Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • 2017-01-23-10-48-44

    காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.

    தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை மிகுந்த  மரியாதையுடன் மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.

    நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் “அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்’ என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.

    அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு “என்ன விசேஷம்?’ என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

    இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், “ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ’ என்று பரமாச்சாரியார் உத்தரவிட, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.

    பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்-
    “இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!’

    – படித்ததில் பிடித்தது…

  • karthigai-deepathin-sriappugal

    “திருஅண்ணாமலையை நினைக்க முக்தி” அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக அறியப்படும் தலம் இது.

    இப்படி சிறப்புகள் அதிகம் வாய்ந்த திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய கார்த்திகை தீபம். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம். திருவண்ணாமலையை சுற்றினாலேயே அத்தனை இன்பம்… இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார்.

    உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது.

    கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நவம்பர் 23 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

  • iswaryam-vazhangum-sabari-malai-padi-poojai

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

    சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.

    சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.

  • ishvaryam-vazhangum-sabarimalai

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.
    சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.
    சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
    இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.

  • irumudiyin-thathuvathai-therindhu-kolvom

    சபரிமலையின் யாத்திரையில் ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து விரதத்தின் முடிவில் இருமுடி சுமந்து ஐயனை தரிசிக்கின்றனர்.
    ஐயப்பனுக்காக 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே இருமுடியை தலையில் வைத்து சுமந்து செல்லும் தகுதியைப் பெறுகிறார்கள். தலையில் இருமுடி இல்லாதவர்கள் பரிசுத்த படிகளான புனிதமான படிகளாகக் கருதப் படும் 18 படிகளை ஏற அனுமதிக்கப் படுவதில்லை

    இருமுடி சுமந்து செல்வது ஏன்? இருமுடியின் மகத்துவம் என்ன என்பது குறித்து பார்ப்போம்…

    இறைவனுக்கு உரிய இறைவனுக்கு படைப்பதற்கான பொருட்களை வைப்பதற்கு என்று தனிப்பட்ட முறையில் உருவாக்கப் பட்ட இரு அறைகளைக் கொண்ட பை இருமுடி. தலையில் வைத்து சுமந்து செல்லும் இருமுடி பருத்தித் துணியால் கைகளால் தைக்கப் பெற்றதாக இருக்க வேண்டும்.
    மையத்தில் திறக்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ள, இருமுடியின் முன்னால் உள்ள அறை முன்முடி என்றும் இருமுடியின் பின்னால் உள்ள அறை பின்முடி என்றும் அழைக்கப் படுகிறது .

    இருமுடியின் முன்னால் உள்ள அறையில் இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய பக்தி பொருட்கள் அனைத்தும் நிரப்பப் பட்டிருக்கும்.
    இருமுடியின் பின்னால் உள்ள அறை புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது .அதில் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களின் தேவையை நிறைவு செய்வதற்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களும் அதில் நிரப்பப் பட்டிருக்கும்.

    இருமுடி கொண்டு செல்வதற்கான காரணங்கள் ….
    பண்டைக் காலங்களில் ஐயப்பனுக்காக விரதம் இருந்து இருமுடியை சுமந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் செல்ல வேண்டி இருந்தது.
    வனப் பகுதியில் உள்ள கோயில் என்பதால் வனங்களில் இருள் நிறைந்த பகுதிகளிலும், கரடு முரடான பகுதிகளிலும் செல்ல வேண்டி இருந்தது . உணவுக்கான வசதி கிடைக்காது என்பதால் இறைவனுக்குரிய வழிபாட்டுப் பொருட்களுடன் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றனர்.
    இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்களும் ,ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டையும் தனித் தனியாகப் பிரித்து பையில் கட்டி கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது .
    இரண்டு பொருட்களையும் வேறுபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பையின் முன் பகுதியில் இறைவனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்களையும், பையின் பின்பகுதியில் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றனர்.
    இருமுடி – உணவுப் பொருட்கள்
    உணவு சமைப்பதற்கான அரிசி எண்ணெயுடன் கலந்து விடாமல் தனியாகப் பிரித்து வைத்தும் உணவு சமைப்பதற்கான எண்ணெய் அரிசியுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக தேங்காயின் கண்களில் சிறு துளை போட்டு அதில் எண்ணையை ஊற்றிய பிறகு தேங்காயின் கண்களில் உள்ள துளையை சிறு மூடும் பொருள் மூலம் மூடி சமைப்பதற்கு கொண்டு சென்றனர்.
    அதனுடன் படுத்துக் கொள்வதற்குத் தேவையான விரிப்புகள் ,போர்த்திக் கொள்வதற்குத் தேவையான துணிகள் , வழிப்பயணத்திற்குத் தேவையான பொருட்களையும் கொண்டு செல்வதற்கான முறைகளும் இருந்தது

    இருமுடி – நிறங்கள்
    பண்டைக் காலங்களில் இருமுடி சுமந்து முதன் முறையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதாவது கன்னி ஐயப்பன்மார்கள் சிவப்பு நிறத்திலான இருமுடியைச் சுமந்து சென்றனர் .அவர்களைத் தவிர்த்து மற்ற ஐயப்பமார்கள் வெள்ளை நிறத்திலான இருமுடியைச் சுமந்து சென்றனர் .
    ஐயப்ப பக்தர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை மக்கள் எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த நிற வேறுபாடு உருவாக்கப் பட்டிருந்தது.
    தற்காலத்தில் இருமுடியின் இரு அறைகளிலும் இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்கள் மட்டுமே நிரப்பப் பட்டு கொண்டு செல்லப் படுகிறது.

    இருமுடி – வழிபாட்டுப்பொருட்கள்
    இருமுடியில் வைக்கப்பட வேண்டிய வழி பாட்டுப் பொருட்கள் ….
    2 தேங்காய்கள் அல்லது 3 தேங்காய்கள் எடுத்துக் கொள்ளப் படுகிறது அதில் ஒரு தேங்காய் நெய் நிரப்பப் பட்டும் மற்ற இரண்டு தேங்காய்கள் வழிபாட்டிற்காகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது.
    நெய் நிரப்பப் பட்ட தேங்காய் ஐயப்பனின் அபிஷேகத்திற்காகவும் மற்ற இரண்டு தேங்காய்கள் விடலை விடுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது . சிலர் விடலை விடுவதற்காக 3 அல்லது 4 தேங்காய்களையும் கொண்டு செல்கின்றனர்.
    காணிக்கை செலுத்துவதற்கு நாணயம் ;
    முந்திரி ,சுக்கு, ஏலக்காய் ,பேரீச்சம்பழம் ,சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்ட தேன் ,மஞ்சள் பொடி ,குங்குமம், திருநீறு ,சந்தனம், சாம்பிராணி ,கற்பூரம் ,அகர்பத்தி ,பன்னீர் , எலுமிச்சை ,
    காணிக்கை செலுத்துவதற்கு அரசியும் பருப்பும்;
    வெற்றிலை பாக்கு ,அவல்பொரி ,கற்கண்டு ,உலர் திராட்சை , கதலிப் பழம் ,வறுத்த அரிசிப்பொடி ,நல்லமிளகு ஆகியவைகளில் எவை தேவைப் படுகிறதோ அவை நிரப்பப் பட்டும் ,எவை தேவை இல்லையோ அவை நீக்கப் பட்டும் வழிபாட்டுப் பொருட்கள் இருமுடியில் நிரப்பப் படுகிறது
    இருமுடியில் முன்னால் உள்ள அறையில் ஐயப்ப பக்தர்கள் இரு கைகளாலும் அரிசியை எடுத்துக் கொண்டு இருமுடியின் முதல் அறையில் இடுகின்றனர் இதைப் போல தொடர்ந்து மூன்று முறை இடப்படுகிறது
    ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அரிசியை இடும் முறையும் உள்ளது
    அரிசியின் மேல் நெய் நிரப்பப்பட்ட தேங்காய் இருமுடியின் முன்னால் உள்ள அறையில் வைக்கப் படுகிறது
    அரிசியின் மேல் நாணயங்களும் இடப்படுகிறது. கற்பூரம் ,திருநீறு ,சந்தனம், பன்னீர் ஆகியவை இருமுடியின் முன்னால் உள்ள அறையில் வைக்கப் படுகிறது

    இருமுடியில் பின்னால் உள்ள அறையில், இரண்டு விடலைத் தேங்காய்கள் இருமுடியின் பின்னால் உள்ள அறையில் வைக்கப்படுகிறது .முதல் தேங்காய் 18 படி ஏறுவதற்கு முன்பு உடைத்து வலது காலை வைத்து 18 படியில் ஏறிச் செல்வதற்காக வைக்கப் படுகிறது ;இரண்டாவது தேங்காய் கோயிலை விட்டு வெளியே வந்த பிறகு உடைப்பதற்காக வைக்கப் படுகிறது.
    குங்குமம், மஞ்சள் பொடி ஆகியவை இருமுடியின் பின்னால் உள்ள அறையில் வைக்கப்படுகிறது.
    ஒரு முறை இருமுடியை தூக்கி தலையில் வைத்து விட்டால் எக்காரணத்தைக் கொண்டும் கீழே வைக்கக் கூடாது .கீழே வைப்பதாக இருந்தால் துணியை அல்லது போர்வையை விரித்து அதன் மேல் தான் வைக்க வேண்டும்.

  • irumufiyin-thathuvam

    சபரிமலையின் யாத்திரையில் ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து விரதத்தின் முடிவில் இருமுடி சுமந்து ஐயனை தரிசிக்கின்றனர்.
    ஐயப்பனுக்காக 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே இருமுடியை தலையில் வைத்து சுமந்து செல்லும் தகுதியைப் பெறுகிறார்கள். தலையில் இருமுடி இல்லாதவர்கள் பரிசுத்த படிகளான புனிதமான படிகளாகக் கருதப் படும் 18 படிகளை ஏற அனுமதிக்கப் படுவதில்லை
    இருமுடி சுமந்து செல்வது ஏன்? இருமுடியின் மகத்துவம் என்ன என்பது குறித்து பார்ப்போம்…
    இறைவனுக்கு உரிய இறைவனுக்கு படைப்பதற்கான பொருட்களை வைப்பதற்கு என்று தனிப்பட்ட முறையில் உருவாக்கப் பட்ட இரு அறைகளைக் கொண்ட பை இருமுடி. தலையில் வைத்து சுமந்து செல்லும் இருமுடி பருத்தித் துணியால் கைகளால் தைக்கப் பெற்றதாக இருக்க வேண்டும்.
    மையத்தில் திறக்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ள, இருமுடியின் முன்னால் உள்ள அறை முன்முடி என்றும் இருமுடியின் பின்னால் உள்ள அறை பின்முடி என்றும் அழைக்கப் படுகிறது .
    இருமுடியின் முன்னால் உள்ள அறையில் இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய பக்தி பொருட்கள் அனைத்தும் நிரப்பப் பட்டிருக்கும்.
    இருமுடியின் பின்னால் உள்ள அறை புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது .அதில் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களின் தேவையை நிறைவு செய்வதற்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களும் அதில் நிரப்பப் பட்டிருக்கும்.
    இருமுடி கொண்டு செல்வதற்கான காரணங்கள் ….
    பண்டைக் காலங்களில் ஐயப்பனுக்காக விரதம் இருந்து இருமுடியை சுமந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் செல்ல வேண்டி இருந்தது.
    வனப் பகுதியில் உள்ள கோயில் என்பதால் வனங்களில் இருள் நிறைந்த பகுதிகளிலும், கரடு முரடான பகுதிகளிலும் செல்ல வேண்டி இருந்தது . உணவுக்கான வசதி கிடைக்காது என்பதால் இறைவனுக்குரிய வழிபாட்டுப் பொருட்களுடன் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றனர்.
    இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்களும் ,ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டையும் தனித் தனியாகப் பிரித்து பையில் கட்டி கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது .
    இரண்டு பொருட்களையும் வேறுபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பையின் முன் பகுதியில் இறைவனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்களையும், பையின் பின்பகுதியில் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றனர்.
    இருமுடி – உணவுப் பொருட்கள்
    உணவு சமைப்பதற்கான அரிசி எண்ணெயுடன் கலந்து விடாமல் தனியாகப் பிரித்து வைத்தும் உணவு சமைப்பதற்கான எண்ணெய் அரிசியுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக தேங்காயின் கண்களில் சிறு துளை போட்டு அதில் எண்ணையை ஊற்றிய பிறகு தேங்காயின் கண்களில் உள்ள துளையை சிறு மூடும் பொருள் மூலம் மூடி சமைப்பதற்கு கொண்டு சென்றனர்.
    அதனுடன் படுத்துக் கொள்வதற்குத் தேவையான விரிப்புகள் ,போர்த்திக் கொள்வதற்குத் தேவையான துணிகள் , வழிப்பயணத்திற்குத் தேவையான பொருட்களையும் கொண்டு செல்வதற்கான முறைகளும் இருந்தது
    இருமுடி – நிறங்கள்
    பண்டைக் காலங்களில் இருமுடி சுமந்து முதன் முறையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதாவது கன்னி ஐயப்பன்மார்கள் சிவப்பு நிறத்திலான இருமுடியைச் சுமந்து சென்றனர் .அவர்களைத் தவிர்த்து மற்ற ஐயப்பமார்கள் வெள்ளை நிறத்திலான இருமுடியைச் சுமந்து சென்றனர் .
    ஐயப்ப பக்தர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை மக்கள் எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த நிற வேறுபாடு உருவாக்கப் பட்டிருந்தது.
    தற்காலத்தில் இருமுடியின் இரு அறைகளிலும் இறைவனுக்கு உரிய அதாவது ஐயப்பனுக்கு உரிய வழிபாட்டுப் பொருட்கள் மட்டுமே நிரப்பப் பட்டு கொண்டு செல்லப் படுகிறது.
    இருமுடி – வழிபாட்டுப்பொருட்கள்
    இருமுடியில் வைக்கப்பட வேண்டிய வழி பாட்டுப் பொருட்கள் ….
    2 தேங்காய்கள் அல்லது 3 தேங்காய்கள் எடுத்துக் கொள்ளப் படுகிறது அதில் ஒரு தேங்காய் நெய் நிரப்பப் பட்டும் மற்ற இரண்டு தேங்காய்கள் வழிபாட்டிற்காகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது.
    நெய் நிரப்பப் பட்ட தேங்காய் ஐயப்பனின் அபிஷேகத்திற்காகவும் மற்ற இரண்டு தேங்காய்கள் விடலை விடுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப் படுகிறது . சிலர் விடலை விடுவதற்காக 3 அல்லது 4 தேங்காய்களையும் கொண்டு செல்கின்றனர்.
    காணிக்கை செலுத்துவதற்கு நாணயம் ;
    முந்திரி ,சுக்கு, ஏலக்காய் ,பேரீச்சம்பழம் ,சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்ட தேன் ,மஞ்சள் பொடி ,குங்குமம், திருநீறு ,சந்தனம், சாம்பிராணி ,கற்பூரம் ,அகர்பத்தி ,பன்னீர் , எலுமிச்சை ,
    காணிக்கை செலுத்துவதற்கு அரசியும் பருப்பும்;
    வெற்றிலை பாக்கு ,அவல்பொரி ,கற்கண்டு ,உலர் திராட்சை , கதலிப் பழம் ,வறுத்த அரிசிப்பொடி ,நல்லமிளகு ஆகியவைகளில் எவை தேவைப் படுகிறதோ அவை நிரப்பப் பட்டும் ,எவை தேவை இல்லையோ அவை நீக்கப் பட்டும் வழிபாட்டுப் பொருட்கள் இருமுடியில் நிரப்பப் படுகிறது
    இருமுடியில் முன்னால் உள்ள அறையில் ஐயப்ப பக்தர்கள் இரு கைகளாலும் அரிசியை எடுத்துக் கொண்டு இருமுடியின் முதல் அறையில் இடுகின்றனர் இதைப் போல தொடர்ந்து மூன்று முறை இடப்படுகிறது
    ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அரிசியை இடும் முறையும் உள்ளது
    அரிசியின் மேல் நெய் நிரப்பப்பட்ட தேங்காய் இருமுடியின் முன்னால் உள்ள அறையில் வைக்கப் படுகிறது
    அரிசியின் மேல் நாணயங்களும் இடப்படுகிறது. கற்பூரம் ,திருநீறு ,சந்தனம், பன்னீர் ஆகியவை இருமுடியின் முன்னால் உள்ள அறையில் வைக்கப் படுகிறது

    இருமுடியில் பின்னால் உள்ள அறையில், இரண்டு விடலைத் தேங்காய்கள் இருமுடியின் பின்னால் உள்ள அறையில் வைக்கப்படுகிறது .முதல் தேங்காய் 18 படி ஏறுவதற்கு முன்பு உடைத்து வலது காலை வைத்து 18 படியில் ஏறிச் செல்வதற்காக வைக்கப் படுகிறது ;இரண்டாவது தேங்காய் கோயிலை விட்டு வெளியே வந்த பிறகு உடைப்பதற்காக வைக்கப் படுகிறது.
    குங்குமம், மஞ்சள் பொடி ஆகியவை இருமுடியின் பின்னால் உள்ள அறையில் வைக்கப்படுகிறது.
    ஒரு முறை இருமுடியை தூக்கி தலையில் வைத்து விட்டால் எக்காரணத்தைக் கொண்டும் கீழே வைக்கக் கூடாது .கீழே வைப்பதாக இருந்தால் துணியை அல்லது போர்வையை விரித்து அதன் மேல் தான் வைக்க வேண்டும்.

  • noigalai-gunamakkum-panchanatha-natarajar

    திருச்சியை அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோயில். இந்த கோயிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்டவர்.

    பஞ்சநத நடராஜர் சிலையின் மகிமை…
    ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

    பாறைகளின் சிறப்புகள்
    ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது.
    நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன.
    சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கோயில் பஞ்சநத நடராஜர் கோயில் என அழைக்கப்படுகிறது.

    அழகே வடிவான இறைவி சிவகாமி அம்மை….
    இந்த கோயிலில் இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பு. அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இது காண்போரை மெய்மறக்க செய்கிறது.

    பஞ்சநதன நடராஜர் ஸ்தல வரலாறு…
    பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது).
    ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

    தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம்….
    ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.
    அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

    நோய் நீக்கும் நடராஜர்….
    சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

    இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்……….

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.
    இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

    மாற்று திசையில் நந்தி தேவர்….
    மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

    அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.

  • iyappanuku-viradham-irukkum-murai

    ஐயப்பனுக்காக மாலை அணிந்த நாள் முதல் விரத நாட்களின் எண்ணிக்கை தொடங்கி விடும். விரத நாட்கள் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன் விரத நாட்களில் அனுசரிக்க வேண்டிய கடைபிடிக்க வேண்டிய முறைகள் இருக்கின்றன.
    இதை ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் கண்டிப்பாக தன் விரத நாட்களில் பின்பற்றியே ஆக வேண்டும்.

    விரதம் இருக்கும் பக்தன் அதிகாலை சூரிய உதயத்திறகு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, பச்சைத் தண்ணீரில் குளித்து விட வேண்டும் .

    குளித்து முடித்து விட்டு திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும் .தேவைப் பட்டால் சந்தனத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும்
    பிறகு விளக்கு ஏற்றி வைத்து ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும்.

    ஐயப்பனை வணங்கி விட்டு விளக்கை அணைத்து விடக் கூடாது குறைந்தது ஒரு மணி நேரம் விளக்கு எரிய வேண்டும் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் பச்சைத் தண்ணீரில் குளித்து முடித்து விட்டு காலையில் எழுந்து செய்தது போலவே செய்ய வேண்டும்.
    விரதம் இருக்கும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    சிறிது நேரம் கோயிலிலேயே அமர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
    ஐயப்பன் கோயில் இருந்தால் அங்கு சென்று வணங்கலாம். ஐயப்பன் கோயில் இல்லையென்றால் வேறு ஏதேனும் ஒரு தெய்வம் உள்ள கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கலாம்.

    ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஐயப்பன் கோயிலுக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

  • thirukarthigai-murugan-vazhipadu

    திருவிளக்கு வழிபாட்டை முடித்து மறுதினம் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் மெழுகி, கழுவிச் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும்.  இல்லத்துப் பூஜையறையில் விநாயகப் பெருமான் படத்தோடு அருகில் முருகப்பெருமான் படத்தையும் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமானதாக அமையும்.

    காலையில் விரதமிருப்பது நல்லது. இரவு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். கார்த்திகையன்று விரதமிருந்து முத்துக்குமரனை வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். பெண்களுக்கு நல்ல கணவன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனைவி அமையவும் குழந்தைச்செல்வம் பெறவும், பெற்ற குழந்தைகள் கல்விச் செல்வம் பெறவும், அறிவு வளரவும் இந்த விரதம் பலன் தருகின்றது.

    இந்த விரதத்தின் மூலம் தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். இரவு வரை விரதமிருக்க முடியாதவர்கள் ஒரு நேரம் மட்டும் விரதமிருப்பதும் உகந்ததாகும். அமாவாசை விரதம் போல, கார்த்திகை விரதமன்றும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகே நாம் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பகலில் பசும்பால் மட்டும் அருந்தலாம். பழம் சாப்பிடலாம். அன்று மாலை பால், பழம், பருப்பு பாயசம் சாப்பிடலாம்.

    மறுநாள் பச்சரிசி சாதம், பருப்பு, வாழைக்காய் அவியல், கூட்டு ஆகியவற்றை உட்கொள்வது நல்லது.
    கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம், இனிப்பு உருண்டைகளை நைவேத்தியமாக வீட்டில் வைத்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற கவசங்களை பாராயணம் செய்வது நல்லது. அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று கந்தன் சன்னிதியில் கைகூப்பித் தொழுவது நல்லது. மேலும், இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு.

  • pradosha-kalathil-sivalayangalai-valam

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.
    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
    சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது
    நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.