Tag: 18ம்

  • September 18 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் – நலம் 
    மிதுனம் – சுகம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – வெற்றி  
    கன்னி –  போட்டி 
    துலாம் –  அசதி
    விருச்சிகம் – பாராட்டு 
    தனுசு –     பொறுமை 
    மகரம் –   நற்செயல்
    கும்பம் – புகழ் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – சுவாதி
     

  • September 18 Purattasi 1

    செப்டம்பர் 18 – புரட்டாசி 1
    விகாரி வருடம் – புரட்டாசி 1
    18-செப்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    4.21
    நட்சத்திரம்    :    அசுவினி    கா    6.09
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • August 18 Aavani 1

    ஆகஸ்ட் 18 – ஆவணி 1
    விகாரி வருடம் – ஆவணி 1
    18-ஆக-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    திரிதியை    இ    12.01
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    மா    4.44
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • 18 Siddhargal Sadhuragiri Malai

    மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற 4 மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில், அகத்தியர் முதலான 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்ட தலமாகும். இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500அடி உயரத்தில் அமைந்துள்ளது. 

    சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

    பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

    தவிர கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம் செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாகபயன்படுத்த வேண்டும்.

    சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல சாப்டுர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர்  மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் , வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. 
    மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர்  மலை  பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    சதுரகிரி மலையில் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் என ஐந்து கோயில்கள் உள்ளன.  வருடந்தோறும் ஆடி அமாவாசை , தை அமாவாசை  மற்றும் சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
     

  • July 18 Indraya naal eppadi

    ஜூலை 18 – திருவோண விரதம் 
    விகாரி வருடம் – ஆடி 2
    18-ஜூலை-2019 வியாழன் 
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    துவிதியை    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    திருவோணம்    இ    1.52
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்,பூசம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

  • June 18 indraya naal eppadi

    ஜூன் 18 – இன்றைய நல்லநேரம்
    விகாரி வருடம் – ஆனி 3
    18-ஜூன்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    ம    3.12
    நட்சத்திரம்    :    மூலம்    ம    12.46
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : ரோகிணி, மிருகசீரிடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • May 18 Vaigasi visagam

    மே 18 – வைகாசி விசாகம்
    விகாரி வருடம் – வைகாசி 4
     பவுர்ணமி 
    புத்த பூர்ணிமா, 
    வைகாசி விசாகம், 
    பழநி, 
    திருமோகூரில் தேர்
    18-மே-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    இ    3.24
    நட்சத்திரம்    :    விசாகம்    இ    3.05
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • parthasarathy-koilil-sorgavasal-thirappu

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் டிசம்பர் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில் களில் உள்ள பெருமாளை வழிப்பட்டு உள்ளனர்.

    இந்தகோவிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கிறார்.

    இந்தக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந்தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேணுகோபாலன், காளிங்கர்நர்த்தன, சக்கரவர்த்தித்திருமகன் திருக்கோலங்களில் விழா நடந்து வருகிறது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) ஏணிக்கண்ணன் திருக் கோலம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து ராப்பத்து திருவிழாவின் முதல் நாள் திருவிழா வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு சாமி உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தொடர்ந்து அன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை மூலவர் தரிசனம் நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 12 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 19-ந்தேதி ராப்பத்து 2-ம் நாள் திருவிழா தொடங்கி வரும் 28-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    குறிப்பாக 24-ந்தேதி முத்தங்கி சேவை நடக்கிறது. ராப்பத்து திருவிழா நாட்களில் தினசரி மாலை 5.30 மணிக்கும், 27-ந்தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. அன்று ‘ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உற்சவம்’ நிகழ்ச்சியும் நடக்கிறது.

  • navathirupathy-koilgalil-sorga-vasal

    திருநெல்வேலியில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து, இராப்பத்து திருவிழா தொடங்கியது. வரும் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    நவதிருப்பதி கோவில்களில் முதலாவது தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், 7வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திரு அத்யயன உற்சவம் (பகல்பத்து, இராப்பத்து திருவிழா) நேற்று தொடங்கியது.

    காலையில் சுவாமி உடையவர் சன்னதியில் இருந்து ஆச்சாரியார்களுடன் புறப்பட்டு, சுவாமி நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி அருளிப் பாடு பெற்று, பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாள் நாச்சியார், சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினர். பின்னர் திருப்பல்லாண்டு அரையர்சேவை நடந்தது.

    பகல்பத்து திருவிழா திருமொழி திருநாளாகவும், இராப்பத்து திருவிழா திருவாய்மொழி திருநாளாகவும் கொண் டாடப்படுகிறது. பகல்பத்து திருவிழா நாட்களில் தினமும் காலையில் பெருமாள் நாச்சியார் ஆஸ்தானத்தில் இருந்து அலங்கார வாத்தியங்களுடனும், சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தான த்தில் இருந்து தாலாட்டு வாத்தியங் களுடனும் எழுந்தருளுகின்றனர். தினமும் அரையர் சேவையாக சென்னி யோங்கு, திருப்பாவை, ஊனேறு செல்வம் போன்றவை நடைபெறும்.

    இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இரவில் சொர்க் கவாசல் திறக்கப்படுகிறது. விழாவின் நிறைவு நாளான வருகிற 29-ந்தேதி சுவாமி நம்மாழ்வார் வீடு விடை திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், தக்கார் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

  • sabarimalai-18-padigalin-sirappu

    சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு உகந்த மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. அந்த படிகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கும்.

    முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.

    இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும்.

    மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.

    நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.

    ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும்.

    ஆறில் இருந்து பதிமூன்று வரை உள்ள எட்டு படிகளும் அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.

    பதினான்காம் படி சாத்வீகம் என்பதையும், பதினைந்தாம் படி ராஜஸம் என்பதையும், பதினாறாம் படி தாமஸம் என்பதையும் குறிக்கும். இம்மூன்றும் மூன்று குணங்கள் ஆகும். சோம்பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடியது இந்த மூன்று படிகள்.

    பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும்.

    பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக்கும். மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.