Blog

  • மேஷம் முதல் மீனம் வரை | அக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

    கிரகநிலை:

    ராசியில் சுக்கிரன், கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் முயற்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.
    தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். 
    குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும்.  வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும். 

    பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.  எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும். 
    கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். 

    அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். 

    மகம்:

    இந்த மாதம் காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில்  செல்லும் போது கவனம் தேவை.

    பூரம்:

    இந்த மாதம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.

    உத்திரம் 1ம் பாதம்:

    இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். மேலும் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். 

    பரிகாரம்: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும். 

    சந்திராஷ்டம தினங்கள்:     அக் 06, 07

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 15, 16
     

  • மேஷம் முதல் மீனம் வரை | அக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் – சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக ராசிக்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

    தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள்.  நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும்.  எந்திரங்கள் மற்றும்  தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

    குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள்.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.  அக்கம்பக்கத்தினரிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படலாம். 
    பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும்  அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
    கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

    அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். 

    புனர் பூசம் 4ம் பாதம்:

    இந்த மாதம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.

    பூசம்:

    இந்த மாதம் எதிலும் ஆதாயம் கிடைக்கும்.  பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும்.  நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.

    பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா  பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும். 

    சந்திராஷ்டம தினங்கள்:     அக் 04, 05, 31

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 13, 14
     

  • மேஷம் முதல் மீனம் வரை | அக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

    கிரகநிலை:

    ராசியில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – சுக ஸ்தானத்தில் சூரியன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  ராசியில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார். 

    பலன்:

    இந்த மாதம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  எதிர்ப்புகள்  விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும்.
    பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.
    கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

    அரசியல் துறையினருக்கு ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். 
    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள்.  எதிலும் முன்னேற்றம் உண்டாகும். 

    மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

    திருவாதிரை:

    இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:

    இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். . மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.

    பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். 

    சந்திராஷ்டம தினங்கள்:     அக்டோ 02, 03, 29, 30

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 10, 11, 12
     

  • பணக்கஷ்டம் தீர மகாலட்சுமி-பெருமாள் வழிபாடு!

    செல்வ செழிப்புடன் வாழவும், பணக்கஷ்டம் தீரவும் மகாலட்சுமியை வழிபட வேண்டும் என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். ஆனால், மகாலட்சுமியை வழிபடுவதற்கு முன் பெருமாளை வணங்கினால் மட்டுமே அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதற்கு ஏகாதசி திதி மிகவும் உகந்தது, குறிப்பாக ஆனி மாத வளர்பிறை ஏகாதசி. இந்த எளிய வழிபாடு முறை பணக்கஷ்டத்தை தீர்க்க உதவும்.

    ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியன்று, காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, பெருமாளை நினைத்து விரதம் தொடங்கவும். மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்து விரதத்தை முடிக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள், இரவு 10 மணிக்குள் வழிபாடு செய்யலாம். தலைக்கு குளித்து, அசைவ உணவை தவிர்ப்பது அவசியம்.

    பூஜையில், பெருமாள் மற்றும் மகாலட்சுமி படங்களுக்கு துளசி மாலை அல்லது வாசனை மலர்களால் அலங்கரிக்கவும். மூன்று விளக்குகளில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, வடக்கு நோக்கி தீபம் ஏற்றவும். நெய்வேத்தியமாக பால் பாயாசம் அல்லது காய்ச்சிய பால் வைக்கவும். பெருமாளுக்கு துளசி இலைகளால் “ஓம் நமோ நாராயணாய” நாமத்தை 111 முறை உச்சரித்து அர்ச்சனை செய்யவும். இந்த வழிபாடு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் பணக்கஷ்டத்தை தீர்க்கும்.

  • மேஷம் முதல் மீனம் வரை | அக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். 

    தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

    பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.  
    கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். 

    அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். 
    மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.  

    பாதங்கள்: கார்த்திகை 2, 3, 4

    இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். 

    ரோகிணி:

    இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். 

    மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்:

    இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

    பரிகாரம்:  மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.  

    சந்திராஷ்டம தினங்கள்:     அக்டோ 01, 27, 28

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 08, 09
     

  • மேஷம் முதல் மீனம் வரை | அக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் – சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும்.
    தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். 

    குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
    பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 
    கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 

    அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
    மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். 

    அஸ்வினி:

    இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். 

    பரணி:

    இந்த மாதம் அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி உண்டாகும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

    பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்:     அக் 24, 25, 26

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 06, 07

  • திருப்பதி அஞ்சனாத்ரி மலையில் தானாக உருவான ஏழுமலையான் சிலை: பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் அதிசயம்

    உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அத்தகைய புகழ்மிக்க திருப்பதி மலையில், அஞ்சனாத்ரி மலையில் தானாக உருவான ஒரு அபூர்வ சிலை பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இரண்டாவது மலைப்பாதையின் கடைசி வளைவில் அமைந்த இந்த சிலை, 2012-ம் ஆண்டு பக்தர்களின் பார்வையில் முதன்முதலில் தென்பட்டது.

    இந்த சிலை, ஏழுமலையானைப் போலவே தோற்றமளிக்கிறது. தலையில் கிரீடம், கண்கள், மூக்கு, வாய், கழுத்து என அனைத்து அம்சங்களும் இயற்கையாகவே உருவாகியுள்ளன. ஒரு சிறிய மலை தன்னை ஏழுமலையானின் உருவமாக மாற்றிக்கொண்டதாக இது காட்சியளிக்கிறது. இந்த சிலை உள்ள இடத்திற்கு செல்ல எந்த பாதையும் இல்லை. இரண்டாவது மலைப்பாதையின் கடைசி வளைவில் நின்று பார்த்தால், இந்த அபூர்வ சிலை தெளிவாக தெரியும்.

    விசேஷ நாட்களில், சில இளைஞர்கள் கயிற்றில் தொங்கியபடி இந்த சிலைக்கு அருகில் சென்று பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர். இந்த இயற்கை அதிசயம், பக்தர்களிடையே ஆன்மிகப் பரவசத்தை ஏற்படுத்துகிறது. திருப்பதியின் புனிதத்தை மேலும் உயர்த்தும் இந்த சிலை, பக்தர்களின் பார்வையில் தெய்வீக அனுபவத்தை வழங்குகிறது.

  • ஒட்டனந்தல் ரத்தினவேல் முருகன் கோவில்: எலுமிச்சை ஏலத்தில் புத்திர பாக்கியம்

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகிலுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில், மயில் வடிவில் காட்சியளிக்கும் இரட்டைக் குன்றின் மீது அமைந்துள்ளது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் கோவில். இந்த ஆலயத்தின் கருவறையில் செப்பினாலான வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இங்கு 10 நாள் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் கருவறையில் உள்ள வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.

    பத்தாவது நாளில் காவடி பூஜை முடிந்த பிறகு, மறுநாள் இரவு இடும்பன் பூஜை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, ஊர் நாட்டாமை ஆணி செருப்பின் மீது நின்று முதல் எலுமிச்சைப் பழத்திற்கான ஏலத்தை 1 ரூபாயில் தொடங்குகிறார். இந்த ஒரு எலுமிச்சை பழம் சுமார் 20,000 ரூபாய் வரை ஏலத்தில் எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2025) நடந்த ஏலத்தில், 10 எலுமிச்சைப் பழங்கள் மொத்தமாக 68,000 ரூபாய்க்கு ஏலம் போனது.ஏலம் எடுப்பவர்களுக்கு, இடும்பனுக்கு படைக்கப்பட்ட பிரசாதமும் எலுமிச்சைப் பழமும் வழங்கப்படுகிறது. பிரசாதத்தை அங்கேயே உண்டு, மறுநாள் காலை வீட்டில் பூஜை செய்து, எலுமிச்சைப் பழத்தை கொட்டையோடு சாப்பிட வேண்டும் என்பது நம்பிக்கை. இதனால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு இந்த எலுமிச்சைப் பழங்களை ஏலத்தில் எடுத்த பல தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் இந்த ஆண்டு இடும்பனின் படையலுக்கு பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் ஒட்டனந்தல் ஊர் மக்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால், மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் தேவைப்படும்போது, ஒட்டனந்தல் மக்கள் அவர்கள் சார்பாக ஏலத்தில் கலந்து கொண்டு, எந்த கைமாறும் இன்றி எலுமிச்சைப் பழங்களை பெற்றுத் தருகின்றனர். இந்த திருவிழாவும், எலுமிச்சை ஏலமும் பக்தர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி, கோவிலின் புகழை மேலும் உயர்த்துகிறது.

  • வாராகி அம்மன் வழிபாடு: 45 நாட்களில் காரிய சித்தி தரும் ஆன்மிக முறை

    வாராகி அம்மன் வழிபாடு இன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. வீடுகளிலும், ஆலயங்களிலும் பலர் வாராகி அம்மனை வணங்குகின்றனர். குறிப்பாக, வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி திதிகளிலும், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. சிலர் தினமும் வீட்டில் வாராகி அம்மனை வணங்குகின்றனர். இந்த ஆன்மிகப் பதிவில், 45 நாட்களில் காரிய சித்தி தரும் வாராகி அம்மன் வழிபாட்டு முறையைப் பார்ப்போம்.எந்த தெய்வத்தை வணங்கினாலும், ஒரு வேண்டுதலை முன்வைத்தே வழிபாடு செய்கிறோம்.

    வாராகி அம்மனை வணங்குவதன் மூலம், நினைத்த காரியம் விரைவில் நிறைவேற வழிபாடு செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை, பஞ்சமி அல்லது அஷ்டமி திதியில் தொடங்க வேண்டும். வீட்டில் வாராகி அம்மனின் படம் இருந்தால், அதை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைக்கவும். சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்கவும். ஆறு தீபங்கள் ஏற்றி, நெய்வேத்தியமாக மாதுளம்பழ முத்துக்களை தேனில் கலந்து வைக்கவும்.வலது கையின் மோதிர விரலில் வாசனையுள்ள தாழம்பூ குங்குமத்தை எடுத்து, வாராகி அம்மனின் காரிய சித்தி மந்திரத்தை ஒருமுறை அல்லது ஆறு முறை உச்சரிக்கவும்: “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் சுக்ல வாராகி மம ரக்ச ரக்ச வார்த்தாலி வார்த்தாலி வாராகி வாராகி சகல காரிய சித்திம் அனுக்கிரகம் குரு குரு”.

    இதை கூறி, குங்குமத்தை இலை அல்லது கிண்ணத்தில் வைக்கவும். பின்னர், நினைத்த காரியத்தை மனதில் வைத்து வேண்டுதல் செய்யவும். காரியம் தொடர்பாக வெளியே செல்லும்போது, இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளவும். இவ்வாறு 45 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது, காரியம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே வரும். இந்த காலத்தில் உணவில் அசைவத்தை தவிர்த்து, சுத்தமாக இருக்கவும். தீட்டு காரியங்களில் ஈடுபடாமல், விரதம் போல இவ்வழிபாட்டை மேற்கொள்ளவும். இதனால், வாராகி அம்மனின் அருளால் காரிய சித்தி கிடைக்கும்.

  • மீனம் – ஆகஸ்ட் மாத ராசிபலன்

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – சப்தம களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    03.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன்  பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17.08.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21.08.2025 அன்று சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

    25.08.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் பயணங்கள் குறிக்கோள் உள்ளவைகளாக மாறும். அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை அகலும். திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லது.  மனதில் வீண்கவலைகள் நீங்கும். அடுத்தவரை  நம்பி எதையும்  ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதை  குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். 

    பூரட்டாதி:

    இந்த மாதம் எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசியிலுள்ள சூரியன் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். சுக்கிரனின் சஞ்சாரம் நல்ல பலன்களை தரும்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

    ரேவதி:

    இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

    பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்குவது  

    சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 01, 02, 28, 29

    அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 10, 11, 12