Blog

  • இருள் நீக்கும் தீப ஒளி….

    வாழ்க்கையில் துன்பமயமான இருள் அகன்று ஒளிமயமான நல்ல எதிர்காலம் உதயமாகவேண்டும் என்பதற்கு பொருத்தமான நாளாக அமைந்துள்ளது தீபாவளித் திருநாள்.
    வரிசையாக தீபங்களை ஏற்றிக்கொண்டாடுவதே தீபாவளிப் பண்டிகையின் சிறப்பாகும். புற ஒளி ஏற்றி உள் ஒளி பெறுவதே தீபாவளியின் மகத்துவமாகும்.
    புற இருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மட்டுமன்றி பிறபொருள்களையும் மறைத்து நின்று பெரும் துன்பத்தைச் செய்யும் இதனை மனதிற்கொண்டு தீபாவளியன்று ஆலயங்களில் ஒளி விளக்கேற்றியும், இதயங்களில் ஞான விளக்கேற்றியும் அருட்பெரும் ஜோதியான ஆண்டவனை வழிபடுவதன் மூலம் ஆணவ இருள் அகலும் இருள் நிலவிய இடத்தில் இன்பம் விளையும்” என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்.
    தீபாவளி நன்னாளிலே செய்யப்படுகின்ற இறைவழிபாடும் பிரார்த்தனையும் அனைவரினதும் வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என நம்பிக்கை வைப்போம்!

  • சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தயார்

    சபரிமலை நடை திறப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை நதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சபரிமலைக்கு செல்லும் பெருவழி பாதை உள்பட 17 சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து உள்ளது.

  • ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் அமைதிக்கான ஓர் ஆன்மீக பயணம்

    வாழும் கலையின் தோற்றுனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்ட பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன் , நார்வே போன்ற நாடுகளுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டார்.
    இந்த பயணத்தின் போது அவர் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் பாராளுமன்றங்கள் போன்றவற்றில் பல்வேறு துறைகளை சார்ந்த ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்களை சந்தித்து தனது அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான செய்தியை அளித்தார்.
    பின்னர் நார்வே பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர் அந்நாட்டின் பாராளுமன்றத் தலைவரான ஒலிமிக் தொம்மெஸ்ஸெனை சந்தித்தார்.
    முன்னதாக திங்கள் கிழமையன்று மாலை குருதேவர் சமுதாய மக்களை சந்தித்து உரை நிகழ்த்தினார். மேலும் வாழும் கலை அமைப்பும், நார்வே ஒலிம்பிக் விளையாட்டு குழுவும் ஒன்றிணைந்து விளையாட்டு வீரர்களுக்கு மேலும் பல நம்பிக்கை அளிக்கும் திட்டங்களை நிகழ்த்துவதென்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தீர்மானித்தனர்.

  • கோதண்டராமர் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்…

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோதண்டராமர் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
    திருப்பதி கோதண்டராமர் கோயிலில் வரும் 30-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலைப் பல்வேறு வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. காலை சுப்ரபாதம், தோமாலை சேவையை தொடர்ந்து திருமஞ்சன சேவை நடைபெற்றது. இதையொட்டி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், சிகைக்காய், பச்சை கற்பூரம் போன்றவற்றால் கர்ப்பகிரகம் உட்பட கோயில் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.
    இதேபோன்று தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • திருப்பதியில் கார்த்திகை ஹோமங்கள்….

    தெலுங்கு பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதம் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி, மாதம் முழுவதும் திருப்பதியிலுள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கோயிலில் ஹோமங்கள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    ஹோமங்கள் சிறப்பாக நடைபெற, அக்டோபர் 31-ம் தேதி முளைவிடுதல் உற்சவம் நடைபெற உள்ளது.
    தொடர்ந்து நவம்பர் 1 ம் தேதி முதல் 3 ம் தேதி வரை கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
    4, 5 தேதிகளில் சுப்பிரமணிய சுவாமி ஹோமம், 6-ம் தேதி நவகிரக ஹோமம், 7-ம் தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 8-ம் தேதி முதல் 16 ம் தேதி வரை காமாட்சி அம்மன் ஹோமம் எனப்படும் சண்டி யாகம் நடைபெறுகிறது.
    தொடர்ந்து 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கபிலேஸ்வர சுவாமி ஹோமம், 28-ம் தேதி காலபைரவ சுவாமி ஹோமம், 29-ம் தேதி சண்டிகேஸ்வர ஹோமம் என கோயிலில் உள்ள மூர்த்திகள் அனைவருக்கும் ஹோமங்கள் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • தலசயனப்பெருமாள் உற்சவ விழா அக்.30-ம் தேதி தொடக்கம்!

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் 63-ஆவது திவ்யதேசமாக விளங்குகிறது. இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் வழிபடுவதன் மூலம்நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    தலசயனப்பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருஅவதார உற்சவம் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
    நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் காலை மாலை ஆகிய இருவேளைகளும் உற்சவம், திருமஞ்சனம், திருவீதி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கியமாக நவம்பர் 8-ம் தேதி பூதத்தாழ்வார் திருமஞ்சனம், மங்களாசாசனம் திருக்கைத்தல சேவையும், மண்டப அலங்கார திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.

  • திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க புதிய விதிமுறை!

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அறைகள் வாடகைக்கு எடுக்க மத்திய, மாநில அரசின் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக 50 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரையிலான அறைகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பதி, திருமலையில் தேவஸ்தான ஓய்வு அறைகள் வாடகைக்கு பெற இனி கட்டாயம் மத்திய, மாநில அரசின் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

    ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளில் எதெனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை தேவை எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • தீபாவளி பலகாரங்கள்….

    தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்கள் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு வகை பலகாரங்களை பார்க்கலாம். தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான்.

    அதிரசம்

    தேவையான பொருட்கள்….
    2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.

    செய்முறை ….

    அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
    அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.
    சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.
    சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
    அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அதிரசம் ரெடி.

    மொறு மொறு கை முறுக்கு

    முறுக்கு வகைகளில், கை முறுக்கின் சுவை அலாதியானது. கைமுறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

    அரிசி மாவு – 3 கப், உளுத்தம் மாவு – கால் கப், டால்டா – ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சீரகம் – 100 கிராம், வெண்ணெய் – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

    முறுக்கு செய்முறை

    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.
    ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும்.
    முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.
    வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
    சுவையான கை முறுக்கு ரெடி.

    பாசிப்பருப்பு நெய் உருண்டை….

    தேவையான பொருட்கள்….

    பாசிப் பருப்பு – 2 கப், சர்க்கரை – 2 கப், நெய் 200 கிராம், ஏலக்காய் – 6, முந்திரி உடைத்தது 50 கிராம்

    நெய் உருண்டை செய்முறை

    பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
    அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.
    வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது.

  • தீபாவளி பலகாரங்கள்….

    தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்கள் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு வகை பலகாரங்களை பார்க்கலாம். தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான்.

    அதிரசம்

    தேவையான பொருட்கள்….
    2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.

    செய்முறை ….

    அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
    அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.
    சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.
    சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
    அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அதிரசம் ரெடி.

    மொறு மொறு கை முறுக்கு

    முறுக்கு வகைகளில், கை முறுக்கின் சுவை அலாதியானது. கைமுறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

    அரிசி மாவு – 3 கப், உளுத்தம் மாவு – கால் கப், டால்டா – ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சீரகம் – 100 கிராம், வெண்ணெய் – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

    முறுக்கு செய்முறை

    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.
    ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும்.
    முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.
    வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
    சுவையான கை முறுக்கு ரெடி.

    பாசிப்பருப்பு நெய் உருண்டை….

    தேவையான பொருட்கள்….

    பாசிப் பருப்பு – 2 கப், சர்க்கரை – 2 கப், நெய் 200 கிராம், ஏலக்காய் – 6, முந்திரி உடைத்தது 50 கிராம்

    நெய் உருண்டை செய்முறை

    பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
    அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.
    வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது.

  • கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை!

    முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.

    இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.
    இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.

    கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

    தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.

    கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் வாழ்க்கையில் அனைத்து வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.