம்பாய் சகோதரிகள் லலிதா, சரோஜா பாடிய பிரபந்தங்கள் அடங்கிய கேசட் ஒன்று தமிழ் சுப்ரபாதத்துடன் T Series-சில் வெளியாகி இருந்தது. அதைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். காலையில் சுப்ரபாதமும் மாலையில் பிரபந்தமும் கேட்டுப் பழகி மனப்பாடமாகி இருந்தது.

    அந்த நினைவில், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே.. நெடியோனே வேங்கடவா “ என்று பாடத் தொடங்கிவிட்டேன். ஜரிகண்டி ஜரிகண்டி என்று கையைப் பிடித்து இழுத்துத் தள்ளாத குறையாய் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருந்த ஆலய ஊழியர் என் மற்ற நண்பர்களைத் தள்ளிவிட்டு என்னை மட்டும், கூட்ட வரிசைக்குப் பின்னால் உந்தித் தள்ளினார். கையால் பாடு என்று சைகை காட்டினார். நான், என் நேர் முன்னே நகரும் வரிசை, அதற்கு அப்பால் பெருமாள்..

    அவ்வளவுதான்… எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் எல்லாம் சரக்குத் தீரும்வரை பாடினேன். அதில், திருமாலே சீராளும் மணிவண்ணா, கோபியர் கொஞ்சும் ரமணா உள்ளிட்ட திரையிசைப் பாடல்களும் அடக்கம். எனக்கே போதுமென்று தோன்றும்வரை திகட்டத் திகட்டப் பெருமாளைப் பார்த்துவிட்டு நானே வரிசையில் சேர்ந்து வெளியேறி வந்தால் கிட்டத்தட்ட கால்மணி நேரமாய் எனக்காகக் காத்திருந்த நண்பர்களின் முகத்தில் அனலடித்தது. ஏண்டா ஒனக்குப் பாடத் தெரியுங்கிறதைக் காட்றதுக்கு இதுதான் இடமா? என்று காதில் புகைவராத குறை..

    அதுக்கு நான் என்ன சேறது? அன்று அப்படி அமைந்தது. அதெல்லாம் நினைவு வருகிறது கம்போடியப் பயணத்தை எழுதும்போது. சிதம்பரத்தில் 13 ஆண்டுகள் நாட்டியாஞ்சலி பார்த்ததும் ஒருவிதத்தில் எனக்கு நிறையப் பாடல்களை அறிமுகம் செய்தது. தேடித் தேடி தெரிந்து கொண்ட பருவம் அது. பாட்டைப் பொறுத்தவரை, எல்லாம் கேள்வி ஞானம்தான். முறைப்படியெல்லாம் கற்கவில்லை. இருந்தாலும் கேசட்டில் கேட்டதைத் திருப்பி அச்சுப் பிசகாமல் பாடிவிடுவேன். அது பரணிக்குத் தெரியும். அந்த நினைவில், கம்போடியத் தண்ணீர் லிங்கங்களைப் பார்த்ததும் என்னைப் பாடச் சொன்னதும் நான் பாடினேன்.

    அதே ஆடிக் கொண்டார் கீர்த்தனைதான். மகாதேவன் நான் பாடுவதைப் படத்தோடு பதிவு செய்து கொண்டார். நான் பாடியதைக் கேட்டு உள்ளூர்க் குழந்தைகள் வித்தியாசமாகப் பார்த்தன. இவன் என்ன மொழியில் பாடுகிறான்? எங்கிருந்து வந்திருப்பான்? அவர்களிடம் நான் எப்படிச் சொல்வது, நான் தென்பாண்டி நாட்டான் என்று… அதனாலென்ன எந்நாட்டவர்க்கும் உரிய இறைவனைப் பாடிய பாடல் என்று அந்தக் குழந்தைகளின் ஆன்மா உணர்ந்திருக்கக் கூடும்.

    இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு காட்டுக்குள் வந்து இத்தனை லிங்கங்களைச் செதுக்கிய சிற்பிக்கு எங்களால் முடிந்த நன்றியை மனத்துக்குள் சொல்லிக் கொண்டோம். “எங்கே இருந்து இங்க வந்துருக்கு நம்ம சமயமும் பண்பாடும்” என்று ராஜூ சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

    உப்புக்கல்லுக்குப் பிரயோஜனமில்லாத கான்கிரீட் குவியலைக் காண்பித்த பாவத்துக்கு ஆயிரம் லிங்கங்கள் மூலம் கழுவாய் தேடிக்கொண்டார் ரா. அடுத்து உங்களை ஒரு பெரிய அருவியில் குளிக்கக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் ரா. ராஜூ, நவீன் இருவரும் அகண்ட தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பரணிக்குத் திருச்சி. சின்ன வயதில் அருவிகளை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அப்பாவி ஜீவன்கள்.

    ஆனால் நான் அப்படியில்லையாக்கும். இராஜபாளையத்துக்காரன். என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே ஏழெட்டு அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டுவது தெரியும். ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் அய்யனார் கோயில் அருவி. முப்பழபூசை, காது குத்த, முடியிறக்க என்று அவ்வப்போது போய் அருவியில் ஆட்டம் போடும் கொடுப்பினை உள்ள ஆத்மா. போதாக் குறைக்கு, திருக்குற்றாலத்துக்கு எங்கள் ஊரைத் தாண்டித்தான் போயாக வேண்டும். ஆனால், நான் மூன்று முறைதான் திருக்குற்றாலம் போய் வந்திருக்கிறேன் என்பது வரலாற்றுச் சோகம்.. அதை விடுவோம்.

    அருவி எனக்குத் தண்ணிபட்ட பாடு. ஆகவே, என்னத்த பெரிய அருவி, என்னத்த பெரிய தண்ணீர் என்று எகத்தாளமாக ரா-வுடன் வண்டியில் ஏறினேன். ஏறிக் கொஞ்ச தூரம் போனதும் இறங்குங்கள் என்றார். எல்லாத்தையும் இங்கேயே கழட்டி வைச்சுட்டுக் குளிக்கிற மாதிரி வாங்க அப்பு என்றார். வேனுக்கு வெளியே அம்புட்டையும் உருவிப் போட்டு உள்ளாடைக்கு மேல் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

    பரணி சரியான நாட்டுக் கட்டை. கடகடவெனக் காட்டுப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். எனக்குக் காலில் செருப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைக்குப் போய் சாண்டல்ஸ் இரண்டு இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டேன். வெறும் துண்டுடன் அங்கிருந்த பெண்களைப் பார்த்துச் செருப்புக் கேட்கக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் கால் நோகுதே ?

    அவர்களும் எதையோ தின்றுகொண்டே முகத்தை மூடிச் சிரித்துக் கொண்டே செருப்பைக் கொடுத்துப் போ போ என்றார்கள். எதிரே கூட்டம் கூட்டமாய்க் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குதூகலத்தில் ஈடுபட்டால் மட்டுமே வரக்கூடிய மனக்கிளர்ச்சி எல்லார் முகத்திலும் தெரிவதைக் கவனித்தேன். அருவிக் குளியல் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.                                                   

    ஆனாலும் எதிரே வந்தவர்களின் முகங்களில் அதையும் தாண்டி ஓர் ஆனந்தம். இடுப்பில் உட்கார்ந்திருந்த அம்மணமான கைக்குழந்தைகள் கூட எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன. பெண்கள் ஈரக்கூந்தலை விரித்துப் போட்டபடி சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர். கொஞ்ச தூரம் நடக்கத் தொடங்கியதும் அருவியின் ஓசை கேட்கத் தொடங்கியது. உயரமான ஓரிடத்திலிருந்து மரங்களின் வேர்களைப் பிடித்தவாறு பாதாளத்தில் இறங்க வேண்டியிருந்தது. படியெல்லாம் இல்லை.

    பரணி வெகு லாகவமாக இறங்கினார். ராஜூ யோகா பயிற்சி செய்யும் பார்ட்டி. சொல்லவே வேண்டாம். வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எப்போதும் ஒரு விரைவு இருக்கும் அவரிடம். நவீன் ஒப்புநோக்க எங்களை விட இளையவர். நானும் மகாதேவனும் கொஞ்சம் தடுமாறிக் கீழே இறங்கினோம். அருவியில் குளித்தவர்கள் நடந்து நடந்து பாதை ஈரமாகிச் சொத சொதவென்றிருந்தது. பிடிமானமில்லாத செருப்பு வழுக்கத் தொடங்கியது.

    ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு அருவியை நோக்கி நடந்தோம். ஒரு கட்டத்தில் திரைவிலகியதுபோல் திடீரென எங்கள் முன் தொலைவில் அருவி தோன்றியது. கடவுளே !!!…..

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • 5

    ஒரு மரத்துக்குக் கீழே நின்று கொண்டு தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் லிங்கங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பரணி கத்தினார். மகா, சிவன் மேல ஒரு பாட்டுப் பாடுங்களேன் என்று. நானே கிட்டத்தட்ட நெகிழ்ந்து போய், அந்த மனநிலையில்தான் இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ME படிக்கும்போது நானும் நண்பர் சந்துருவும் கோயில் கோயிலாகப் போவோம். கங்கை கொண்ட சோழபுரமும் தாராசுரமும் எங்கள் இருவருக்கும் ஆகப் பிடித்தமான ஆலயங்கள்.

    ஒவ்வொருமுறை போகும்போதும் கருவறைக்கு அருகே நின்று சில பாடல்களைப் பாடுவது எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் சந்துரு “இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவயே..நெஞ்சே”” என்ற பாடல் என்னை உருக்கிவிடும். சந்துரு புல்லாங்குழல் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். நாங்கள் போகும் முன்மாலை வேளையில் பெரும்பாலும் ஆளரவம் இருக்காது பழைய கோயில்களில். நேர்த்திக் கடன் செலுத்தும் பழக்கமுள்ள கோயில்களில்லை என்பதால், பக்தர்கள் யாரும் சீந்தாத கோயிலாகத்தான் இருக்கும் நாங்கள் போகும் கோயில்கள்.

    அந்தக் காலத்தில் எங்களிடம் அதிகக் காசு இருக்காது. முதலில் சாமி கும்பிட்டு தீபாராதனை முடித்து 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் தட்டில் போட்டாலே பெரிசு எங்கள் இருவருக்கும். அதனால், அர்ச்சகரும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். தீபாராதனை முடிந்ததும் ஆச்சு என் கடமை என்று போய் முன்னால் உட்கார்ந்து விடுவார். அதற்கப்புறம், சந்துரு மெல்ல முனகிப் பாட ஆரம்பிப்பார். திடீரென ஊற்றுக்கண் திறந்து கிணற்றில் குளிர்நீர் பீறிடுவது போல சந்துருவின் வெண்கலக் குரல் கர்ப்பக்கிருஹத்தை நோக்கிப் பாயும் அந்தக் கணம்…. ஆஹா.. நான் பேறுபெற்றவன்..

    லிங்கத் திருமேனி சிலிர்த்து வாடிய மலர்களெல்லாம் மீண்டும் புதுசாய்ப் புஷ்பித்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எண்ணெய் விளக்கின் ஒளியும் அறுபது வாட்ஸ் குண்டு பல்பின் ஒளியும் அந்தகாரத்தைக் கூட்ட, சந்துருவின் குரல் முன்மண்டபத்தில் அலை அலையாய்ப் பரவும். குறுகலான மண்டபம் குரலை வெகு இனிமையாக்கி எதிரொலிக்கும்.

    வெளியே போன அர்ச்சகர் ஓட்டமும் நடையுமாய் உள்ளே வருவார். வந்து அருகில் நின்று கொள்வார். கைகளை மார்பில் கோத்துக் கொண்டு கண்ணாடி வழியே சிவலிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உடல் அசையாமல் பாடுவார் சந்துரு. அந்நேரம் அது வேற சந்துரு. நானறிந்த சந்துரு அல்ல அது.

    அதிகப் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் பாடுவார் சந்துரு. முதல்முறை கேட்கும்போதே கேட்கும் எவரையும் வசீகரித்துவிடக் கூடிய கீர்த்தனைகள் அவை. அவரைத் தொடர்ந்து நான் என்னுடைய ஆஸ்தானப் பாடலான முத்துத் தாண்டவரின் “ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”” ஆரம்பிப்பேன்.                         

    சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத்தேர் ஆட என்னும் போதே உணர்ச்சிவசப்பட்டுக் குரல் லேசாகக் கமறி உடையும். பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட வரும்போது கிட்டத்தட்ட குரல் நின்றுவிடும். சுதாரித்துப் பாடி முடிக்கும்போது மனம் நிறைந்திருக்கும். திருச்சிறம்பலம் என்று சொல்லி முடிக்கும்போது அர்ச்சகர் உள்ளே ஓடிப்போய் விபூதியும் மாலையும் எடுத்துவந்து கொடுப்பார்.

    அது ஒரு காலம். அந்தணரான என் சந்துரு இப்போது ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலை செய்கிறார். காலம் எங்களை விசிறி வீசிவிட்டது. எத்தியோப்பியாவில் அவர் பாட்டைக் கேட்டு மயங்க ஈசன் எந்த வடிவில் இருக்கிறானோ? சந்துரு முறைப்படி சங்கீதம் கற்றவர்.

    அவர் மூலமாக யாருமற்ற ஆலயங்களில் பாடும் பழக்கம் எனக்கு வந்தது. அந்தப் பழக்கம் திருப்பதியில் பெருமாளை அதிக நேரம் தரிசிக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்திருக்கிறது. என்னோடு படித்த கலைச்செல்வன், துரை அருள்நேயத்துடன் ஒருமுறை திடீரெனத் திருப்பதி கிளம்பிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்குவதாகத் திட்டம். முதல்நாள் பகலில் 3 மணி நேரம் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தோம்.

    என்ன தோன்றியதோ தெரியவில்லை எனக்குப் பெருமாளைப் பார்த்ததும், பிரபந்தம் பாடத் தோன்றியது. பம்பாய் சகோதரிகள் லலிதா, சரோஜா பாடிய பிரபந்தங்கள் அடங்கிய கேசட் ஒன்று தமிழ் சுப்ரபாதத்துடன் T Series-சில் வெளியாகி இருந்தது. அதைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் செய்திருந்தேன். காலையில் சுப்ரபாதமும் மாலையில் பிரபந்தமும் கேட்டுப் பழகி மனப்பாடமாகி இருந்தது.

    அந்த நினைவில், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே.. நெடியோனே வேங்கடவா “ என்று பாடத் தொடங்கிவிட்டேன். ஜரிகண்டி ஜரிகண்டி என்று கையைப் பிடித்து இழுத்துத் தள்ளாத குறையாய் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருந்த ஆலய ஊழியர் என் மற்ற நண்பர்களைத் தள்ளிவிட்டு என்னை மட்டும், கூட்ட வரிசைக்குப் பின்னால் உந்தித் தள்ளினார். கையால் பாடு என்று சைகை காட்டினார். நான், என் நேர் முன்னே நகரும் வரிசை, அதற்கு அப்பால் பெருமாள்..

    அவ்வளவுதான்… எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் எல்லாம் சரக்குத் தீரும்வரை பாடினேன். அதில், திருமாலே சீராளும் மணிவண்ணா, கோபியர் கொஞ்சும் ரமணா உள்ளிட்ட திரையிசைப் பாடல்களும் அடக்கம். எனக்கே போதுமென்று தோன்றும்வரை திகட்டத் திகட்டப் பெருமாளைப் பார்த்துவிட்டு நானே வரிசையில் சேர்ந்து வெளியேறி வந்தால் கிட்டத்தட்ட கால்மணி நேரமாய் எனக்காகக் காத்திருந்த நண்பர்களின் முகத்தில் அனலடித்தது. ஏண்டா ஒனக்குப் பாடத் தெரியுங்கிறதைக் காட்றதுக்கு இதுதான் இடமா? என்று காதில் புகைவராத குறை..

    அதுக்கு நான் என்ன சேறது? அன்று அப்படி அமைந்தது. அதெல்லாம் நினைவு வருகிறது கம்போடியப் பயணத்தை எழுதும்போது. சிதம்பரத்தில் 13 ஆண்டுகள் நாட்டியாஞ்சலி பார்த்ததும் ஒருவிதத்தில் எனக்கு நிறையப் பாடல்களை அறிமுகம் செய்தது. தேடித் தேடி தெரிந்து கொண்ட பருவம் அது. பாட்டைப் பொறுத்தவரை, எல்லாம் கேள்வி ஞானம்தான். முறைப்படியெல்லாம் கற்கவில்லை. இருந்தாலும் கேசட்டில் கேட்டதைத் திருப்பி அச்சுப் பிசகாமல் பாடிவிடுவேன். அது பரணிக்குத் தெரியும். அந்த நினைவில், கம்போடியத் தண்ணீர் லிங்கங்களைப் பார்த்ததும் என்னைப் பாடச் சொன்னதும் நான் பாடினேன்.

    அதே ஆடிக் கொண்டார் கீர்த்தனைதான். மகாதேவன் நான் பாடுவதைப் படத்தோடு பதிவு செய்து கொண்டார். நான் பாடியதைக் கேட்டு உள்ளூர்க் குழந்தைகள் வித்தியாசமாகப் பார்த்தன. இவன் என்ன மொழியில் பாடுகிறான்? எங்கிருந்து வந்திருப்பான்? அவர்களிடம் நான் எப்படிச் சொல்வது, நான் தென்பாண்டி நாட்டான் என்று… அதனாலென்ன எந்நாட்டவர்க்கும் உரிய இறைவனைப் பாடிய பாடல் என்று அந்தக் குழந்தைகளின் ஆன்மா உணர்ந்திருக்கக் கூடும்.

    இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு காட்டுக்குள் வந்து இத்தனை லிங்கங்களைச் செதுக்கிய சிற்பிக்கு எங்களால் முடிந்த நன்றியை மனத்துக்குள் சொல்லிக் கொண்டோம். “எங்கே இருந்து இங்க வந்துருக்கு நம்ம சமயமும் பண்பாடும்” என்று ராஜூ சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

    உப்புக்கல்லுக்குப் பிரயோஜனமில்லாத கான்கிரீட் குவியலைக் காண்பித்த பாவத்துக்கு ஆயிரம் லிங்கங்கள் மூலம் கழுவாய் தேடிக்கொண்டார் ரா. அடுத்து உங்களை ஒரு பெரிய அருவியில் குளிக்கக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் ரா. ராஜூ, நவீன் இருவரும் அகண்ட தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பரணிக்குத் திருச்சி. சின்ன வயதில் அருவிகளை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத அப்பாவி ஜீவன்கள்.

    ஆனால் நான் அப்படியில்லையாக்கும். இராஜபாளையத்துக்காரன். என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே ஏழெட்டு அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டுவது தெரியும். ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் அய்யனார் கோயில் அருவி. முப்பழபூசை, காது குத்த, முடியிறக்க என்று அவ்வப்போது போய் அருவியில் ஆட்டம் போடும் கொடுப்பினை உள்ள ஆத்மா. போதாக் குறைக்கு, திருக்குற்றாலத்துக்கு எங்கள் ஊரைத் தாண்டித்தான் போயாக வேண்டும். ஆனால், நான் மூன்று முறைதான் திருக்குற்றாலம் போய் வந்திருக்கிறேன் என்பது வரலாற்றுச் சோகம்.. அதை விடுவோம்.

    அருவி எனக்குத் தண்ணிபட்ட பாடு. ஆகவே, என்னத்த பெரிய அருவி, என்னத்த பெரிய தண்ணீர் என்று எகத்தாளமாக ரா-வுடன் வண்டியில் ஏறினேன். ஏறிக் கொஞ்ச தூரம் போனதும் இறங்குங்கள் என்றார். எல்லாத்தையும் இங்கேயே கழட்டி வைச்சுட்டுக் குளிக்கிற மாதிரி வாங்க அப்பு என்றார். வேனுக்கு வெளியே அம்புட்டையும் உருவிப் போட்டு உள்ளாடைக்கு மேல் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

    பரணி சரியான நாட்டுக் கட்டை. கடகடவெனக் காட்டுப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். எனக்குக் காலில் செருப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைக்குப் போய் சாண்டல்ஸ் இரண்டு இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டேன். வெறும் துண்டுடன் அங்கிருந்த பெண்களைப் பார்த்துச் செருப்புக் கேட்கக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனாலும் கால் நோகுதே ?

    அவர்களும் எதையோ தின்றுகொண்டே முகத்தை மூடிச் சிரித்துக் கொண்டே செருப்பைக் கொடுத்துப் போ போ என்றார்கள். எதிரே கூட்டம் கூட்டமாய்க் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குதூகலத்தில் ஈடுபட்டால் மட்டுமே வரக்கூடிய மனக்கிளர்ச்சி எல்லார் முகத்திலும் தெரிவதைக் கவனித்தேன். அருவிக் குளியல் அனைவருக்கும் பிடித்தமானதுதான்.                                                   

    ஆனாலும் எதிரே வந்தவர்களின் முகங்களில் அதையும் தாண்டி ஓர் ஆனந்தம். இடுப்பில் உட்கார்ந்திருந்த அம்மணமான கைக்குழந்தைகள் கூட எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன. பெண்கள் ஈரக்கூந்தலை விரித்துப் போட்டபடி சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர். கொஞ்ச தூரம் நடக்கத் தொடங்கியதும் அருவியின் ஓசை கேட்கத் தொடங்கியது. உயரமான ஓரிடத்திலிருந்து மரங்களின் வேர்களைப் பிடித்தவாறு பாதாளத்தில் இறங்க வேண்டியிருந்தது. படியெல்லாம் இல்லை.

    பரணி வெகு லாகவமாக இறங்கினார். ராஜூ யோகா பயிற்சி செய்யும் பார்ட்டி. சொல்லவே வேண்டாம். வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எப்போதும் ஒரு விரைவு இருக்கும் அவரிடம். நவீன் ஒப்புநோக்க எங்களை விட இளையவர். நானும் மகாதேவனும் கொஞ்சம் தடுமாறிக் கீழே இறங்கினோம். அருவியில் குளித்தவர்கள் நடந்து நடந்து பாதை ஈரமாகிச் சொத சொதவென்றிருந்தது. பிடிமானமில்லாத செருப்பு வழுக்கத் தொடங்கியது.

    ஒருவரையொருவர் பற்றிக் கொண்டு அருவியை நோக்கி நடந்தோம். ஒரு கட்டத்தில் திரைவிலகியதுபோல் திடீரென எங்கள் முன் தொலைவில் அருவி தோன்றியது. கடவுளே !!!…..

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • 2016-07-14-08-18-27

    பக்தி மற்றும் ஆன்மீகம் மீது ஒருவருக்கு நம்பிக்கை வந்துவிட்டால் மறைக்கவே முடியாது என்பதற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களே ஒரு உதாரணம்.. 

    ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை கொண்ட அவர், திராவிட கட்சியில் சேர்ந்த பிறகு புராண, இதிகாச படங்களை அறவே தவிர்த்தார். படங்களில் அவர் தத்துவம் பேசும் காட்சிகளின் பின்புலத்தில்கூட கடவுள் படங்களை விட, புத்தர், அண்ணா போன்ற படங்களே இருக்கும். ஆனாலும் இறை நம்பிக்கையை எம்ஜிஆர் மறுக்கவேயில்லை.

    தனிப்பட்ட நம்பிக்கையில் தலையிட அரசியல் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்லவே, தனிப்பிறவி படத்தில் முருகன் வேடம் போட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். தனது தாய்தான் தனக்கு கண்கண்ட தெய்வம் என்று உருகிய எம்ஜிஆர், தான் வாழ்ந்த வீட்டிலிலேயே தாய்க்காக கோவில் கட்டி வழிப்பட்டார். மூகாம்பிக்கை அம்மன் தனது தாய் வடிவில் காட்சியளிப்பதாக அவர் கூறியபோது திராவிட தரப்பிலிருந்து எந்த விமர்சனமும் வரவில்லை. உடுப்பி கொல்லூர் மூகாம்பிகையை எம்ஜிஆர் நேரடியாக வழிபடத்தொடங்கியதுடன் பெரும் பொருட்செலவில் கூடிய நீளமான தங்க வாள் ஒன்றையும் கோவிலுக்கு அளித்து. பக்தியின் சரணாகதித்துவத்தை பட்டவர்த்தனமாக காட்டினார்.

    இறைமறுப்பு பிம்பமாக இன்றளவு திகழும் தந்தை பெரியாரை அரசியல் முன்னோடியாக கொண்டாலும், பக்தியை மறைத்து மறைத்து அவர் வழிபட்டதில்லை. பக்தியின் பலமே இதுதான். நம்பிக்கையை மனதில் விதைத்து ஆன்மீக பாதையில் ஒழுக்க நெறிகளோடு சுத்தமான பாதையில் பயணிக்க வைப்பதுதான் அதன் சிறப்பம்சம்.

    இறை நம்பிக்கை உள்ளவர்கள் யாருக்கும் தங்கள் பக்தி, வழிபாட்டு முறைகள் போன்றவற்றை மறைக்கவேண்டிய அவசியமில்லை என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

    கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா? என்ற கேள்விக்கு எம்ஜிசூர் தன் வாயாலேயே அளித்த பதில்கள்…’’நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை’’ என்கிறார்.

    உங்களுக்கு குல தெய்வம் உண்டா? என்ற இன்னொரு கேள்விக்கு, ‘காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி’ என்று தன் குடும்பத்து இஷ்ட தெய்வங்களை தெளிவாகவே பட்டியலிடுகிறார் அவர்.

    அல்லாவின் மேல் ஆணை என்ற வசனத்தை உச்சரிக்க விருப்பமின்றி அம்மாவின் மேல் ஆணை என்று பேசி நாத்திக பாதையை விடமுடியாததால், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மாபெரும் நிறுவனத்தோடு தொழில் உறவையே ஸ்தம்பிக்க செய்தவர் எம்ஜிஆர்.
    அப்படிப்பட்டவர் பின்னாளில் ஆன்மீகவாதியாக மாறி முதலமைச்சர் என்ற வாய்ப்பு கிடைத்தபோது ஸ்ரீரங்கம் உட்பட எண்ணற்ற பிரபலமான கோவில்களின் புணரமைப்பு திருப்பணிகளை செய்தார் என்றால் அதுதான் பக்தி மார்க்கத்தின் அசைக்கமுடியாத சக்தி

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

  • 2016-07-13-09-01-23

    இந்த பகுதியில் உங்கள் வீட்டு குழந்தைகளின் பரதநாட்டிய அரங்கேற்றம், இசைக்கச்சேரிகள் போன்ற தகவல்களை புகைப்படங்களுடன் இடம்பெறச்செய்ய தொடர்பு கொள்ளவும் – 98400 55626

  • 2016-07-11-07-06-06

    நல்லது செய்யாததை நாள் செய்யும், நாள் செய்யாததை நேரம் செய்யும் என்று ஒரு வழக்கு உண்டு.
     
    நம் அனைவருக்கும் சாராசரியாக யமகண்டம், ராகுகாலம் பற்றி தெரிந்துயிருக்கும். காலண்டரில் குளிகை நேரம் என்பதை பார்த்திருப்போம். உண்மையில் குளிகை நேரத்தில் ஒரு வேலையைய் செய்யத்தொடங்கினால், அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பார்கள், ஆயினும் குளிகையில் நல்ல விஷயங்கள் தொடங்குவதில்லை அது ஏன்? அதற்கு காரணம் அவரது தந்தை.
    குளிகையும் அவரது தந்தையையும் சந்திக்கலாமா?
     
    மண்டோதரிக்கு பிரசவ நேரம். வலியால் துடித்தபடி இருந்தாள் இலங்கையின் மகாராணி. இராவணன் 9 கோள்களையும் அழைத்தான், பிரம்ம தேவரையும் அழைத்து அதிஅற்புதமான நேரத்திலேயும், உலகின் தலைசிறந்த ஜாதக அமைப்போடும் தன் பிள்ளை பிறக்க‌ வேண்டும் என ஆணையிட்டான். அதன்படி நவகிரஹங்கள் இராவணன் இஷ்டப்படி இதுவரை யாருக்கும் அமையாத ஜாதகமாக நிற்க வைக்கப்பட்டனர். பிரம்மதேவரும் ஒரு குறையும் இல்லாத ஜாதகத்தை வடிவமைத்தார்.
     
    ஆனால் நவகிரஹங்களுக்கும், தேவர்களுக்கும் இது மிகவும் வேதனையாக இருந்தது. இனி இராவணேஸ்வரனை அழிக்க முடியாது
    என துயரமுற்றனர். அந்த அவஸ்தையினால் சனீஸ்வர பகவான் வியர்த்து வழிந்தார். தன் வியர்வையை எடுத்து எறிந்து கொண்டே இருந்தார். அதே வேளையில் மண்டோதரி அழகிய ஆண் குழந்தையை ஈன்றாள்.
     
    தன் பிள்ளையை இனி எவராலும் அழிக்கமுடியாது என்று இராவணன் கர்வமடைந்தான். அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் பிரம்மதேவரோ மிகுந்த நிம்மதியடைந்தார். நவகிரஹங்களை தனியே அழைத்து, சனீஸ்வரனின் மைந்தன் நம்மை காப்பாற்றியுள்ளான் என்றார். யாருக்கும் எதுவும் விளங்கவில்லை.
     
    பிரம்மனே தொடந்தார், சனி பகவானின் வியர்வை மகனாக அவதரித்துள்ளான். சாதாரணமாக அப்பழுக்கில்லாத ஜாதகத்தை கொண்ட உயிரை நான் படைப்பதில்லை. எனவே நான் மிகுந்த வேதனையில் இருந்தேன். ஆனால், சனி பகவானின் மகன் அக்குறையை நிவர்த்தி செய்து விட்டான், 9 கோள்களும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் தனி ஒருவனாக‌ நின்று, அனைவரின் நற்பலன்களையும் சிதறடித்துவிட்டான். அவனுக்கு குளிகன் எனப் பெயர் இடுகிறேன், என்றார்.
     
    நவகிரஹங்களில் ஒரு இடத்தை தர இயலாது, அதனால் ஒரு நாளில் சில நாழிகைகள் அவனுக்கு தருகிறேன். குளிகனால் கெடுதல் மிகையாக இல்லையென்றாலும், இராவணனின் மகனுடைய அழிவிற்கு உதவியதாலும் சனி பகவானின் மகனாக இருப்பதாலும், குளிகை நேரத்தில் நல்ல விஷயங்களை தொடங்க முடியாது என்றார் பிரம்மர்.
     
    குளிகை நேரத்தில் ஒரு காரியம் தொடங்கினால் அது, தொடரும் என்பார்கள்ஆ. தலால் பெரும் கடனுடையவர்கள் குளிகை நேரத்தில் கடனை அடைக்க முயலுவார்கள். 
     
    இதை தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்கிறார்களோ…
     
    – ரம்யா சுரேஷ்

    ரம்யா சுரேஷ் – சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள – sangemahathi@gmail.com