அக்டோபர் 18 – ஐப்பசி 01…
குரோதி வருடம் – ஐப்பசி 01
அக்டோபர் 18 – 2024
வெள்ளி
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : பிரதமை ம 3.16
நட்சத்திரம் : அசுவினி மா 4.01
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : உத்திரம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Blog
-
அக்டோபர் 18 – ஐப்பசி 01…
-
ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகைக்கு பௌர்ணமி சிறப்பு மஹா அபிஷேகம்…
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை,ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்று, ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு பதினாறு வகையான சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது.
தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மஹேஸ்வர சாஸ்திரி மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
4
-
பௌர்ணமி அன்று இதையெல்லாம் செய்தால் வாழ்க்கை மாறுவது நிச்சயம்!
பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆன்மீகத்தில் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் இறை வழிபாடு செய்வதன் மூலமாக நல்ல அதிர்வலைகள் உண்டாகும்.
திதி நித்யா தேவிகளில் கடைசி நித்யாவாக கருதப்படும் ஸ்ரீ லலிதாம்பிகைக்குரிய திதி பௌர்ணமி. இந்த பௌர்ணமி திதியில் லலிதா சகஸ்ரநாமம் ஜெபிப்போருக்கு வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.

பௌர்ணமியில் அம்மன் வழிபாடு!
பௌர்ணமி அன்று மாலை வேளையில் திருவிளக்கு பூஜை செய்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிப்பதோடு, வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.
பௌர்ணமி நன்னாளில் மந்திர ஜெபம் செய்பவர்களுக்கு அதீத சக்தி உண்டாகும். மேலும், புதிதாக மந்திர ஜெபம் தொடங்குபவர்களுக்கும் விரைவில் சித்தி உண்டாகும்.
குலதெய்வ வழிபாடு
பௌர்ணமி திதியில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் தொலைதூரத்தில் உள்ள குலதெய்வ கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் இல்லங்களில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
பௌர்ணமி கிரிவலம்
பௌர்ணமி திதியில் கிரிவலம் செய்தால்சிவபெருமானின் அருளினால்நேர்மறை ஆற்றல் உண்டாகும். இத்தனை சிறப்புடைய பௌர்ணமி நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக எந்த ஒரு காரியத்தையும் தூங்குவதற்கு ஏற்ற நாளாக இந்த பௌர்ணமி கருதப்படுகிறது.
-
தொங்கும் பழ தோட்டமாக மாறிய திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்…
3 டன் காய்கறிகள், பழங்களால் தொங்கும் தோட்டமாக மாறிய திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில். புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு மூன்று நாட்கள் நடைபெறும் நிறைமணி காட்சி.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் நிறை மணி காட்சி நடைபெறும். இந்த ஆண்டும் கோவில் கருவறை மற்றும் முன் பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கட்டி பந்தல் முழுவதும் தொங்க விடப்பட்டிருந்தது.
இந்த தோரணம் பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் காட்சி அளித்தது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலகில் மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்றும் இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும், என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது. சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.
மேலும் பக்தர்கள் நிறை மணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் படம் எடுத்து சென்றனர். நிறை மணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காய்கறி பழங்கள் இருந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.
-
அக்டோபர் 17 – பௌர்ணமி நாள் ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – நன்மை
கடகம் – உதவி
சிம்மம் – சுகம்
கன்னி – வாழ்வு
துலாம் – கவனம்
விருச்சிகம் – நலம்
தனுசு – பயம்
மகரம் – புகழ்
கும்பம் – லாபம்
மீனம் – ஜெயம்
சந்திராஷ்டமம் – மகம், பூரம் -
அக்டோபர் 17 – பௌர்ணமி…
அக்டோபர் 17 – பௌர்ணமி…
குரோதி வருடம் – புரட்டாசி 31
அக்டோபர் 17 – 2024
வியாழன்
நல்ல நேரம் : கா 10.30 – 12.00
எமகண்டம் : கா 6.00 – 7.30
குளிகை : கா 9.00 – 10.30
ராகு : ம 1.30 – 3.00
திதி : பவுர்ணமி
திதி நேரம் : பவுர்ணமி மா 5.25
நட்சத்திரம் : ரேவதி மா 5.36
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : பூரம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
அக்டோபர் 16 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பாசம்
மிதுனம் – தாமதம்
கடகம் – நட்பு
சிம்மம் – சாதனை
கன்னி – உயர்வு
துலாம் – நஷ்டம்
விருச்சிகம் – அமைதி
தனுசு – ஆர்வம்
மகரம் – நலம்
கும்பம் – வெற்றி
மீனம் – கோபம்
சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம் -
அக்டோபர் 16 – இன்றைய நல்லநேரம்…
அக்டோபர் 16 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – புரட்டாசி 30
அக்டோபர் 16 – 2024
புதன்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி இ 7.55
நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 7.13
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : மகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
அக்டோபர் 15 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – தொல்லை
ரிஷபம் – சிக்கல்
மிதுனம் – பக்தி
கடகம் – லாபம்
சிம்மம் – நிம்மதி
கன்னி – பரிவு
துலாம் – ஆக்கம்
விருச்சிகம் – இன்பம்
தனுசு – நற்செயல்
மகரம் – நஷ்டம்
கும்பம் – உற்சாகம்
மீனம் – உதவி
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம் -
அக்டோபர் 15 – பிரதோஷம்…
அக்டோபர் 15 – பிரதோஷம்…
குரோதி வருடம் – புரட்டாசி 29
அக்டோபர் 15 – 2024
செவ்வாய்
கரிநாள்
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : கா 9.00 – 10.30
குளிகை : ம 12.00 – 1.30
ராகு : ம 3.00 – 4.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி அ.கா 12.37
நட்சத்திரம் : பூரட்டாதி இ 8.52
யோகம் : மரண-அமிர்த
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்