Tag: மே1

  • november 17 rasipalan

    நவம்பர் 17 – கார்த்திகை 1 ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –      சாந்தம் 
    ரிஷபம் –     சுகம் 
    மிதுனம் –     உழைப்பு
    கடகம் –      கவலை
    சிம்மம் –      கிர்த்தி
    கன்னி –      உற்சாகம் 
    துலாம் –      நற்சொல்
    விருச்சிகம் –       நிறைவு
    தனுசு –       நிம்மதி
    மகரம் –      ஓய்வு
    கும்பம் –     விருத்தி
    மீனம் –       சிந்தனை
    சந்திராஷ்டமம்    –    உத்திரம், அஸ்தம்

     

  • November 01 2021 Rasipalan

    நவம்பர் 1 – ஏகாதசி நாள் ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     அமைதி 
    ரிஷபம் –     பொறுமை 
    மிதுனம் –     நஷ்டம் 
    கடகம் –      அனுகூலம் 
    சிம்மம் –      வெற்றி
    கன்னி –      மேன்மை 
    துலாம் –      தெளிவு
    விருச்சிகம் –       நலம் 
    தனுசு –       சாந்தம் 
    மகரம் –      நன்மை 
    கும்பம் –     வரவு
    மீனம் –       ஜெயம் 
    சந்திராஷ்டமம்    –    சதயம் 

  • November 01 2021 Sarva egadasi

    நவம்பர் 1 – சர்வ ஏகாதசி
    பிலவ வருடம் – ஐப்பசி 15
    01-நவ-2021 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    கா    9.58
    நட்சத்திரம்    :    பூரம்    கா    10.21
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Karaikaal ammayar puranam – Part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சோழநாட்டில் 
    ஒளிரும் சங்குகள் ஒதுங்கும் 
    கடற்கரை நகரம் திருக்காரைக்கால்.

    அது ஒரு துறைமுகப்
    பட்டினமும் கூட.  எந்நேரமும் 
    ஏற்றுமதி இறக்குமதி 
    என நகரெங்கும் 
    ஏக பரபரப்பு இருக்கும்.

    காரைக்காலில் 
    அறநெறி தவறாத 
    வாய் நெறி மிக்க சிவநெறி வணிகர் 
    ஒருவர் வாழ்ந்து வந்தார்.

    அவர் தான் 
    அந்நகர 
    வணிகர்களின் தலைவர். பெயர் தனதத்தர்.

    வைசியர் குலத்
    தவப்பயன் காரணமாக அவருக்கு 
    ஒரு செல்ல மகள் பிறந்தாள்.

    அவளுக்கு 
    இறைவன் குறித்து வைத்திருந்த பெயர் இரண்டு.

    முதலாவது பெயர் புனிதவதி.

    குழந்தைப் பருவத்திலேயே 
    சிவபக்தி நிறைந்திருந்தது. 
    வளரும் பருவத்தில் 
    அவள் உச்சரிப்பில் 
    சிவம் நாமமே மிகுந்திருந்தது.

    மலரும் காலத்தில் 
    அழகிற் சிறந்த 
    அழகுக் கொழுந்தாய் மிளிர்ந்தாள்.

    தோழிகளுடன்
    விளையாடும்போது கூட சிவமயமாய் இருந்தாள். 

    தமிழ்ப் புலமையும் 
    தமிழ் இசையும் இறையருளால் 
    இயல்பாய் அவளோடு இணைந்திருந்தது.

    சிவனடியார்களைக் கண்டால் போதும் போட்டது போட்டபடி 
    விட்டு விட்டு 
    வாசலுக்கு ஓடிப்போய் பாதம் பணிந்து 
    வீட்டிற்குள் அழைப்பாள்.

    திருவமுது படைப்பாள். நெஞ்சுருக 
    நஞ்சுண்டவரின் 
    கதை கேட்பாள். கைநிறைய 
    பொன் பொருள் கொடுத்து மனம் நிறைவாள்.

    பருவ வயது 
    நெருங்கி வந்தது.
    உருவம் 
    ஊர் கண்படும்படி சாமுத்திரிகா லட்சணப்படி வனப்புமிகு ஆனது. பேரழகுப் பெட்டக்கமாய் புனிதவதி திகழ்ந்தாள்.

    சிவபெருமான் மீது தணியாத காதல் கொண்டிருந்த 
    புனிதவதிக்கு நாகப்பட்டினம் 
    நிதிபதி என்னும் 
    பெரு வணிகர்  வீட்டிலிருந்து மூதறிவாளர்கள் மூலம் கல்யாண 
    விசாரணை வந்தது.

    நிதிபதியின் மகன் பரமதத்தனே
    மணம் பேச வந்த
    தூதுவர்களின் மனமகன்.

    தனதத்தர் 
    குலம் 
    குடி 
    கோத்திரம் 
    குடும்பம்
    ஜோதிடம் 
    மணமகன் 
    என சகலமும் பார்த்து 
    சரி சொன்னார்.

    பண்டைய காலத்தில் பெண் வீட்டில்தான் திருமணம் என்பது மரபு.

    சீதைக்கும் திரௌபதிக்கும் தமயந்திக்கும் 
    தாய் வீட்டில் தானே திருமணம் நடந்தது !

    தந்தை திதிபதியும் மணமகன் பரமதத்தனும் உறவினர் புடை சூழ காரைக்கால் வந்தனர்.

    சிறப்பான செல்வச் செழிப்பான திருமணம் 
    காரைக்கால் 
    அதுவரை கண்டிராத வகையில் நடந்தேறியது.

    " 'மயில்' போன்ற 
    புனித வதிக்கு 
    'காளை' போன்ற பரமதத்தனுக்கும் ஒத்துவராதே….ஆகாதே ! "
    என்று கணித்த 
    மூத்த ஜோதிடர்களின் மெல்லிய குரல் ஒலிகள் 
    மங்கல வாத்தியத்தாலும் ஊர்மக்கள் வாழ்த்தொலிகளாலும் முற்றிலுமாய் யாருக்கும் கேட்காமல் போனது.

    இல்வாழ்க்கை 
    இனிதே தொடங்கியது.

    தனது ஒரே மகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்ப மனமில்லை 
    தனதத்தருக்கு.

    சம்பந்தி வீட்டோடு கலந்துபேசி அவர்களின் சம்மதத்தோடு 
    தன் வீட்டு அருகே 
    தனி வீடு பார்த்து 
    குடி அமர்த்தினார்.

    பரமதத்தனுக்கு காரைக்காலிலையே பணம் கொட்டும் 
    தொழில் அமைத்தார் மாமனார் தனதத்தர்.

    காதலும் 
    வணிகமும் கைகூட எக்குறையும் இன்றி புனிதவதி -பரமதத்தன் இல்வாழ்க்கை 
    நல் வாழ்க்கையாகத் தொடர்ந்தது.

    சிவபக்தியும் 
    சிவனடியார் சேவையும் கிஞ்சிற்றும் பாதிக்காமல் முன்னைவிட சிறப்பாக செய்து வந்தாள்
    திருமதி புனிதவதி.

    நாடி வந்த சிவனடியார்களுக்கு நவமணிகள் தந்தாள்.
    உயர்ந்த 
    புத்தாடைகள் தந்தாள்.
    வேண்டுவன யாவும் பரிவோடு தந்தாள்.

    கவி பாடும் 
    தமிழ் புலவர்களுக்கு பெரும் பொருள் தந்து பேணிக் காத்து வந்தாள் புண்ணியவதி புனிதவதி.

    இல்லத்தில் 
    கணவன் 
    இல்லாத போதும் திருத்தொண்டர்கள் வராதிருந்த சமயத்திலும் பரம்பொருளின் திருவடிகளைத் தியானித்து 
    பேரன்பின் வெளிப்பாடாய் ஒளிர்ந்தாள் புனிதவதி.

    ஒருநாள் 
    பரமதத்தனிடம் 
    வணிகம் பேச வந்த வணிகன் ஒருவன் 
    இரு மாங்கனிகளை மரியாதை நிமித்தமாக வழங்கி 
    அக்கனிகளின் சுவையை பெருமைப்பட எடுத்துரைத்தான்.

    பரமதத்தன் 
    அவற்றை 
    அன்போடு வாங்கி 
    ஏவலனை அழைத்து வீட்டில் கனிவோடு காத்திருக்கும் கனிமொழியாளிடம் கொடுத்து 
    வரச் சொன்னான்.

    கனிகளை வாங்கிய புனிதவதி 
    கண்ணாளனுடன் 
    மதியம் உண்ணலாம் என பத்திரமாக ஓரிடம் வைத்தாள்.

    அப்போது 
    வாசலிலே 
    ஓர் அழைப்பு.

    சிவமணம் கமழ 
    சிவநாமம் ஒலித்தபடி 
    ஒரு சிவனடியார் நின்றிருந்தார்.

    மகிழ்ச்சியின் உச்சிக்கே போன புனிதவதி வாசலுக்கு விரைந்து சிவனடியார் 
    பாதம் பணிந்து 
    புனித நீரால்
    பாதம் கழுவி 
    வீட்டினுள் 
    அழைத்து வந்தாள்.

    ஆசனம் தந்து அமரச்சொல்லி 
    திருவமுது படைக்க
    உட்புறம்  சென்றாள்.

    வீட்டில் அப்போது 
    அமுது மட்டுமே 
    தயாராக இருந்தது. காய்கறிகள் ஏதும் போதுமானதாய் இல்லை.

    கவலை கொண்ட புனிதவதிக்கு கணவன் கொடுத்தனுப்பிய
    கனிகள் 
    ஞாபகத்திற்கு வந்தன.

    சமாளித்து விடலாம் 
    என துள்ளிக்குதித்து அமுது படைத்து 
    மாங்கனி ஒன்றை 
    நறுக்கி வைத்தாள்.

    வரும்போது 
    தளர்ந்து வந்த சிவனடியார்
    வயிறார உண்டார். மனதார வாழ்த்தினார். ஆசி கூறி 
    விடை பெற்றார்.

    புனிதவதி மனம் 
    நிறைந்து போனாள். அன்றைய 
    சிவ சேவையை 
    எண்ணி 
    பூரித்துப் போனாள்.

    மதிய உணவருந்த 
    'காளை' பரமதத்தன் வீட்டிற்கு வந்தான்.
    'மயில்'  புனிதவதி 
    தோகை விரித்துப் பரிமாறினாள். 

    மீதமிருந்த கனியைக் 
    கணவனுக்குத் தந்து 
    அவன் ருசிப்பதை ரசித்திருந்தாள்.

    "இப்படி ஒரு ருசியா…. தேவ அமுது போல் இருக்கிறதே….!"
    எச்சிலூற திளைத்தவன் இன்னொரு கனியையும் கேட்டான்.

    புனிதவதி 
    துடித்துப் போனாள்.

    'என்ன சொல்வது ?சிவனடியார் வந்த நிகழ்வை சொல்வதா ?அவருக்கு 
    மாங்கனியைத் தந்த கதையைச் சொல்வதா ?

    இரண்டில் ஒன்று தனக்குத்தான் என எண்ணி அவருக்கு கொடுத்து விட்டதாக நியாயப்படுத்துவதா ?

    உண்மையைச் சொல்வதா?
    ஏதேனும் சொல்லி சமாளிக்கலாமா?'

    குழப்பத்துடன் 
    'சரி' என்கிற மாதிரி தலையை 
    அசைத்துக் கொண்டே சமையலறைக்கு ஓடியவள் சதாகாலமும்
    வணங்கும் சங்கரனை வேண்டி நின்றாள்.

    'அடியவர் அல்லல் களையும் அருட்கடலே!' என்ற பக்தையின் 
    குரல் கேட்டு 
    பேரருளாளர் எம்பிரான் மாங்கனி ஒன்றை 
    அவளது இறைஞ்சிய கரங்களில் 
    மந்திரமாய் வைத்தார்.

    கண் திறந்த 
    புனிதவதி 
    கருணைக் கடலுக்கு நன்றி கூறி 
    உணவருந்திக் கொண்டிருந்த கனவனிடம் ஓடி மாங்கனியைத் தந்து முகம் பார்த்து நின்றாள்.

    அக்கனியைச் சுவைத்த கணவன் பரமதத்தன்,

    "புனிதவதி….!

    முதலில் சாப்பிட்ட மாம்பழத்தின் சுவைக்கும் இப்பழத்தின் ருசிக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

    இதுவரை 
    நான் சுவைத்திராத அதிமதுர ருசி….!

     ஆஹா…… என்ன ருசி…!

    இது நிச்சயம் 
    அந்த வணிகன் தந்த மாங்கனி அல்ல….

    சுவை மட்டுமல்ல… கனியின் நிறமும் கூட மாறுபட்டுள்ளது.

    மூவுலகிலும் 
    பெறுதற்கரிய இக்கனியை 
    எங்கிருந்து பெற்றாய் ?
    என்ன விசேஷம் ?
    ஏது நடந்தது ?

    இந்த மாங்கனி 
    ரகசியம் கூறு ?"

    ஊடலுக்காக
    விளையாட்டாகத்தான் கேட்டான்  
    கணவன் பரமதத்தன்.

    புனிதவதிக்குத் தான் வார்த்தைகள் 
    வர மறுத்தன.

    உண்மையைச் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தத்தளித்தாள் தெய்வமகள்.

    'கட்டிய கணவனிடம் 
    கற்பு ஒழுக்கம் பேணும் பெண் எதையும் மறக்கக்கூடாது'
    மனது கூச்சலிட்டது.

    மாங்கனிக்காக 
    அண்ணன் வினாயகனுக்கும் 
    தம்பி முருகனுக்கும் சண்டை மூட்டி திருவிளையாடல் புரிந்த
    விளையாட்டு நாயகனை மனதினுள் வேண்டி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல்  ஒப்புவித்தாள் 
    கற்பரசி புனிதவதி.

    விளையாட்டாய் 
    கணவன் கேட்டதற்கு விந்தையாய் 
    மனைவி பதிலளித்ததை இப்போது 
    கணவன் ருசிக்கவில்லை.

    "புனிதவதியே…!
    உலகாளும் சிவன் 
    உன் பிரார்த்தனையை கேட்டு
    கனி தந்தார் என்பதை அவன்மீது அதீத
    நம்பிக்கை உள்ள 
    நான் மட்டுமல்ல….
    எவரும் நம்ப மாட்டார்.

    அது 
    உண்மையெனில் 
    எனக்கு இதே போல் 
    ஓர் அதிமதுரக் கனியை ஆதிநாதரிடம் வேண்டி வரவழைத்து தா….

    அப்போது நம்புகிறேன்."

    இயந்திரம் போல் 
    ஆனால் 
    கண்ணீருடன் 
    பூசை அறைக்கு விரைந்தாள் புனிதவதி.

    'உற்றவிடத்து உதவும் பெருமானே ..!' 
    என கண்ணீர் மல்க வேண்டி நின்றாள்.

    'தன்னிகரில்லாதானே..!நான் பொய் 
    உரைக்க வில்லை என்பதை 
    என் கணவரிடத்து உறுதிபட உணர்த்தி
    நம்பிக்கை ஏற்படுத்து'

    கைகூப்பி நின்றாள்.

    கனிந்துருகி
    கேட்பவர் குரலுக்கு ஓடோடி வந்து 
    விரைவில் அருளும் கைலாயன்
    கனி ஒன்றை உடனே மங்கையர்க்கரசியின்
    முன் வைத்து
    மாயமாய் 
    மறைந்து போனார்.

    மாங்கனியுடன் மங்கலகரமாய் 
    தேவதை போல் வரும் புனிதவதியைக் கண்ணுற்ற பரமதத்தன் வியந்துபோனான். பயந்தும் போனான்.

    புனிதவதி 
    பரமன் தந்த 
    புனிதக் கனியை பரமதத்தனிடம் கொடுத்தாள்.

    அனிச்சையாய் அச்சத்தோடு வாங்கியவன் 
    அதை 
    உற்று நோக்குவதற்குள் அந்த மாங்கனி திடுமென மறைந்து போனது.

    பரமதத்தனின் 
    மனோ பயம் 
    இன்னும் அதிகமானது.

    அவனது மனம் 
    பல கிளைகளாக 
    விரிந்து விரிந்து 
    சிந்திக்க சிந்திக்க 
    பல யோசனைகள் 
    வந்து போயின. அத்தனையும் 
    அச்சம் தந்தன.
    அவன் மனம் 
    அதிகம் தடுமாறியது.

    'புனிதவதியார் மானிடப் பிறவி அல்ல…..
    ஒரு தெய்வப்பிறவி.

    கடவுள் போல
    தொழத் தக்கவர்.
    கணவரென
    தொடத் தக்கவரல்ல.

    அவரோடு வாழ்தல் தெய்வக் குற்றம்.

    அவர் தனக்குப் பணிவிடை செய்வது 
    அதைவிடப் பாவம்.'

    பயபக்தி 
    பயத்தையும்
    பக்தியையும் கூட்டியது.

    வீட்டில் இருக்கும் தெய்வத்தை 
    வணங்கக் கூறியது 'அச்சம்'.

    விலகி இருக்க 
    எச்சரித்தது 'மனது'.

    அதுமுதல் 
    புனிதவதியாருக்கும் பரமதத்தனுக்கும் தாம்பத்தியம் 
    இடைவெளி கண்டது.

    பேச்சு குறைந்தது.
    மரியாதை மிகுந்தது.

    இவ்விஷயம் 
    எவருக்கும் தெரியாது ரகசியமாயும் இருந்தது.

    (காரைக்கால் அம்மையார் புராணம்- தொடரும்)
     

  • October 1 2021 Rasipalan

    அக்டோபர் 1 –  இன்று எந்த ராசிக்கு வரவு… எந்த ராசிக்கு செலவு….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     அமைதி
    ரிஷபம் –     லாபம் 
    மிதுனம் –      வரவு  
    கடகம் –      செலவு
    சிம்மம் –      கவலை
    கன்னி –      துயரம் 
    துலாம் –      பயம் 
    விருச்சிகம் –       ஆதாயம் 
    தனுசு –       தனம் 
    மகரம் –      குரோதம் 
    கும்பம் –     அன்பு 
    மீனம் –       சுகம் 
    சந்திராஷ்டமம்    –    பூராடம், மூலம்

  • October 1 Indraya naal eppadi

    அக்டோபர் 1 – இன்றைய நாள் எப்படி?
    பிலவ வருடம் – புரட்டாசி 15
    01-அக்-2021 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    8.27
    நட்சத்திரம்    :    பூசம்    ந.இ    1.24
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • September 17 2021 Puratasi 1

    செப்டம்பர் 17 – புரட்டாசி 1
    பிலவ வருடம் – புரட்டாசி 1
    17-செப்-2021 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    கா    9.13
    நட்சத்திரம்    :    திருவோணம்    அ.கா    5.09
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • September 1 2021 indraya rasipalan

    செப்டம்பர் 1 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…..
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     பெருமை 
    ரிஷபம் –     பக்தி 
    மிதுனம் –      புகழ்
    கடகம் –      ஜெயம் 
    சிம்மம் –      அமைதி
    கன்னி –      ஆதரவு
    துலாம் –      பாராட்டு 
    விருச்சிகம் –       நற்செயல்
    தனுசு –       பாசம் 
    மகரம் –      சிந்தனை  
    கும்பம் –     லாபம் 
    மீனம் –       வரவு
    சந்திராஷ்டமம்    –    அனுஷம், கேட்டை 

  • september 1 subamuhurtha naal

    செப்டம்பர் 1 திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    பிலவ வருடம் – ஆவணி 16
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    01-செப்-2021 புதன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    அ.கா    5.34
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    ம    12.49
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்,கேட்டை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • August 17 Aavani 1 Rasi palan

    ஆகஸ்ட் 17- ஆவணி 1 ராசிபலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     வரவு
    ரிஷபம் –     நோய் 
    மிதுனம் –      லாபம்  
    கடகம் –      ஈகை
    சிம்மம் –      செலவு
    கன்னி –      சாதனை  
    துலாம் –      கோபம் 
    விருச்சிகம் –       குழப்பம் 
    தனுசு –       அசதி
    மகரம் –      வெற்றி
    கும்பம் –      பாராட்டு
    மீனம் –       நன்மை 
    சந்திராஷ்டமம்    –    பரணி, கார்த்திகை