மே 08 – கார்த்திகை…
குரோதி வருடம் – சித்திரை – 25
மே 8, 2024
புதன்
நல்ல நேரம் : 9.30 – 11.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : பிரதமை
திதி நேரம் : அமாவாசை கா 9.19
நட்சத்திரம் : பரணி ம 2.11
யோகம் : சித்த-அமிர்த
சந்திராஷ்டமம் : பூரம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Author: cmsadmin
-
மே 08 – கார்த்திகை…
-
சகல யோகங்களும் பெற அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்…
அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.
வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.
ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.
நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும்.
மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
-
மே 07 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – தெளிவு
ரிஷபம் – நன்மை
மிதுனம் – பிரீதி
கடகம் – புகழ்
சிம்மம் – பயம்
கன்னி – ஆர்வம்
துலாம் – அமைதி
விருச்சிகம் – இன்பம்
தனுசு – ஆக்கம்
மகரம் – உற்சாகம்
கும்பம் – வரவு
மீனம் – பொறுமை
சந்திராஷ்டமம் – மகம், பூரம் -
மே 07 – அமாவாசை…
மே 07 – அமாவாசை…
குரோதி வருடம் – சித்திரை – 24
மே 7, 2024
செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 2.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : அமாவாசை
திதி நேரம் : சதுர்த்தசி கா 11.17
நட்சத்திரம் : அசுவினி ம 3.19
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : மகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
மே 06 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – சுபம்
ரிஷபம் – இன்பம்
மிதுனம் – முயற்சி
கடகம் – சாந்தம்
சிம்மம் – நலம்
கன்னி – வெற்றி
துலாம் – நட்பு
விருச்சிகம் – உயர்வு
தனுசு – புகழ்
மகரம் – போட்டி
கும்பம் – பெருமை
மீனம் – ஊக்கம்
சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம் -
மே 06 – சுபமுகூர்த்த நாள்…
மே 06 – சுபமுகூர்த்த நாள்…
குரோதி வருடம் – சித்திரை – 23
மே 6, 2024
திங்கள்
சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
நல்ல நேரம் : 6.30 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 4.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திதித்துவயம்
திதி நேரம் : துவாதசி ம 3.43
நட்சத்திரம் : திரையோதசி ம 1.25
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம்
சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரை மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, இளநீர் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-
மே 05 – சுபமுகூர்த்த நாள்…
மே 05 – சுபமுகூர்த்த நாள்…
குரோதி வருடம் – சித்திரை – 22
மே 5, 2024
ஞாயிறு
சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
பிரதோஷம்
நல்ல நேரம் : 7.30 – 8.30
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி ம 3.43
நட்சத்திரம் : உத்திரட்டாதி மா 6.08
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : பூசம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
மே 05 – இன்றைய ராசிபலன்…
இன்றைய ராசிபலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – ஆர்வம்
மிதுனம் – பக்தி
கடகம் – பேராசை
சிம்மம் – லாபம்
கன்னி – தடங்கல்
துலாம் – ஆதாயம்
விருச்சிகம் – செலவு
தனுசு – ஜெயம்
மகரம் – பயம்
கும்பம் – வெற்றி
மீனம் – அனுகூலம்
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம் -
எதிரிகள் விலக அதிக சக்தி வாய்ந்த ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்….
அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக் கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும். வராக முகம் செல்வம் அளிக்கும். அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும்.
பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடி வில் ஒருங்கிணைந்து உள்ளார்.
கிழக்கு முகம் – ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம்……
கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
"ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா"
தெற்கு முகம்
நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.
கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்.
"ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய
தக்ஷண முகேகரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா"மேற்கு முகம் – கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.
கீழ் கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்.
"ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா"வடக்கு முகம்
வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் ஆகியவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும்.
கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.
"ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா".
மேல் முகம்
ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
"ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா".
அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கு சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.