Author: சக்தி ஆன்லைன் டீம்

  • 3

    திருப்பதி திருமலை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருமலையில் நேற்று தேவஸ்தான இணை செயல் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3 முதல், 11-ம் தேதி வரை நடக்கும் எனவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

    பிரம்மோற்சவ காலத்தில் சாதாரண பக்தர்களும் ஏழுமலை யானை எளிதாக தரிசிப்பதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, தங்குமிடம் ஆகியவையும் எவ்வித குறைபாடின்றி மேற் கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். கூட்ட நெரிசல், அசம்பாவித சம்பவங் களை தவிர்க்க பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரிக்கப்படும்’’ என்றும் அவர் கூறினார்.

  • 2016-07-29-05-27-01

    கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி தொடங்கி 12 நாள்கள் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி களப பூஜை 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா ஆக.1ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிவரை நடைபெறும். தொடக்கநாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடைபெறும். திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் தங்கக் குடத்தில் சந்தனம், களபம், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் நிரப்பப்பட்டு பூஜை நடைபெறும். இதை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ பூஜை செய்கிறார்.

    களப அபிஷேகத்துக்குப் பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணங்கள், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க அங்கிகவசம் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராத, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, தாமரை, துளசி உள்ளிட்ட பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அம்மன் உள்பிரகாரத்தில் வலம் வருதல், தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியன நடைபெறும்.
    ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் பாரதி, கோயில் மேலாளர் சிவராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

  • 2016-07-27-05-28-39

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சிறப்புப் பூஜைகளுடன் உண்ணாமுலையம்மன் சன்னிதியில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    தொடர்ந்து, ஆகஸ்ட் 4-ம் தேதி வரை தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர், ஸ்ரீபராசக்தி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், மாலை கோயில் வளைகாப்பு மண்டபத்தில் ஸ்ரீபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், வளைகாப்பு உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே தீ மிதி திருவிழா நடைபெறுகிறது. இத்துடன், இந்தக் கோயிலின் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • 2016-07-27-05-39-48

    ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் விழா கோலம் பூண்டுள்ளது. கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 5ம் படைவீடாக திகழும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி முதலான விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

    28ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா, தெப்பத்திருவிழாவும் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இங்கு ஆடிக்கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இன்று ஆடி பரணியும், 28ம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன.

  • 2016-07-26-02-24-44

    கர்நாடகாவின் சிறந்த சுற்றுலா தளமான கூர்க் பகுதிக்கு செல்பவர்கள் அவசியம் அங்குள்ள திபெத்திய கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும். அது நிச்சயம் உங்கள் வாழ்நாளில் ஒரு மாபெரும் அனுபவமாக இருக்கும். மைசூரில் இருந்து குடகின் தலைக்காவிரி உற்பத்தியாகும் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஊர்தான் குஷால்நகர்.  இந்த குஷால்நகருக்கு அருகில் உள்ள பைலகுப்பா பகுதியில் இருக்கிறது ஒரு குட்டி திபெத். இங்கு பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள Namdroling Monastry என்ற திபெத்திய கோவிலுக்குள் சென்றால் கிழக்காசிய தேசம் ஒன்றில் இருப்பதைப் போல் இருக்கிறது.

    திபெத்துக்கு அடுத்தபடியாக புத்த துறவிகள் அதிகம் இருப்பது இந்த பகுதியில் தான் என்றும் சுமார் 7000 புத்த துறவிகள் இங்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இங்கிருக்கும் புத்த மடாலயங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    திபெத்தியர்கள் இந்தியாவில் குடியேறும்போது பைலகுப்பே பகுதிக்கும் பலர் குடிபெயர்ந்தனர். புத்த சமயத்தை பரப்புவதற்காக  Penor Rinpoche என்பவரால் 1963ஆம் ஆண்டு கூர்க்கில் ஒரு மடம் உருவாக்கப்பட்டு சன்னியாசிகள் மற்றும் துறவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இந்த மடத்தின் முழுப் பெயர் “Thekchog Namdrol Shedrub Dargye Ling” சுருக்கமாக “Namdroling”.

    இங்கு உள்ள 60 அடி உயர தங்க புத்தர் சிலை, பத்மசாம்பவா சிலை, அமித்யாயுஸ் சிலை ஆகியவை தங்க முலாம் பூசப்பட்டு விளக்கு வெளிச்சத்தில் தகதகவென மின்னுகின்றன. நடுவில் இருக்கும் புத்தர் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். வலப்பக்கம் இருக்கும்  பத்மசாம்பசிவா “இரண்டாவது புத்தர் ” என்று திபெத்தியர்களால் அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்த சமயத்தை திபெத் மக்களிடம் பரப்பியவர். இடப்பக்கம் இருக்கும் புத்த அமித்யாயுஸ், அரசராக இருந்து பௌத்த மதத்தை தழுவியவர். இவருடைய சிலையை நிறுவியவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோல இந்த கோவிலின் கோபுரங்களுக்கும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த கோவிலே கெகஜ்ஜோதியாக காட்சியளிக்கிறது.

    கோவிலுக்குள் உள்ள சுவர்களில் புத்த மத இதிகாச சம்பவங்களை நினைவு கூறும் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு இருப்பது நம்முடைய கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இப்படி ஆர்வமாக கோவிலை சுற்றிப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, வழிபாடு செய்யும் நேரம் வந்தது. வழிபாட்டை தொடங்குவதற்கு முன் பச்சை துணி போர்த்தியிருக்கும் மிகப்பெரிய மணியை அடிக்கிறார்கள். சத்தம் கேட்டதும் ஆங்காங்கே குழுமியிருக்கும் துறவிகள் ஒன்று சேர தொடங்குகிறார்கள். வழிபாட்டுக்கு செல்லும் போதே அத்தனை பேரும் வரிசையாக அணிவகுத்து தான் செல்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியை கடைபிடிப்பது இங்கிருப்பவர்களின் சிறப்பு.

    மணி அடித்ததும் 100க்கணக்கான புத்த துறவிகள் கோவிலுக்குள் வந்து கீழே அமைக்கப்பட்டு இருக்கும் அவரவர் இடத்தில் அமர்ந்து வழிபாட்டை தொடங்குகிறார்கள். அனைவரும் ஒரு சேர தங்கள் முன் வைத்திருக்கும் புனித நூலில் இருக்கும் வரிகளுக்கு ஏற்ப இசையுடன் வழிபாடு நடத்தியது பார்ப்பதற்கே பரவச அனுபவமாக இருந்தது. இந்த வழிபாட்டை நாம் அருகில் இருந்தே பார்க்கலாம். ஆனால் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. வழிபாட்டின் நடுவே அனைவருக்கும் அருந்துவதற்காக பால் வழங்கப்படுகிறது.

    கோவிலை சுற்றிலும் பச்சை பசேலென்று பூங்காவை அமைத்து வெகு அழகாக பராமரித்து வருகிறார்கள். அனைத்தும் அத்தனை நேர்த்தியாக இருக்கிறது.. 

    கோவிலுக்கு உள்ளே திபெத்தில் உள்ள PALYUL MONASTRY இன் மினியேச்சரை அமைத்திருக்கிறார்கள். மலை முகட்டில் குட்டி குட்டியாய் வீடுகள் அந்த அழகிற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு சேர்க்கின்றன. அமைதியை விரும்புவர்கள் இந்த கோவிலுக்கு நிச்சயம் சென்று வாருங்கள். ஆழ்ந்த அமைதியுடன் நானும் என் கணவரும் நிம்மதியாக ரசித்தோம்.

    கோவிலுக்கு உள்ளேயே சில கடைகள் இருக்கின்றன. இங்கு பாரம்பரிய திபெத் உடைகள், பொருட்கள், சிலைகள், நகைகள், சந்தன சோப்பு வகைகள், சென்ட் வகைகள் என பல்வேறு பொருட்கள் இருப்பதால் ஆன்மீகத்துடன் சேர்ந்து ஆனந்தமான ஷாப்பிங் அனுபவமும் கிடைக்கிறது.

    – ஹேமா ராக்கேஷ்

    தந்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர். ஆவணப் பட இயக்குனரும் கூட.. தர்மபுரி தொட்டில் குழந்தைகள் திட்டத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய பூந்தளிர்கள் என்ற ஆவணப்படம் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. முகநூலில் சாதனை பெண்களை அடையாளப்படுத்த ஆராதனா என்ற பக்கத்தில் பல சாதனை பெண்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

  • 10

    வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஆடிக்குண்டம் விழா துவங்கியதை அடுத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீமிதித்து அம்மனை வழிப்பட்டனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 24ம் தேதி கொடியேற்றப்பட்டு, நேற்று பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை, 3 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை, 6 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினார்.

  • 27

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் உள்ள காந்திமதியம்மன் சன்னதியில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் அம்மன் சன்னதியில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி ஜூலை 27 ஆம் தேதி காலை 6.15 முதல் 7.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன்பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற உள்ளது. இம் மாதம் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு காந்திமதியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். பத்தாம் திருநாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் இக் கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாளும், அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடுகளும் நடைபெற உள்ளன.

  • 27

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் உள்ள காந்திமதியம்மன் சன்னதியில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் அம்மன் சன்னதியில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி ஜூலை 27 ஆம் தேதி காலை 6.15 முதல் 7.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன்பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற உள்ளது. இம் மாதம் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு காந்திமதியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். பத்தாம் திருநாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் இக் கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாளும், அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடுகளும் நடைபெற உள்ளன.

  • 2016-07-26-16-22-36

    திருப்பதி ஏழுமலையானை உடனடியாக தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர அரசு பேருந்துகளில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்கும் முறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    சென்னை, கோவை, ஐதராபாத், புதுச்சேரி போன்ற நகரங்களில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் ஆந்திர அரசின் சொகுசு பேருந்துகளில் செல்லும் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

    ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட் பெறும் திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலமும், திருப்பதி மற்றும் தேவஸ்தானம் அங்கீகரிக்கப்பட்ட கோயில்களிலும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இப்போது கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

  • 2016-07-26-16-22-36

    திருப்பதி ஏழுமலையானை உடனடியாக தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர அரசு பேருந்துகளில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்கும் முறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    சென்னை, கோவை, ஐதராபாத், புதுச்சேரி போன்ற நகரங்களில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் ஆந்திர அரசின் சொகுசு பேருந்துகளில் செல்லும் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

    ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட் பெறும் திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலமும், திருப்பதி மற்றும் தேவஸ்தானம் அங்கீகரிக்கப்பட்ட கோயில்களிலும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இப்போது கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.