Blog

  • விநாயகரை வழிபடும் முறை…..

    விநாயகரை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் தனது நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.

    பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.

    தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளை சிதறச் செய்ய வேண்டுமென பணிவாக கேட்க வேண்டும்.

    அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.

  • நெல்லையப்பர் கோயிலில் திருப்பணி…

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்து விட்டதைத் தொடர்ந்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயிலில் உபயதாரர்கள், அறநிலையத் துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும் தாமிரவருணி அறக்கட்டளை சார்பில் கோயில் வெளித் தெப்பம் சீரமைப்பு, மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • திருப்பதியில் நேர்த்திக் கடன் செலுத்திய சிந்து…

    ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டனில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார். திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பி.வி.சிந்து, அவரது தாய் விஜயா, தந்தை ரமணா மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் திருப்பதி வந்தனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று முதலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர், தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். முன்னதாக சிந்து வெற்றிக்கான அவரது பயிற்சியாளர், கோபிசந்த் முடி காணிக்கை செலுத்தினார். முன்னதாக ஏழுமலையான் கோயிலின் ரங்கநாதர் மண்டபம் அருகே உள்ள துலாபாரத்தில் பி.வி.சிந்து, தனது எடைக்கு எடையாக வெல்லம் காணிக்கையாக செலுத்தினர்.

  • திருப்பதியில் நேர்த்திக் கடன் செலுத்திய சிந்து…

    ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டனில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார். திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பி.வி.சிந்து, அவரது தாய் விஜயா, தந்தை ரமணா மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் திருப்பதி வந்தனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று முதலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர், தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். முன்னதாக சிந்து வெற்றிக்கான அவரது பயிற்சியாளர், கோபிசந்த் முடி காணிக்கை செலுத்தினார். முன்னதாக ஏழுமலையான் கோயிலின் ரங்கநாதர் மண்டபம் அருகே உள்ள துலாபாரத்தில் பி.வி.சிந்து, தனது எடைக்கு எடையாக வெல்லம் காணிக்கையாக செலுத்தினர்.

  • வியட்நாம் புத்த கோயிலில் மோடி….

    அரசு முறை பயணமாக வியட்நாம் சென்ற மோடி, தலைநகர் ஹனாயில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புத்த கோயிலுக்கு சென்று வழிபட்டார். குவான் சு பகோடா புத்த கோயிலுக்கு சென்ற மோடிக்கு புத்த துறவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மோடி, அகர்பத்தி ஏற்றி புத்த முறைப்படி வழிபாடு நடத்தினார். பின்னர், அங்கு குழுமியிருந்த புத்த துறவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் புத்த துறவிகளை இந்தியாவிற்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்துள்ளார் .

  • ஏழுமலையான் கோயிலில் கூடுதல் உண்டியல்

    திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்த பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், கோயில் வளாகத்தில் கூடுதல் உண்டியல் அமைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் இதனை தெரிவித்தார். பல கோயில்களுக்கு இந்து தர்ம பிரச்சாரம் சார்பில் மராமத்து பணிகளை செய்ய ஆலோசனை நடத்தப்படும் என்றும், திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவ மனையில் வசதிகள் அதிகரிக்கப் படும் எனவும் கூறினார். ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் முதியோர், குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க உத்தர விடப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் ஆலோசனைப்படி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்கு கூடுதலாக சடாரி, தீர்த்த மையம் அமைக்க ஆலோசனை நடத்தப்படும்என்றும் கூறினார். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உண்டியலில் காணிக்கை செலுத்த கூட்ட நெரிசல் ஏற்படுவதால் தேவைப்படும் இடங்களில் கூடுதல் உண்டியல்கள் அமைக்கப்படும் என்றும் சாம்பசிவ ராவ் கூறினார்.

  • திருப்பதி கோவிலில் முகேஷ் அம்பானி…

    ரிலையன்ஸ் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ 4ஜி திட்டம் வெற்றி பெற முகேஷ் அம்பானி திருமலையானை உருக்கமாக வேண்டினார்.
    ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தார். பின்னர் கார் மூலம் திருமலைக்கு பத்மாவதி விருந்தினர் மாளிக்கைக்கு வந்து அங்கு ஓய்வெடுத்தார்.
    பின்னர் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் உருக்கமாக சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்பு பிரசாதம் அளித்தனர்.

    பின்னர் முகேஷ் அம்பானி கூறுகையில், புதிதாக ரிலையன்ஸ் சார்பில் ஜியோ சிம்கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்ததாக கூறினார்

  • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை….

    பலரும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பல வகையான கொழுக்கட்டைகளை செய்து படைக்க விரும்புவார்கள். கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிடி கொழுக்கட்டை. நீங்கள் அப்படி விரும்புபவர்களானால், இந்த வருடம் பிடி கொழுக்கட்டையையும் செய்யுங்கள்.
    பிடி கொழுக்கட்டை செய்ய எளிய செய்முறை இதோ….

    தேவையான பொருட்கள்:
    வெல்லம் – 1/4 கப்
    அரிசி மாவு – 1/2 கப்
    தண்ணீர் – ஒன்றேகால் கப்
    துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
    எண்ணெய் – சிறிது

    செய்முறை:
    முதலில் வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
    பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும்.
    பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
    ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும்.
    மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி.

  • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை….

    பலரும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பல வகையான கொழுக்கட்டைகளை செய்து படைக்க விரும்புவார்கள். கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிடி கொழுக்கட்டை. நீங்கள் அப்படி விரும்புபவர்களானால், இந்த வருடம் பிடி கொழுக்கட்டையையும் செய்யுங்கள்.
    பிடி கொழுக்கட்டை செய்ய எளிய செய்முறை இதோ….

    தேவையான பொருட்கள்:
    வெல்லம் – 1/4 கப்
    அரிசி மாவு – 1/2 கப்
    தண்ணீர் – ஒன்றேகால் கப்
    துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
    எண்ணெய் – சிறிது

    செய்முறை:
    முதலில் வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
    பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடி தூவி மீண்டும் கொதிக்க விடவும்.
    பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
    ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அனைத்து, குளிர வைக்க வேண்டும்.
    மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை சிறிது எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி.

  • சென்னையில் 2500 விநாயகர் சிலைகள் ….

    சென்னையில் 2 ஆயிரத்து 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

    வரும் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் 2 ஆயிரத்து 500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    மேலும் விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.