Author: cmsadmin

  • மேஷ ராசிக்கான டிசம்பர் மாத ராசிபலன்

    மேஷம் (அஸ்வினி, பரணிகார்த்திகை 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு()  – சுக ஸ்தானத்தில் செவ்வாய்ரண ருண ரோக ஸ்தானத்தில் கேதுஅஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (), சந்திரன்பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன்லாப  ஸ்தானத்தில் சனிஅயன சயன போக  ஸ்தானத்தில் ராகு என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    03-12-2024 அன்று சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    15-12-2024 அன்று சூர்யன் அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-12-2024 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    மேஷராசியினரே, இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்உடல் ஆரோக்கியம் பெறும்மனதில் தைரியம் கூடும்சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக் கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.

    குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங் கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

    பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.

    மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    பரிகாரம்: சுவாமிமலை முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

    அசுபதி:

    இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

    பரணி:

    இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

    கார்த்திகை:

    இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

     

    பரிகாரம்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

    அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

  • நவம்பர் 08 – இன்றைய ராசிபலன்

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  செலவு
    ரிஷபம்         – துணிவு
    மிதுனம்     –  முயற்சி  
    கடகம்         –   பயணம்
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –     லாபம்  
    துலாம்         –  கவனம்  
    விருச்சிகம்     –  கீர்த்தி
    தனுசு         –   பயம்
    மகரம்         –   பொறுமை
    கும்பம்         –      ஆக்கம்
    மீனம்         –    நிம்மதி
    சந்திராஷ்டமம்    –        திருவாதிரை

  • நவம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…

    நவம்பர் 08 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – ஐப்பசி 22
    நவம்பர் 08 – 2024
    வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சப்தமி இ 8.22
    நட்சத்திரம் :  உத்திராடம் கா 9.37
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் :   திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி…

    பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

     அறுபடைவீடுகளில் மூன்றும் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கந்தசஷ்டி  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. பிற்பகல் நேரத்தில் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி,  மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார்.

    தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹார நிகழ்சசியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.  

    300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சூரர்களை சம்ஹாரம் செய்த நிலையில் நாளை சண்முகர் -வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது.இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி , பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி செந்தில்குமார் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

  • பழமுதிர் சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்…

    முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹாரம்: கொட்டும் மழையில் வெள்ளி வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வை திரளான பக்தர்கள் "அரோகரா, வெற்றிவேல் வீரவேல்" என்ற கோஷத்துடன் கண்டும்  சுவாமியை மலர்தூவி வரவேற்று தரிசனம் செய்து திரளான பக்தர்கள் வழிபாடு..:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் மலைமேல் ஆறாவது படை வீடாக போற்றப்படக் கூடிய பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கொண்டாக்கூடிய கந்தசஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் சமேதராக வீற்றிருக்கும் சோலைமலை உற்சவ மூர்த்திக்கு பால், பன்னீர், திரவியம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் தொடர்ந்து அலங்கார மகா தீபாரதனையும் நடைபெற்று வருகின்றது.

    தொடர்ந்து, சஷ்டி விழாவின் முதல் நாளில் முருக பெருமான் அன்னவாகனத்திலும், இரண்டாவது நாள் விழாவில், காமதேனு வாகனத்திலும், மூன்றாவது நாளில் யானை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், ஜந்தாவது நாளான நேற்று முருகபெருமான் சமேதராக
    சப்பர வாகனத்தில் புறப்பாடு திருக்கோவிலில் உள்ள மண்டபத்தை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து சஷ்டி விழாவின் முக்கிய நாளான இன்று, ஆறாவது நாள் விழாவாக காலை யாகசாலை பூஜையும், தொடர்ந்து சுவாமிக்கு  பால், பன்னீர். இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் முருகன் பெருமான் புறப்பாடு நடைபெற்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து, மாலை வெள்ளி மயில் வானத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோயிலின் அருகேயுள்ள நாவல் மரத்தடி ஈசான திக்கில் "வெள்ளி வேல் கொண்டு"  கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும், சம்ஹாரம் செய்து, தொடர்ந்து பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது பரவலாக மழை பெய்த நிலையிலும், கூடியிருந்த திரளான பக்தர்களின் "அரோகரா கோஷமும், வெற்றிவேல் வீரவேல் கோஷமும்" விண்னை பிளந்தது. மேலும் இந்த சூரசம்ஹாரம் முடிந்து திருக்கோயிலுக்கு திரும்பிய சுவாமியை கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து, நாளை ஏழாவது நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும் அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் சஷ்டி விழா நிறைவடைய உள்ளது. நடைபெறுகிறது.

  • சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்…

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு ஆராதனை நடந்தேறியது.  

    முருகப்பெருமான் வீரபாகுவுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாக, யானை முகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதையடுத்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார்.

    தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன் வாகனமாக ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹார விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர்.

  • உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் வீதியில் நடைபெற்ற சூரசம்ஹார விழா…

    சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய உபகோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழா: உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் வீதியில் நடைபெற்ற இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

    சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவில்களில் ஒன்றான ஆலயத்தின் வடக்குபகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இவ்வாலயத்தில் கடந்த  2ம் தேதி முதல் நடைபெற்று வரும் கந்தசஷ்டி விழாவின் சிறப்பு நிகழ்வான சூரசம்ஹார விழா உலக பிரசித்திபெற்ற ஆழித்தேரோடும் திருவாரூர் வடக்குராஜ வீதியில் விமர்சையாக நடைபெற்றது.

    இவ்விழாவில் சூரபத்மன் பல்வேறு உருவங்களில் அதாவது கஜமுகாசுரனாகவும், சிங்கமுகாசுரனாகவும், சூரபத்மனாகவும் ஸ்ரீமுருகப்பெருமானை எதிர்கொண்டு போரிட்டபோது ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுருகப்பெருமான் தன்னிடம் உள்ள வெற்றிவேலைக்கொண்டு சூரபத்மன் தலையை கொய்து  வதம் செய்தார்.

    பிரசித்திபெற்ற இச்சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா அரோகரா என பக்தி பரவச கோஷத்துடன் முருகப்பெருமானை மனமுருக வழிபட்டனர். இதனை தொடர்ந்து சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் ஸ்ரீமுருகப்பெருமான் சன்னதியில் மண்டியிட்டு பிரகாரத்தினை வலம்வந்து 6 நாள் சஷ்டி விரதத்தை நிறைவுசெய்தனர். இவ்விழாவில் கார்த்திகை வழிபாட்டுச்ங்க நிர்வாகிகள் ராஜ்குமார், சௌரிராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

  • திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி, புஷ்பாஞ்சலி….

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை திருவிழா நவம்பர் இரண்டாம் தேதி பூஜை உடன் தொடங்கியது.

    இன்று ஆறாம் நாள் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முக பெருமாளுக்கு பத்து டன் வண்ண மலர்களால் சிறப்பு பூஜை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை சண்முகப் பெருமானுக்கு காண்பிக்கப்பட்டது.

    திரளான பக்தர்கள் மூன்று மணி நேரம் பூஜையில் கலந்து கொண்டு சாமிக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலியை அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

  • நவம்பர் 07 – சஷ்டி நாள் ராசிபலன்

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  துணிவு
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     –  இன்பம்
    கடகம்         –   லாபம்
    சிம்மம்         –   யோகம்
    கன்னி         –     துன்பம்
    துலாம்         –  உற்சாகம்
    விருச்சிகம்     –  பொறுமை
    தனுசு         –   பயணம்
    மகரம்         –   சாந்தம்
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –    உயர்வு
    சந்திராஷ்டமம்    –        மிருகசீருஷம்

     

  • நவம்பர் 07 – சூரசம்ஹாரம்…

    நவம்பர் 07 – சூரசம்ஹாரம்…
    குரோதி வருடம் – ஐப்பசி 21
    நவம்பர் 07 – 2024
    வியாழன்
    சூரசம்ஹாரம்,
    கோயில்களில் சூரசம்ஹாரம் தரிசித்தல்
    கந்தசஷ்டி விரதம் முடிவு
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  சஷ்டி இ 9.32
    நட்சத்திரம் :  பூராடம் கா 9.55
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   மிருகசீரிடம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்