Blog

  • Alangudi Natarajar abishegam

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற நடராஜர் அபிஷேக விழாவில் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் உள்ளது

    இவ்வாலயத்தில் நடராஜமூா்த்திக்கு, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதாவது ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அந்த வகையில் புரட்டாசி மாத பௌர்ணமி அபிஷேகத்தை முன்னிட்டு நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

     

  • September 29 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  மகிழ்ச்சி
    ரிஷபம் –    எதிர்ப்பு  
    மிதுனம் –   வெற்றி
    கடகம் – தடங்கல்
    சிம்மம் –    நட்பு
    கன்னி –    ஏமாற்றம்   
    துலாம் –     லாபம்  
    விருச்சிகம் – ஊக்கம்  
    தனுசு –     சுகம்
    மகரம் –    அசதி
    கும்பம் –     புகழ்
    மீனம் –      ஆக்கம்
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம், மகம்

  • September 29 Pournami

    செப்டம்பர்  29 – பவுர்ணமி
    சோபகிருது வருடம் – புரட்டாசி 12
    பவுர்ணமி
    29-செப்-2023 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி மா 4.34
    நட்சத்திரம் : உத்திரட்டாதி ந.இ 1.27
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thiruvannamalai pradhosham

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு புரட்டாசி மாத பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம்.

    புரட்டாசி மாத பிரதோஷ தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும்  பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.

    பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.  புரட்டாசி மாத பிரதேஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

  • Thirupathy chakrathazhavar theerthavari

    அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நடந்த சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி.

    சுக்லபட்ச சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிக முக்கிய சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த சதுர்தசி விரதமாகும். பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் வரும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் எனவும்   அழைக்கப்படுகிறது.  அளவிட முடியாத செல்வச் செழிப்புக்களை அளிக்கக் கூடியது இவ்விரதம். ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.

    அனைத்து உயிரினங்களின் மீதும் அளவிலாக் கருணையுடன், அவற்றின் வளமான வாழ்வில் பற்று கொண்டவராக கூப்பிட்ட குரலுக்கு அந்த நொடியிலேயே காத்தருள ஓடி வருபவராகத் துயிலுற்ற நிலையிலும், விழிப்புற்றவராகச் சயனித்திருக்கிறார் மகா விஷ்ணு.  எனவே மகா விஷ்ணு அவதாரமாக கலியுகத்தில் சீனிவாச பெருமாளாக பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக விளங்கி வருகிறார் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள். இதையொட்டி திருமலையில் அனந்த பத்மநாப ஸ்வாமி விரதத்தையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி இன்று நடைபெற்றது.

    ஏழமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்து தெப்பகுளத்தில் பால், தயிர், தேன் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு  சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி  நடைபெற்றது. இதில் தேவஸ்தான துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

    அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • September 28 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் –    தாமதம்  
    மிதுனம் –   செலவு
    கடகம் – ஆதரவு
    சிம்மம் –    அசதி
    கன்னி –    வெற்றி  
    துலாம் –     வருத்தம்
    விருச்சிகம் – நன்மை
    தனுசு –     ஆர்வம்
    மகரம் –    போட்டி
    கும்பம் –     அமைதி  
    மீனம் –      உயர்வு
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம்

  • September 28 2023 Indraya nallaneram

    செப்டம்பர் 28 – இன்றைய நல்ல நேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 11
    28-செப்-2023 வியாழன்
    மிலாடி நபி
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி மா 6.46
    நட்சத்திரம் : பூரட்டாதி ந.இ 2.50
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • September 27 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  ஆதாயம்
    ரிஷபம் –    சுகம்
    மிதுனம் –   அசதி
    கடகம் – கவலை
    சிம்மம் –    தாமதம்
    கன்னி –    லாபம்
    துலாம் –     புகழ்
    விருச்சிகம் – ஆக்கம்
    தனுசு –     நன்மை
    மகரம் –    செலவு
    கும்பம் –     சிந்தனை
    மீனம் –      பரிசு
    சந்திராஷ்டமம்    – பூசம்

     

  • September 27 2023 Pradhosham

    செப்டம்பர் 27 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 10
    பிரதோஷம்
    27-செப்-2023 புதன்
    மதுரை தல்லாகுளம் பெருமாள் தெப்பம்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி இ 9.6
    நட்சத்திரம் : சதயம் அ.கா 4.23
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Thirupathy bramorchavam theerthavari

    தீர்த்த வாரியுடன் நிறைவு பெற்ற திருமலை பிரம்மோற்சவம். ஸ்ரீவாரி புஷ்கரணி திருக்குளத்தில் நீராடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.

    திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் ஆந்திர பிரமோற்சவம் கடந்த பதினெட்டாம் தேதி ஏற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. நாள்தோறும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் உற்சவம் மூர்த்தியான மலையைப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் ஆலய மாட வீதிகளில்  வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக  உற்சவ மூர்த்திகளான உபய தேவர்களுடன் கூடிய மலையப்பர் மற்றும் ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரம் மாட வீதிகளில் வலமாக  எடுத்து வந்து  வராக சுவாமி ஆலய முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.

    தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால் தயிர் தேன் சந்தனம் போன்ற பல்வேறு நறுமண திரவியங்களுடன் ஆன ஸனபன  திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சுதர்சன சக்கரத்தாழ்வார் உற்சவ மூர்த்தியை ஆலய  திருக்குளத்தில் எடுத்துச் சென்று பூஜைகள் நடத்தி மூன்று முறை மூழ்கச் செய்து தீர்த்தவாரி எனப்படும் சக்கர ஸ்நானம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து திருக்குளத்தின் நான்கு புறமும் படித்துறையில் காத்திருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை சொல்லியபடி திருக்குளத்தில் மூழ்கி நீராடினர் . அந்த நிகழ்வுடன் திருமலை ஆலய சால கட்ல பிரம்மோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.