Blog

  • Mesham November Rasi Palan

     (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
    தெளிவான சிந்தனையும் நேர்மையான அணுகுமுறையும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு வாக்குவன்மை அதிகம். இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்திற்கு வந்திருக்கிறார். இதன் மூலம் எடுத்துக் கொண்ட எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ராசிக்கு ஏழாம் ஸ்தானத்தில் பஞ்சமாதிபதி சூரியன் – புதன் – சுக்கிரன் ஆகியோரின் சஞ்சாரம் மூலம் எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து வருவது தாமதமாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

    தொழில் ஸ்தானாதிபதி சனி பாக்கிய ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் அதிகமான பலம் பெறுகிறது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உகந்த காலகட்டமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த பணியிட மாற்றம் கிடைக்கும். 

    குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

    பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

    கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

    அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

    மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

    பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
    அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Kandha Sasti vizha thiruchendur murugam

    திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தார். 

    இக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30- க்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு  அபிஷேகமும் நடைபெற்றது. 

    யாகசாலையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தார். அப்போது சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் சண்முகவிலாசத்தில் குவிந்தனா்.

    மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அருள்பாலித்தார். 

    வரும் நவம்பா் 2-ம் தேதி கந்த சஷ்டி ஐந்தாம் நாள் வரை இதே நிகழ்ச்சிகளும், நவ. 3-ம் தேதி மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் முக்கிய நிகழ்ச்சியான கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவும் நடைபெறவுள்ளது.

  • Siddhargal potriya mounaguru

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    மதுரையம்பதியில் மாசுமருவற்ற 
    வைதீக தெலுங்கு
    பிராமணர் குலத்தில் அவதரித்தது 
    ஓர் ஆண் மகவு.

    தந்தை 
    சோமநாத அவதானியார். தாய்
    பார்வதி அம்மை.
    காலம் 
    18ஆம் நூற்றாண்டு.

    அக்குழந்தைக்குப்
    பெற்றோர் வைத்த பெயர் சிவராமகிருஷ்ணன்.
    வீட்டில் விரும்பி அழைத்த செல்லப்பெயர் 
    பிச்சுக்குப்பன்.

    தந்தை சோமநாதரே
    பெரிய யோகி.
    தாய் பார்வதி
    சிவபக்தை.

    இருவரும் ராமேஸ்வரம் யாத்திரை சென்று நீண்டநாள் 
    பிள்ளையில்லா குறையை இறை முன்வைத்து சத்புத்திரன் வேண்டும் என்று தொழுதபடி இருந்தனர்.

    இறையனார்
    இருவர் கனவிலும்
    ஒரே சமயத்தில் தோன்றி 'சத்புத்திரனே பிறப்பான்' என்று உறுதி தந்தார்.

    அப்படித் தவமாய் தவமிருந்து வந்துதித்த அக்குழந்தை….
    ஓர் ஞானக் குழந்தையென ஒரு சில நாட்களிலேயே பெற்றோருக்குப் புரிய ஆரம்பித்தது.

    ஆம்….
    விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது. 

    முற்பிறப்பில் கற்றதெல்லாம் இப்பிறப்பிலும் அப்படியே நிறைந்திருந்தது.

    குருகுலக் கல்வி உறுதுணை செய்ய படிப்படியாய் 
    வளர்ச்சி கண்டது.

     வடமொழி வசமானது.

    தெலுங்கராய் பிறந்தும் தமிழராய் தவழ்ந்தும் இறையருள் கூடி சமஸ்கிருத ஞானம் நிறைந்து நின்றது.
    பற்பல பல கலைகள்….

    கற்றுத் தந்தவரே 
    போற்ற 
    சிறந்து விளங்கினான்
    சிறுவன் சிவராமகிருஷ்ணன்.

    'பால பருவத்திலேயே திருமணம் '
    அக்கால மரபு.

    எனவே
    பள்ளிப் பருவத்திலேயே 
    தெலுங்கு பிராமணர் முறைப்படி 
    கல்யாணம் 
    இனிது முடிந்தது.

    பால விவாகம்
    நூல்கள் படிப்பதற்கும் கல்வி கற்பதற்கும் இடையூறாய் இல்லை.

    சிறு பிராயத்திலேயே கல்வி கேள்விகளில் சிறந்திருந்தான் சிவராமகிருஷ்ணன்.

    அவனைக் 
    கண்ட மாத்திரத்திலேயே  'ஆகா…பேஷ்… .. பேஷ் '
    என்று வியந்து 
    வாழ்த்தினர் 
    ஆன்றோரும் சான்றோரும்,

    எல்லாம் சரியாகத்தான் போனது. 
    வீட்டில் ஒரு விழா அமர்க்களமாய் 
    நடக்கும் வரை.

    அது சமயம்
    சிவராமகிருஷ்ணனின் பிஞ்சு மனைவி பூப்படைந்திருந்தாள்.

    வீடு விழாவாக களைகட்டியிருந்தது. உறவினர் நண்பர்கள் உளம் மகிழ்ந்து கூடியிருந்தனர்.

    ஆளாளுக்கு ஒரு வேலை. பரபரப்பாய் இருந்தது வீடு.

    சிவராமகிருஷ்ணன் அன்றும் விடுப்பெடுக்காது கல்வி கற்க பாடசாலை சென்றுவிட்டான். 

    வீடு திரும்பிய வேளை
    வீட்டில் கூப்பாடும் கும்மாளமும் நிறைந்திருந்தது.

    விருந்து  அப்போது தான் தயாராகிக் கொண்டிருந்தது.

    சிவராமகிருஷ்ணனுக்கு அது பசி வேளை. கல்விச்சாலை செல்லும் அவசரத்தில் பாவம்….
    காலையிலும் உண்ணவில்லை.

    "பசிக்கிறது' என்றான்.
    நண்பர்கள் பரிகசித்தனர்..

    "அடேய்… என்ன பசி ?
    அந்தப் பசியா….?! "

    அன்றைய விழா முடிவில் சாந்திமுகூர்த்தம் என்பது மரபு.
    எனவே அவர்கள்
    கேலியில் 
    அர்த்தம் இருந்தது. 

    அடுப்படி சென்று அம்மாவைக் கேட்டான் "அம்மா பசிக்கிறது…
    அன்னம் வேண்டும்.."

    "டேய் பிச்சு ….
    அச்சு பிச்சுன்னு அலையாதே….
    பசி பொறுத்துக்கோடா …

    ஒரு நாள் பட்டினி கிடந்தால்
    குடிமுழுகிப் போய்விடாது..

    பேசாம இங்கேயே உட்கார்ந்து இரு…"

    போகிறபோக்கில் கடுப்பாய்
    அலட்சியமாய் சொல்லிவிட்டு 
    ஒரு மூலையைக் காட்டினாள்,
    அவசரகதியிலிருந்த அன்னை.

    அறிவுப் பசி
    நிறைந்திருப்பதைப்போல வயிற்றுப் பசியும்
    நிறைய வேண்டும் 
    என நினைத்திருந்த சிவராமகிருஷ்ணன்  யோசிக்க ஆரம்பித்தான்..

    நேரம் ஆக ஆக
    பசி பொறுமையைச் சோதித்தது. 

    உற்ற நண்பர்களின் 
    கேலி வெறுப்பேற்றியது.

    பெற்ற தாயின் உதாசீனம் சிந்திக்க வைத்தது.

    சிவராம கிருஷ்ணனின்
    திருமணத்தன்று கூட இப்படித்தான்.

    கல்யாண கலகலப்பில் மாப்பிள்ளையை யாரும் கண்டு கொள்ளவில்லை. மணமகனுக்குப் பசிக்கும் என யாருக்கும் 
    தோன்றவே இல்லை.

    அவரவர் வேலையில் அவசரமாய் இருந்தனர்.

    இன்றும் அதே நிலை.

    சிந்தனை தலைதூக்கியது. மகிழ்ச்சி மறைந்தோடியது.

    புதிய எண்ணம் பூத்தது.

    எல்லாம்  வேஷம் 
    சுற்றம் 
    உற்றம்
    நட்பு
    உறவு
    தாய் 
    மனைவி 
    எல்லாமே வேஷம்.

    ஒருவன் பசியால் 
    செத்துக் கொண்டிருந்தால் கூட 
    இவர்களுக்கு கவலையில்லை.

    காலன் வந்து கவர்ந்து சென்றாலும் 
    தடுக்க வரமாட்டார்கள்."

    பூத்த எண்ணம்
    பூங்கொத்தாய்
    விரிந்தது.

    கபிலவஸ்துவின் அரசிளங்குமரன்
    ஒரு நொடியில் முடிவெடுத்து 
    அரண்மனை துறந்தது துறவறம் பூண்டது, 
    ஞானம் பெற்றது நினைவுக்கு வந்தது.

    சித்தார்த்தன் 
    கௌதம புத்தர் 
    ஆன காட்சி 
    மனதின் சாட்சியானது.

    திருவெண்காடர்
    'காதற்ற ஊசியும் 
    வாராது காண் கடைவழிக்கே '
    என்ற இறைவாக்கை உணர்த்த ஒரு நொடியில் பட்டினத்து அடிகள் ஆனது நினைவில் வந்து நின்றது.

    ஒரே நொடிதான்.
    ஒரே ஒரு நொடிதான். 
    அந்த நொடி
    வாழ்வின் போக்கையே மாற்றி விடும்.

    சிவராமகிருஷ்ணன் 
    அந்த ஒரு நொடியில் முடிவெடுத்தான்.

    'உண்மை வேறு '
    என்ற 
    உண்மைத் தேடலில் விடைகொடுத்தான் விருந்திற்கு..
    விழாவிற்கு… விருந்தினர்க்கு….
    உறவுக்கு…..
    வீட்டுக்கு .

    வீட்டை விட்டு வெளியேறினான்.

    அப்போதும் 
    அவனுக்குப் 
    பசி இருந்தது.

    அது வேறு பசி….
    ஆசிரியர் கற்பிக்கும் அறிவுப்பசி அல்ல…
    வேறு பசி…
    குரு தீர்க்வல்ல
    ஞான பசி….

    தேடல்….
    உண்மையைத் தேடும் தேடல்..
    இறை தேடல்..
    இரை தேடல் அல்ல…
    இறை தேடல்.

    இல்வாழ்க்கை விடுத்து 
    இறை வாழ்க்கையை நிறையெனக்  கொண்ட இளம் வாலிபனின்
    இறை தேடல்…
    நிறை தேடல் …
    ஞானத் தேடல்…

    சிவராமகிருஷ்ணனின் கால்கள் சென்ற இடம் கும்பகோணம் ஸ்ரீமடம். முன்பு
    கல்வி பெற்ற குருகுலம்.

    அங்கு தான் 
    சிவராமகிருஷ்ணனின் குருகுல குரு 
    பரமசிவேந்திர சாஸ்திரி வீற்றிருந்தார்.

    சிவராமகிருஷ்ணன் கண்கள் அவரை தரிசித்தன.
    கரங்கள் குவித்தபடியே
    தாழ்பணிந்தான். சரணடைந்தான்.

    சிவராமகிருஷ்ணனின் விருப்பத்தையும் வைராக்கியத்தையும் அறிந்த குருநாதர் வியந்தார்.

    அதுவே பக்குவ நிலை என்பதை அனுபவித்தறிந்திருந்த குருநாதர்
    தன்  மாணவன்
    உலக வாழ்க்கையின் இன்ப துன்பங்களை வெறுத்துவிட்டு வந்திருப்பதைப் பாராட்டி அரவணைத்தார்.

    அன்றே அப்போதே
    உபதேசம் 
    ஆரம்பம் ஆனது.

    முன்பே 
    குருகுலக் கல்வி முடிந்தவுடன் திருவிசைநல்லூர் சென்று ராமையா சாஸ்திரிகளிடம் வேதாந்தம் கற்றிருந்ததும்
    'அய்யர்வாள் '
    என அறிஞர்களால் போற்றப்பட்ட 
    ஸ்ரீதர வெங்கடேசர் என்கின்ற 
    போதேந்திர சுவாமிகள், பிச்சாண்டார்கோவில் மகாபாஷ்யம் 
    கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் 
    ஆகியோரிடம்  
    ஆழப் பயின்றிருந்த
    வேத நுட்பங்களும்
    சிவராமகிருஷ்ணனை
    விரைவில்  ஞானம் பெற்றவனாக்கின..

    அது இறை விருப்பம்  அன்றி வேறு என்னவாயிருக்க முடியும் ?

    குரு பரமசிவேந்திரா 
    பரமே சிவனென
    திகழ்ந்த 
    சிவம் திகழ்ஞானி.

    அவர்தம் 
    மடம் வந்த வேளை
    சிவராமகிருஷ்ணனின் பசிப்பிணி முற்றிலும் பறந்து போனது.

    பசி என்ற சொல்லே 
    அதன் பின்னர்
    அவன் வயிற்றிலும் 
    வாயிலும் 
    ஏன் சிந்தையிலுமே எழவில்லை.

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சிவராமகிருஷ்ணன் 
    குரு மெச்சும் சீடனாய் 
    வேதாந்த வித்தகனாய் தர்க்கத்தில் வல்லவனாய் சாஸ்திர ஞானியாய் மிளிர்ந்து ஒளிர்ந்தார்.

    ஸ்ரீமடமெங்கும்
    சிவராமகிருஷ்ணன் பற்றிய பேச்சே இருந்தது பாராட்டும் மிகுந்தது.

    ஒரு நாள்….
    பரமகுரு 
    பரம சிவேந்திரா 
    சிவராம கிருஷ்ணனை அழைத்தார்.
     
    கும்பகோணம் 
    ஸ்ரீ மடமே 
    உச்சியில் வைத்துக் கொண்டாடியவனை
    உச்சி முகர்ந்து 
    "நீ உச்சத்தில் ஜொலிக்க வேண்டியவன் "
    மெல்ல சொன்னார்.

    கூடவே 
    பெயர் மாற்றம் தந்தார்.

     சதாசிவன் என்னும்
     புதுப் பெயரைச் சூட்டினார்.

    "ஈஸ்வர சொருபங்களுக்கெல்லாம் அதிபதியே சதாசிவம்.

    சதா சிவத்துடன் இணைந்திருப்பவள் உலகாளும் உமையவள் மனோன்மணி .

    அவளே சித்தர்கள் வணங்கிய தெய்வம்.

    அவள் துணையின்றி உயர்நிலை 
    உய்ய முடியாது… 

    நீ இனி
    சதா சிவமென இரு ."

    சதாசிவ – மனோன்மணி பெருமைகளை 
    எடுத்துக் கூறி 
    சீடருக்கு 
    சதாசிவன் 
    என நாமம் சூட்டினார் குருநாதர்.

    பின்னாளில் 
    யோக சித்திகளில் 
    சிறந்து 
    உலகை ஆளப்போகும் சீடருக்கு 
    சதாசிவம்
    என பெயரிட்டது வீண்போகவில்லை.

    அச் சீடர்
    அகிலம் வணங்கும் பேராற்றல் கொண்டவராக
    வல்லமை நிறைந்தவராகவே
    வலம் வந்தார்.

    'திருமூலருக்கு 
    அடுத்து 
    யோக சாதனைகள் அனைத்தும் 
    முழுதாய் செய்தவர்'
    என சித்தர் பரம்பரை பிரமித்து சுட்டிக்காட்டும் யோக சித்தராக விளங்கினார். 

    'மௌன குருவே'
    என 
    தாயுமானவரால் துதிக்கப்பட்ட
    அவர் ….

    பற்றற்றவர்..
    பேச்சற்றவர்…
    உடையற்றவர்….
    உணர்வற்றவர்….. 
    அவர்……. 

    பிரம்மேந்திரர்..
    சதாசிவ பிரம்மம்…
    சதாசிவ பிரம்மேந்திரர்.
     

  • Alangudi Guru ;Peyarchi

    குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததை தொடர்ந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.  இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

    இந்த ஆண்டு குருபகவான் இன்று அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடந்தது. அதிகாலை குருப்பெயர்ச்சி நடந்தபோது குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

     முன்னதாக குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபரிகார யாக பூஜைகள் நடந்தன. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் தெட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் குரு கோஷங்களை எழுப்பி குருபகவானை தரிசனம் செய்தனர்.


    வருகிற 31-ந் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 7-ந் தேதி முடிய இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.

  • Dhanvantri peedathil vasthu homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வாஸ்து நாளை முன்னிட்டு இன்று 28.10.2019 திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், அஷ்டதிக் பாலகர் பூஜையும், ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

    இந்த யாக பூஜைகளில் நெய், தேன், பால், தாமரை புஷ்பங்கள், பல வர்ண புஷ்பங்கள், மிளகாய் வற்றல், நவதானியங்கள், மூலிகைகள், நவசமித்துகள், பழங்கள், நிவேதன பொருட்கள் போன்றவை சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார்.

     இன்று குரு பெயர்ச்சி மஹா யாகம்

    குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருப்பெயர்ச்சி யாகமும் சிறப்பு ஆராதனையும் :

    குரு பகவான் விருட்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறதை முன்னிட்டு இன்று 29.10.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குரு பெயர்ச்சி மஹா யாகமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இதில் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் குரு திசை, குரு புக்தி நடக்கும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 

  • Guru Gayathri Mandiram

    குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

    பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

    ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

    ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள். 

    அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில்  புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.
     

    ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

    ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

    குரு ஸ்லோகம்

    தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

    பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
     

  • Guru Peyarchi Atchi

    பொதுவாக தனுசு ராசி என்பது ப்ரம்மம் அதாவது உயிர் சம்பந்தபட்ட ராசியாகும். இதன் அதிபதி தேவ குருவாகிய குருதான். திறமை – ஒழுக்கம் – நேர்மை – தெய்வ நம்பிக்கை – பெரியோரை மதித்தல் – மங்கள காரியங்கள் – குழந்தை  ஆகிய விஷயங்களுக்கு குரு அதிபதியாவார். 

    பொது பலன்கள்:
    நாடு மற்றும் பொருளாதாரம்:
    சுய வீட்டிற்கு குரு மாறுவதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.  விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். 

    உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை,  அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது  எண்ணிக்கை உயரும்.  அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது  அவசியம்.  

    வானிலை:
    இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். 

    ஆன்மீகம் மற்றும் கோவில்கள்:
    புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். வெள்ளிகிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.  

    பொது:
    பல முக்கிய வழக்குகளுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். குரு இல்லறத்தின் காரக கிரகமான சுக்கிரன் வீட்டில் இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும். 

    ஆரோக்கியம்:
    நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

    குடும்பம்:
    கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

    அரசியல்:
    அரசியலில் திடீர் மாற்றங்கள்  உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.
     

  • Guru Peyarchi Pothu Palan

    நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

    இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

    குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:
    நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும். 

    குருவின் பலம்:
    குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

    நிகழும் மங்களகராமன கல்யப்தம் 5120 – சாலிவாகனம் 1941 – பசலி 1429 – கொல்லம் 1195 – ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – ஐப்பசி மாதம் 11ம் தேதி பின்னரவு 12ம் தேதி முன்னிரவு (ஆங்கிலம்: 29.10.2019) அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லப்க்ஷ ப்ரதமை – விசாக நக்ஷத்ரம் – ஆயுஷ்மான் நாமயோகம் – கிம்ஸ்துக்னம் கரணம் – சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 54.14க்கு (அதிகாலை மணி 3.49க்கு) கன்னியா லக்னத்தில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். 

    தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி  மாதம் 30ம் தேதி – 15.11.2020 – ஞாயிற்றுக்கிழமையன்று மாறுகிறார். 
    தனுசு ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும் – ஏழாம் பார்வையால் மிmதுன ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். 

    பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
    நன்மை பெறும் ராசிகள்: மேஷம் – மிதுனம் – சிம்மம்
    நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கன்னி – விருச்சிகம் – தனுசு – கும்பம் – மீனம்
    பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் – கடகம் – துலாம் – மகரம்
     

  • October 29 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – பெருமை  
    மிதுனம் – ஓய்வு
    கடனம் – சினம் 
    சிம்மம் – புகழ் 
    கன்னி –  ஆர்வம் 
    துலாம் –  வெற்றி 
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு –     தொல்லை 
    மகரம் –  சிரமம் 
    கும்பம் – அச்சம் 
    மீனம் –     அசதி
    சந்திராஷ்டமம்    – அசுவினி
     

  • October 29 Indraya Naal

    அக்டோபர் 29 – இன்றைய நாள் 
    விகாரி வருடம் – ஐப்பசி 12
    29-அக்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    8.17
    நட்சத்திரம்    :    விசாகம்    இ    2.25
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்