Tag: 16

  • December 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சுகம்
    ரிஷபம்         –    சாதனை
    மிதுனம்     –   முயற்சி
    கடகம்         –  பெருமை
    சிம்மம்         –   அன்பு
    கன்னி         –    ஆர்வம்
    துலாம்         –     சோதனை
    விருச்சிகம்     –  சிரமம்
    தனுசு         –     நன்மை  
    மகரம்         –    சுபம்    
    கும்பம்         –      வருத்தம்
    மீனம்         –      துணிச்சல்
    சந்திராஷ்டமம்    –      திருவாதிரை

     

  • December 16 2023 chadurthi

    டிசம்பர் 16 – சங்கடஹர சதுர்த்தி
    சோபகிருது வருடம் – கார்த்திகை 30
    16-டிச-2023 சனி 4
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி இ 11.9
    நட்சத்திரம் : உத்திராடம் கா 9.25
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • November 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பொறுமை
    ரிஷபம்         –    நற்செயல்
    மிதுனம்     –   லாபம்
    கடகம்         –  ஆதரவு
    சிம்மம்         –   வரவு  
    கன்னி         –    கவனம்
    துலாம்         –     செலவு  
    விருச்சிகம்     –  புகழ்
    தனுசு         –     பாராட்டு
    மகரம்         –    உற்சாகம்
    கும்பம்         –       அன்பு  
    மீனம்         –      பக்தி
    சந்திராஷ்டமம்    –    ரோகிணி

  • November 16 2023 Subamuhurthanaal

    நவம்பர் 16 வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 30
    சுபமுகூர்த்த நாள்
    16-நவ-2023 வியாழன் ஜமாதுல் அவ்வல் 2
    தேசிய பத்திரிகை தினம்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : திரிதியை ம 1.34
    நட்சத்திரம் : மூலம் ந.இ 3.49
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Murugaperuman 16 vagai Kolangal

    ஞானசக்திதரர் கோலம்:
    இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

    கந்தசாமி கோலம்:
    இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

    ஆறுமுக தேவசேனாபதி கோலம்:
    இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

    சுப்பிரமணியர் கோலம்:
    இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

    கஜவாகனர் கோலம்:
    இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

    சரவணபவர் கோலம்:
    தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

    கார்த்திகேயர் கோலம்:
    இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

    குமாரசாமி கோலம்:
    இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

    சண்முகர் கோலம்:
    இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

    தாரகாரி கோலம்:
    தாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

    சேனானி கோலம்:
    இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

    பிரம்மசாஸ்தா கோலம்: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

    வள்ளிகல்யாணசுந்தரர் கோலம்:
    இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

    பாலசுவாமி கோலம்:
    இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

    சிரவுபஞ்சபேதனர் கோலம்:
    இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

    சிகிவாகனர் கோலம்:
    மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

     

  • October 16 2023 Rasipalan

    அக்டோபர் 16 – இன்றைய ராசிபலன் …
    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சாந்தம்
    ரிஷபம்         –    பாராட்டு
    மிதுனம்     –   நிறைவு
    கடகம்         –  சலனம்
    சிம்மம்         –    இரக்கம்
    கன்னி         –    பரிவு
    துலாம்         –     மேன்மை  
    விருச்சிகம்     – பொறுமை
    தனுசு         –     அச்சம்
    மகரம்         –    ஆர்வம்
    கும்பம்         –     எதிர்ப்பு
    மீனம்         –      பரிசு  
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுபதி

  • October 16 2023 Indrayanaal

    அக்டோபர் 16 – சந்திர தரிசன நாள்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 29
    16-அக்-2023 திங்கள்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை ந.இ 1.7
    நட்சத்திரம் : சுவாதி கா 8.17
    யோகம் : அமிர்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • September 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  பிரமை
    ரிஷபம் –    தடங்கல்
    மிதுனம் –   மகிழ்ச்சி
    கடகம் –    பயம்
    சிம்மம் –   கவலை
    கன்னி –    முயற்சி
    துலாம் –     ஈகை
    விருச்சிகம் – களிப்பு
    தனுசு –     ஆதாயம்
    மகரம் –    ஆதரவு
    கும்பம் –     எதிர்ப்பு
    மீனம் –      செலவு
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி

  • September 16 2023 Indrayanaal

    செப்டம்பர் 16 – சந்திர தரிசன நாள்
    சோபகிருது வருடம் – ஆவணி 30
    16-செப்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : பிரதமை கா 9.32
    நட்சத்திரம் : உத்திரம் கா 8.41
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • narashimmar abishegam

    உலக நன்மை வேண்டி புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற  16 அடி உயர லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 7 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற அபிஷேகம்.

    புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவில் வளாகத்தின் அருகே  அமைந்துள்ள  16 அடி உயர லட்சுமி நரசிம்மன் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 7 மணி நேர தொடர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் 108 கிலோ சந்தனம், விபூதி மற்றும் 108 லிட்டர் தேன், தயிர், பால் மற்றும் கரும்புச்சாறு இளநீர் உட்பட பல்வேறு பூஜை பொருட்களைக் கொண்டு காலை 10 மணிக்கு துவங்கிய அபிஷேகம் மாலை 5 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து 7 மணி நேரம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால் சகல விதமான நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அபிஷேகம் குறித்து ஆலய பீடாதிபதி நடத்துர் ஜனார்த்தன சுவாமிகள் கூறுகையில்: புதுச்சேரி விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலேயே உயரமான லட்சுமி நரசிம்மரின் சிலை இங்குதான் அமைந்துள்ளது. இங்கு அமையப்பெற்ற லட்சுமி நரசிம்மரின் சிறப்பு என்னவென்றால் 108  திவ்ய தேசங்களில் 54 திவ்ய தேசங்களுக்கு இங்கு அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் விஜயம் புரிந்து தற்போது இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்என்றும் சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறும் மகா அபிஷேகத்தை பக்தர்கள் நேரில் கண்டால் திருமண தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நோய் நொடிகள் நீங்கும் எனவே பக்தர்கள் அனைவரும் சுவாதி நட்சத்திர அபிஷேகத்தில் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்து லட்சுமி நரசிம்மரின் அருளைப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.