Blog

  • சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்பயாகம்

    ஆந்திர மாநிலம் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்பயாகம் 6 டன் வண்ண மலர்களால் நடத்தப்பட்டது.
    ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சந்திரகிரி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் புஷ்பயாகம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம், நித்யகைங்கர்யம் நடக்கும்போது ஏதேனும் தோஷம் இருந்தால் அதனை போக்குவதற்காக இந்த புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

    அதன்படி நேற்று இந்த யாகம் நடந்தது. இதனையொட்டி கல்யாண வெங்கடேஸ்வரர் தேவியருடன் திருமண மண்டபத்தில் உள்ள யாகசாலை நடக்கும் இடத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    அதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரருக்கு 18 வகையான 6 டன் மலர்களால் புஷ்பயாகம் நடந்தது. அப்போது கூடை கூடையாக பூக்கள் கொண்டு வரப்பட்டு வேதமந்திரங்கள் ஓத அர்ச்சகர்கள் இதனை நடத்தினர்.

    கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலுக்கு திருப்பதியை சேர்ந்த சீனிவாசரெட்டி என்ற பக்தர் ரூ.10½ லட்சம் மதிப்புள்ள பெரிய மணி ஒன்றை வழங்கினார். இதனை கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பெற்றுக்கொண்டனர்.

  • ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்…..

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறையையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் இன்று 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சகணக்காக இருக்கும் அதன்படி நேற்றும் (சனி) இன்றும் (ஞாயிறு) பக்தர்கள் அதிகளவு திரண்டுள்ளனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 51 ஆயிரத்து 990 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இலவச தரிசனத்தில் 12 மணி நேரமும், திவ்ய தரிசனத்தில் 10 மணிநேரமும், ரூ.300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் ஏராளமான பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில் ரூ.2.51 கோடி காணிக்கையாக கிடைத்தது.

  • அருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ்

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
    சனிக்கிழமை பிற்பகல் கோயிலுக்கு வந்த அவர் ஸ்ரீசம்பந்த விநாயகர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர், கோயில் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். நடிகர் ராகவா லாரன்ஸýடன் அவரது தாய், தம்பி உள்பட உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர்.
    கோயில் நிர்வாகம் சார்பில் ராகவா லாரன்ஸýக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி தரிசனம் முடிந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

  • சனி பிரதோஷத்தின் மகிமைகள்…..

    சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
    ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.


    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்…


    சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.
    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.


    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.
    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

  • சனி பிரதோஷத்தின் மகிமைகள்…..

    சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
    ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.


    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்…


    சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.
    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.


    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.
    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

  • சனி பிரதோஷத்தின் மகிமைகள்…..

    சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
    ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.


    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்…


    சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.
    பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.


    பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.
    பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
    சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.

  • மார்ச் 25 மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷம்…

    மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷம் மார்ச் 25 ஆம் தேதி அன்று வருகிறது. சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் மார்ச் 25 ஆம் தேதி அன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

  • மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28-இல் தொடக்கம்

    மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரை சித்திரைத் திருவிழா அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஏப்ரல் 28ஆம் தேதி காலை கம்பத்தடி மண்டபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் சிறப்பு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.
    விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, மே 5ஆம் தேதி அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மே 6ஆம் தேதி சனிக்கிழமை திக்கு விஜயமும், 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெறும்.
    மே 8ஆம் தேதி காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும், அன்று மாலை பூப்பல்லக்கும் நடைபெறுகிறது. மறுநாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.
    மே 9ஆம் தேதி ஸ்ரீ கள்ளழகருக்கு மதுரையில் வரவேற்பளிக்கும் எதிர்சேவை நடைபெறும். தல்லாகுளம் பெருமாள் கோயிலில் அன்று இரவு தங்கி அருள்பாலிக்கும் கள்ளழகர் மே 10ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கிறார்.
    அன்று இரவு வண்டியூர் அனுமார் திருக்கோயிலில் எழுந்தருளும் கள்ளழகர், மே 11ஆம் தேதி சேஷ வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றின் நடுவில் உள்ள உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறுகிறது.
    மே 12 ஆம் தேதி இரவு தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் தங்கி பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். மே 13 ஆம் தேதி மலைக்கு மீண்டும் கள்ளழகர் புறப்பாடாகிறார்.
    சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சியும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து தற்போது மேற்கொண்டு வருகின்றன.

  • தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரமோற்சவம் தொடக்கம்

    திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் பங்குனி பிரமோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவள்ளூர் பஜார் வீதியில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பிரமோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
    இந்த ஆண்டுக்கான பங்குனி பிரமோற்சவ விழா புதன்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இதைத்தொடர்ந்து, காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    இரவு சிம்ம வாகன வீதியுலா நடைபெற்றது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை அம்ச வாகனத்தில் பக்தர்களுக்கு உற்சவர் அருள்பாலித்தார்.
    பிரம்மோற்சவத்தின் அனைத்து நாள்களிலும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடைபெறும்.
    ஏழாம் நாளான வரும் 28-ஆம் தேதி காலை தேர்த் திருவிழாவும், மாறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும்.
    இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

  • ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர்

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மண்டல பிரம்மோற்சவம் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏப்ரல் 13-ந் தேதி வரை 42 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி 3 மற்றும் 4-ம் பிரகாரங்களில் 8 திசைகளிலும் உள்ள கொடிமரங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக 8 திசைகளிலும் ஏற்றப்படும் கொடிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் செய்யப்பட்டு கிழக்கு திசைக்கு யானை கொடியும், தென் கிழக்கு திசைக்கு ஆடு கொடியும், தென் திசைக்கு எருமை கொடியும், தென் மேற்கு திசைக்கு பூத கொடியும், மேற்கு திசைக்கு மகர கொடியும், வடமேற்கு திசைக்கு மான் கொடியும், வடக்கு திசைக்கு குதிரை கொடியும், வடகிழக்கு திசைக்கு இடப கொடியும் ஏற்றப்பட்டன.

    28-ந் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி சுவாமி, அம்பாள் தனித்தனி பெரிய தேர்களில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி நிறைவடைகிறது.

    இதைத்தொடர்ந்து மவுன உற்சவம், சண்டிகேசுவரர் உற்சவம், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 11-ந் தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி, அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். ஏப்ரல் 13-ந் தேதியுடன் விழா நிறை வடைகிறது.