Tag: பகவான்

  • 2016-08-29-11-24-57

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா கொடியற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இத்கோயிலில் சுவாமிக்கான முக்கியத் திருவிழாக்களில் ஆவணி மூலத் திருவிழா குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி, சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் 8 சிறிய கலசங்களிலும் 2 பெரிய கலசங்களிலும் வைக்கப்பட்ட புனித நீருக்கு வேத மந்திரம் முழங்க பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் கொடி மரத்தில் தர்ப்பைப்புல் கட்டப்பட்டு, சுவாமி, அம்மனுக்குரிய ஆடைகள் கொடிமரத்தில் அணிவிக்கப்பட்டு கொடிமரத்தின் பீடத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு நிறைவு பூஜைகள் நடைபெற்றன.
    செப்டம்பர் 2 ஆம் தேதி வரை இரவில் ஆவணி மூல வீதிகளில் சுவாமி சந்திரசேகரராகவும், அம்மனும் எழுந்தருளி அருள்பாலிப்பர். செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் தினமும் இரவில் சுவாமி திருவிளையாடல் திருக்கோலத்தில் அருள்பாலிப்பார். அதன்படி கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி அளித்தல், மாணிக்கம் விற்றது, தருமிக்கிப் பொற்கிழி அளித்தல், உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண்சுமந்தது, விறகு விற்றது என தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். செப்டம்பர் 11 ஆம் தேதி பகலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை மதுரை வைகை புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெறும்.

  • 2016-08-28-08-07-33

    பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் 10 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விழாவையொட்டி, காலை 10.15 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்து கொடிமரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

    விழாவில், தினமும் உற்சவ விநாயகர் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வருவார். 2-ஆம் நாள் திருவிழா முதல் 8-ஆம் நாள் திருவிழா வரை தினமும் காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறவுள்ளது.

    செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை கஜமுகாசுர சம்ஹாரமும், இரவு திருவீதி உலாவும் நடைபெறும். செப்டம்பர் 2-ஆம் தேதி மயில் வாகனத்திலும், 3-ஆம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உளன. 4-ஆம் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாலை 4 மணியளவில் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்கத் தேரோட்டம் நடைபெறும். இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

    பத்தாம் திருநாளான 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று காலை 9 மணியளவில் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பகல் 12 மணியளவில் மூலவருக்கு ராட்ஷச கொழுக்கட்டை படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணியளவில் ஐம்பெரும் மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • 2016-08-28-08-07-33

    பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் 10 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விழாவையொட்டி, காலை 10.15 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்து கொடிமரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

    விழாவில், தினமும் உற்சவ விநாயகர் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வருவார். 2-ஆம் நாள் திருவிழா முதல் 8-ஆம் நாள் திருவிழா வரை தினமும் காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறவுள்ளது.

    செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை கஜமுகாசுர சம்ஹாரமும், இரவு திருவீதி உலாவும் நடைபெறும். செப்டம்பர் 2-ஆம் தேதி மயில் வாகனத்திலும், 3-ஆம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உளன. 4-ஆம் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாலை 4 மணியளவில் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்கத் தேரோட்டம் நடைபெறும். இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

    பத்தாம் திருநாளான 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று காலை 9 மணியளவில் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பகல் 12 மணியளவில் மூலவருக்கு ராட்ஷச கொழுக்கட்டை படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணியளவில் ஐம்பெரும் மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • 2016-08-28-06-42-21

    காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 1516-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார்.

    அந்தக் கோபுரம் 2010-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

    அதற்குப் பின், மீண்டும் அதே இடத்தில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, 140 அடி உயர ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 2011-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தொடங்கியது.

    2 ஆண்டுகளுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதியிட்டுக் கூறியது. ஆனால், சில நிர்வாகக் குறைபாடு காரணமாக கோபுரம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது ராஜகோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 100 அடியை எட்டியுள்ளது. 111-ஆம் அடியில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    எனவே, ராஜகோபுரப் பணிகளை கும்பாபிஷேகத்துக்கு முன் முடிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதனால், கட்டடப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

  • 2016-08-27-15-53-35

    ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.விசிந்து. இவர் ஐதராபாத் சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு சென்று அவர் நேர்த்திக் கடன் செலுத்தினார்.
    பாவாடை தாவணி உடையணிந்து வந்த சிந்து, பயபக்தியுடன் வேண்டுதல் பொருள்களைத் தலையில் வைத்து சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடைய பெற்றோரும் உடன் வந்தார்கள். சிந்துவின் வருகையால் கோயில் வளாகத்தில் ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் மீண்டும் வருவதாக வேண்டிக்கொண்டேன். அதனையொட்டி இப்போது கோயிலுக்கு வந்து நேர்த்திகடன் செலுத்தியதாகவும் சிந்து தெரிவித்தார். கடவுளின் அருள் வேண்டும் என்று வேண்டினேன். அதேபோல அனைவரின் நலனுக்காகவும் வேண்டினேன். என்றார்.

  • 2016-08-27-15-53-35

    ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.விசிந்து. இவர் ஐதராபாத் சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு சென்று அவர் நேர்த்திக் கடன் செலுத்தினார்.
    பாவாடை தாவணி உடையணிந்து வந்த சிந்து, பயபக்தியுடன் வேண்டுதல் பொருள்களைத் தலையில் வைத்து சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடைய பெற்றோரும் உடன் வந்தார்கள். சிந்துவின் வருகையால் கோயில் வளாகத்தில் ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் மீண்டும் வருவதாக வேண்டிக்கொண்டேன். அதனையொட்டி இப்போது கோயிலுக்கு வந்து நேர்த்திகடன் செலுத்தியதாகவும் சிந்து தெரிவித்தார். கடவுளின் அருள் வேண்டும் என்று வேண்டினேன். அதேபோல அனைவரின் நலனுக்காகவும் வேண்டினேன். என்றார்.

  • 2016-08-27-15-39-01

    திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை 2.70 கோடி ரூபாய் வசூலானது.

    திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து திரும்பும்போது, உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்தி வருகின்றனர்.

    வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 2.70 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 67,261 பக்தர்கள் தரிசித்தனர். 38,578 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    தர்ம தரிசன பக்தர்கள் சுமார் 8 மணி நேர காத்திருப்புக்குப் பின் ஏழுமலையானை தரிசித்தனர். நடைபாதை பக்தர்களுக்கு 6 மணி நேரம் ஆனது.

  • 2016-08-27-15-35-42

    காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 1516-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார்.

    அந்தக் கோபுரம் 2010-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

    அதற்குப் பின், மீண்டும் அதே இடத்தில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, 140 அடி உயர ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 2011-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தொடங்கியது.

    2 ஆண்டுகளுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதியிட்டுக் கூறியது. ஆனால், சில நிர்வாகக் குறைபாடு காரணமாக கோபுரம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது ராஜகோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 100 அடியை எட்டியுள்ளது. 111-ஆம் அடியில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    எனவே, ராஜகோபுரப் பணிகளை கும்பாபிஷேகத்துக்கு முன் முடிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதனால், கட்டடப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

     

  • 2016-08-27-15-35-42

    காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 1516-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார்.

    அந்தக் கோபுரம் 2010-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

    அதற்குப் பின், மீண்டும் அதே இடத்தில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, 140 அடி உயர ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 2011-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தொடங்கியது.

    2 ஆண்டுகளுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதியிட்டுக் கூறியது. ஆனால், சில நிர்வாகக் குறைபாடு காரணமாக கோபுரம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது ராஜகோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 100 அடியை எட்டியுள்ளது. 111-ஆம் அடியில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    எனவே, ராஜகோபுரப் பணிகளை கும்பாபிஷேகத்துக்கு முன் முடிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதனால், கட்டடப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

     

  • 2016-08-26-08-50-36

    ஆத்திச்சூடி தெரியும்,  அதைப் பாடிய ஔவைப் பாட்டியையும் தெரியும். ஆனால் அவர் ஒரு சித்தர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

    நமது தமிழ் மூதாட்டி ஔவை ஒரு பெண் சித்தர்தான் என்கிறார்கள், சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்  அன்பர்கள். அதற்கு அவரின் பாடல்களையே ஆதாரமாக காட்டுகிறார்கள் அவர்கள். ஔவையார் பெண் சித்தர் என்பதற்கு அவரது ஔவைக் குறள், வினாயகர் அகவல் போன்றவைகளே சாட்சி என்கிறார்கள்.

    நரம்பெனும் நாடி யிடைமினுக் கெல்லாம்

    உரம்பெறும் நாடியொன் றுண்டு

    உந்தி முதலாகி ஓங்காரத் துட்பொருளாய்

    நின்றது நாடி நிலை

    உந்தியு னுள்ளே ஒருங்கச் சுடர்பாய்ச்சில்

    அந்தி யழலுருவ மாம்

    நாபி யகத்தே நலனுற நோக்கிடில்

    சாவது மில்லை யுடம்பு

    ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்

    ஓவிய மாகு முடம்பு

    மயிர்க்கால் வழியெல்லாம் மாய்கின்ற வாயு

    உயிர்ப்பின்றி யுள்ளே பதி

    வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை

    ஈசன்றன் வாசலி லேற்று.

                                   – ஔவையார்

     

    இந்த பாடலில் நாடிகளைப் பற்றி நுணுக்கமாகவும், விரிவாகவும் பேசியிருக்கிறார் ஔவைப் பாட்டி.

    உடலிலுள்ள 72000 நாடிகளில் முதன்மையான நாடிகள் பத்து. இவற்றுள் முதன்மையான நாடியானது, உந்தி வழியாக சிரசு வரை கீழும் மேலுமாகப் பதிந்திருக்கிறது. நாடிகளின் இயக்கங்களைத் தெரிந்து கொண்டு, அதன் வழியாக செறிவாகி, ஒடுங்கி, நீடுகின்ற ஒளியைக் காண்பதே அறிவின் சிறப்பாகும் என்கிறார் ஔவையார். அவ்வாறு சிவத்தை அறிந்து, உணர்ந்து, அடங்கியிருப்பவர் நாடிகளில் எல்லாம் சிவம் நிறைந்திருக்கும்.

    வாயுவின் வழக்கத்தை அறிந்து, செறிந்து, அடக்கினால் ஆயுள் பெருக்கம் உண்டாகும். வெளியே போகின்ற வாயுவை உள்ளே அடக்கப் பழகிக் கொண்டால் தேகம் சிவத்துக்கு ஒப்பாகும். இதில் விசேஷம் என்னவென்றால், வழக்கமான சித்தர் பாடல்களைப் போல மறைபொருளாகச் சொல்லப்படாமல், எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி எளிமையாகவே சொல்லிவிட்டார் ஔவையார்.

    மேலும் ஐந்து புலன்களையும் ஒடுக்கி, மெய்யறிவான சிவத்தோடு ஒன்றி இருந்தால் சரீரம் அழியாது என்றும், வாயுவை வசப்படுத்தி, சுவாசத்தை உள்ளடக்கப் பழகியவர்களுக்கு எளிதில் சிவத்தியானம் வாய்க்கும் என்றும் சிவத்தியானம், குண்டலினி யோகம், வாசியோகம் பற்றி ஔவை எளிமையாக விளக்குகிறார்.

    அட்டமகா சித்திகளை ஒரு வருடத்தில் அடைந்துவிடலாம் என்பது ஔவையின் கருத்து. ஆனால் சித்த சமாதி நிலைக்கு, சிவானந்த சிவயோக சித்திக்கு பல வருடங்கள் முயன்று உழைக்க வேண்டும் என்கிறார். வினாயகர் அகவலில் குண்டலினி யோகம் பற்றி இதுபோல் பல எளிமையான தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார் அருந்தமிழ் மூதாட்டி ஔவை.