Author: cmsadmin

  • ஈடு இணையில்லா பக்தி எது?…

    ஆன்மீகத்தின் முக்கிய அம்சம் இறைவனும், சகலமும் அவனே என சரணாகதி அடைவதும்தான். ஆனால் ஆன்மீக விவகாரத்தில் இறைவனை எவ்வழியில் யார்யார் எப்படியெப்படி காண்கிறார்கள் என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.
    பெருமாள், முருகன், காளி, சிவன் லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என பல வடிவங்களில் சொல்லப்படும் இறைசக்தியை, சிலர் மறுப்பார்கள். அதுவும் அப்பட்டமான உண்மையே..அதாவது, ‘’எல்லாவற்றையும் மிஞ்சிய சக்தி உண்டு. ஆனால் அதன் வடிவம் இப்படித்தான் என்று வரையறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’’ என்பதே இதன் பின்னணி.
    உதாரணத்திற்கு ஏதாவது உருவக்கடவுளைப்பற்றி விவாதிக்கையில், அந்த கடவுளின் சக்தி, எல்லை போன்றவை பற்றி கேள்விகள் எழும். அகில உலகத்தையும் ஒரு கடவுள் ஆட்டிப்படைக்கிறார் என்றால், ஒவ்வொரு நாட்டிலும், எத்தனையெத்தனையோ கடவுள்கள் எப்படி உருவாகமுடியும். சிவன்தான் மனித குலத்தை படைக்கிறார் என்றால் அவர் ஏன் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் ஆட்கொள்ளமுடியவில்லை?
    இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளெல்லாம் தேவையில்லை என்பதே இறைவனே இல்லாத நிறைபக்தி நிலை.
    உலகில் பெரும்பாலான குற்றங்களை தடுப்பது அரசோ, காவல்துறை மீதான பயமோ அல்ல. யாரும் பார்க்கமுடியாத, கண்டுபிடிக்கமுடியாத குற்றங்கள், மோசடிகள் போன்றவற்றை ஒரு மனிதன் தவிர்ப்பது, அவனை ஆட்டிப்படைக்கும் மனசாட்சியால் மட்டுமே.
    வறுமையோடும் பசியோடும் இருப்பவர்கள், தனியாக இருக்கும் ஒரு குழந்தையின் வசமுள்ள விலையுயர்ந்த ஆபரணங்களை சுலபமாக களவாடிவிடமுடியும். கொள்ளை புத்தி கொண்ட ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோர் அப்படி செய்யாததற்கு காரணம், அப்படி செய்வது பாவம் என, யாருடைய உந்துதலும் இன்றி மனசாட்சி தடுப்பதாலேயே.
    மற்றவர்களிடமிருந்து பணம், பொருள் உட்பட பல விஷயங்களை பிறர் கண்டறியாதவகையில் அபகரிக்கும் வாய்ப்பு, எடுத்துப்போகும் வாய்ப்பு எல்லோருக்குமே கிடைக்கும். ஆனால் அப்படி செய்கிறோமா? தெருவில் கேட்பாரற்று கிடக்கும் ஒரு முக்கிய பொருளைக் கண்டால் அதன் உரியவரிடம் சேர்க்கத்தான் பெரும்பாலானோரின் மனது துடிக்கும். இதுதான் மனசாட்சியின் மகிமை.
    இப்படி எல்லாவகையிலும் குற்றங்களை தடுத்தும் நல்ல புத்திகளை கொடுப்பதுமான மனசாட்சியும், தன்னம்பிக்கையும் சேர்ந்த ஒரு அம்சம்தான் நம்முள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்.
    கடவுள் நமக்கு அள்ளியும் கொடுக்கவும் மாட்டார்.. நம்மிடமிருந்து பறிக்கவும் மாட்டார். நம்மை ஆசிர்வதிக்கவும் மாட்டார்..தண்டிக்கவும் மாட்டார்.. ஏனெனில் கடவுள் என்ற ஒருவரே கிடையாது. நம்முள் இருக்கும் மனசாட்சியும், ‘இனி நடக்கும் எதுவும் நல்லதாகவே நடக்கும்’ என்ற பலத்தை தரும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு அரூபமே, மகா சக்தி என்கிற சிந்தனை.
    கும்பிடுகிற கோவிலில் உள்ள சாமி எதுவாக இருந்தாலும், அது நம்முடைய உள்தோற்றதை பிரதிபலிக்கும் முகக் கண்ணாடிதான்.
    வழிபாடு என்ற பெயரில் நாம் சரணாகதி அடைகிறோம். நம்முடைய தவறுகளை மனம்விட்டு ஒப்புக்கொண்டு மனதை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யமாட்டேன் என திருத்திக்கொள்கிறோம். நாம் கும்பிடும் சாமி நமக்கு நல்லதே செய்யும் என அடியோடு நம்புகிறோம்..
    எப்பேர்பட்டவரும் கோவிலுக்குள் வழிபடும்போது சரணாகதி அடையாமல் ‘’நான் வந்திருக்கிறேன்..எனக்கு நீ அருள் புரிந்தே தீரவேண்டும்’’ என்று அகங்காரத்துடன் வழிபடுவதே கிடையாது.. சர்வ நாடிகளும் ஒடுங்கிவிடும் தருணம்.
    நமக்குள் இருக்குள் ஆற்றலை நாமே வழிபட்டுக்கொள்வதுதான் இறைவனில்லா ஆனால் ஈடுஇணையில்லா பக்தி.

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

     
     
  • ஈடு இணையில்லா பக்தி எது?…

    ஆன்மீகத்தின் முக்கிய அம்சம் இறைவனும், சகலமும் அவனே என சரணாகதி அடைவதும்தான். ஆனால் ஆன்மீக விவகாரத்தில் இறைவனை எவ்வழியில் யார்யார் எப்படியெப்படி காண்கிறார்கள் என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.
    பெருமாள், முருகன், காளி, சிவன் லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என பல வடிவங்களில் சொல்லப்படும் இறைசக்தியை, சிலர் மறுப்பார்கள். அதுவும் அப்பட்டமான உண்மையே..அதாவது, ‘’எல்லாவற்றையும் மிஞ்சிய சக்தி உண்டு. ஆனால் அதன் வடிவம் இப்படித்தான் என்று வரையறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’’ என்பதே இதன் பின்னணி.
    உதாரணத்திற்கு ஏதாவது உருவக்கடவுளைப்பற்றி விவாதிக்கையில், அந்த கடவுளின் சக்தி, எல்லை போன்றவை பற்றி கேள்விகள் எழும். அகில உலகத்தையும் ஒரு கடவுள் ஆட்டிப்படைக்கிறார் என்றால், ஒவ்வொரு நாட்டிலும், எத்தனையெத்தனையோ கடவுள்கள் எப்படி உருவாகமுடியும். சிவன்தான் மனித குலத்தை படைக்கிறார் என்றால் அவர் ஏன் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் ஆட்கொள்ளமுடியவில்லை?
    இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளெல்லாம் தேவையில்லை என்பதே இறைவனே இல்லாத நிறைபக்தி நிலை.
    உலகில் பெரும்பாலான குற்றங்களை தடுப்பது அரசோ, காவல்துறை மீதான பயமோ அல்ல. யாரும் பார்க்கமுடியாத, கண்டுபிடிக்கமுடியாத குற்றங்கள், மோசடிகள் போன்றவற்றை ஒரு மனிதன் தவிர்ப்பது, அவனை ஆட்டிப்படைக்கும் மனசாட்சியால் மட்டுமே.
    வறுமையோடும் பசியோடும் இருப்பவர்கள், தனியாக இருக்கும் ஒரு குழந்தையின் வசமுள்ள விலையுயர்ந்த ஆபரணங்களை சுலபமாக களவாடிவிடமுடியும். கொள்ளை புத்தி கொண்ட ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோர் அப்படி செய்யாததற்கு காரணம், அப்படி செய்வது பாவம் என, யாருடைய உந்துதலும் இன்றி மனசாட்சி தடுப்பதாலேயே.
    மற்றவர்களிடமிருந்து பணம், பொருள் உட்பட பல விஷயங்களை பிறர் கண்டறியாதவகையில் அபகரிக்கும் வாய்ப்பு, எடுத்துப்போகும் வாய்ப்பு எல்லோருக்குமே கிடைக்கும். ஆனால் அப்படி செய்கிறோமா? தெருவில் கேட்பாரற்று கிடக்கும் ஒரு முக்கிய பொருளைக் கண்டால் அதன் உரியவரிடம் சேர்க்கத்தான் பெரும்பாலானோரின் மனது துடிக்கும். இதுதான் மனசாட்சியின் மகிமை.
    இப்படி எல்லாவகையிலும் குற்றங்களை தடுத்தும் நல்ல புத்திகளை கொடுப்பதுமான மனசாட்சியும், தன்னம்பிக்கையும் சேர்ந்த ஒரு அம்சம்தான் நம்முள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்.
    கடவுள் நமக்கு அள்ளியும் கொடுக்கவும் மாட்டார்.. நம்மிடமிருந்து பறிக்கவும் மாட்டார். நம்மை ஆசிர்வதிக்கவும் மாட்டார்..தண்டிக்கவும் மாட்டார்.. ஏனெனில் கடவுள் என்ற ஒருவரே கிடையாது. நம்முள் இருக்கும் மனசாட்சியும், ‘இனி நடக்கும் எதுவும் நல்லதாகவே நடக்கும்’ என்ற பலத்தை தரும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு அரூபமே, மகா சக்தி என்கிற சிந்தனை.
    கும்பிடுகிற கோவிலில் உள்ள சாமி எதுவாக இருந்தாலும், அது நம்முடைய உள்தோற்றதை பிரதிபலிக்கும் முகக் கண்ணாடிதான்.
    வழிபாடு என்ற பெயரில் நாம் சரணாகதி அடைகிறோம். நம்முடைய தவறுகளை மனம்விட்டு ஒப்புக்கொண்டு மனதை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யமாட்டேன் என திருத்திக்கொள்கிறோம். நாம் கும்பிடும் சாமி நமக்கு நல்லதே செய்யும் என அடியோடு நம்புகிறோம்..
    எப்பேர்பட்டவரும் கோவிலுக்குள் வழிபடும்போது சரணாகதி அடையாமல் ‘’நான் வந்திருக்கிறேன்..எனக்கு நீ அருள் புரிந்தே தீரவேண்டும்’’ என்று அகங்காரத்துடன் வழிபடுவதே கிடையாது.. சர்வ நாடிகளும் ஒடுங்கிவிடும் தருணம்.
    நமக்குள் இருக்குள் ஆற்றலை நாமே வழிபட்டுக்கொள்வதுதான் இறைவனில்லா ஆனால் ஈடுஇணையில்லா பக்தி.

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

     
     
  • அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு ஐந்தாம் தேதி தொடக்கம்

    விராலிமலையில் அறுபத்தி ஆறாம் ஆண்டு அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. 

    விராலிமலையில் அருணகிரிநாதருக்கு கோயில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் 66 ஆண்டுகளாக தொடர்ந்து விழா எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
    மாலை 5 மணிக்கு விழா பேருரையுடன் தொடங்கும் முதல் நாள் நாள் நிகழ்வில் திருபுகழ் எனும் தலைப்பில் சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவாற்றுகிறார், அதனைத் தொடர்ந்து ஆர். காஷ்யாப் குழுவினரின் பக்திபாடல் கச்சேரியும், திருப்பதி தேவஸ்தான இசைக்கல்லூரி ஆசிரியர் காளகஸ்தி முனிக்குமார் நாதஸ்வரம், விராலிமலை ஆர்எம்ஜெ. கார்த்திக் சிறப்புதவுல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    2-ஆம் நாள் மாலை 7 மணிக்கு விராலிமலை வேந்தன் என்றத் தலைப்பில் மனம் சேர சந்திரகாசனின் சமய சொற்பொழிவும், எம். ஜெயகுமாரின் சாக்ஸ போன் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

    3-ஆம நாள், மங்கள இசையுடன் தொடங்கும் விழாவில் கந்தன் கருணை எனும் தலைப்பில் ம. எழிலரசியின் ஆன்மீகச் சொற்பொழிவும், கோவிந்தராஜன் குழுவினரின் லயநாத இன்ப இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    4-ஆம் நாள், விடையாத்தியுடன் விழா நிறைவடைகிறது.3 நாள்களும் விழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிவரை நடைபெறும். விழா நாள்களில் மலை மீது உள்ள முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் மலைக்கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி(கூடுவிட்டுகூடுபாயும் வித்தை) தந்தருளிய சிறப்பு பெற்றத்தலமாகும், அதோடு இங்கோயிலில் நாரத மாமுனிக்கு சாபவிமோச்சனம் தந்தருளியதாகவும் கூறப்படும் இத்தலம் 207 படிகள் கொண்டதாகும் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி,தெய்வானை சமேதகராக மலைமீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

  • ஆண்டாள் கோயில் தேரோட்டம்… விழாக்கோலம் பூண்ட திருவில்லிபுத்தூர்

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெள்ளி கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரம் தினத்தன்று ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்டு 5 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கான நிகழ்ச்சிகள் கடந்த 28ம் தேதி துவங்கின. ஆண்டாள், ரெங்கமன்னார் தினமும் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தனர்.
    வெள்ளி கிழமை காலை 8.05 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அமைச்சர்கள், அறநிலைதுறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர் சக்கரம் பதியாமல் இருக்க பல லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகளை ராம்கோ நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாகி அதிகாரி ராமராஜா ஆகியோர் செய்துள்ளனர்.

  • அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5ல் தொடக்கம்

    விராலிமலையில் அறுபத்தி ஆறாம் ஆண்டு அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
    விராலிமலையில் அருணகிரிநாதருக்கு கோயில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் 66 ஆண்டுகளாக தொடர்ந்து விழா எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
    மாலை 5 மணிக்கு விழா பேருரையுடன் தொடங்கும் முதல் நாள் நாள் நிகழ்வில் திருபுகழ் எனும் தலைப்பில் சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவாற்றுகிறார், அதனைத் தொடர்ந்து ஆர். காஷ்யாப் குழுவினரின் பக்திபாடல் கச்சேரியும், திருப்பதி தேவஸ்தான இசைக்கல்லூரி ஆசிரியர் காளகஸ்தி முனிக்குமார் நாதஸ்வரம், விராலிமலை ஆர்எம்ஜெ. கார்த்திக் சிறப்புதவுல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    2-ஆம் நாள் மாலை 7 மணிக்கு விராலிமலை வேந்தன் என்றத் தலைப்பில் மனம் சேர சந்திரகாசனின் சமய சொற்பொழிவும், எம். ஜெயகுமாரின் சாக்ஸ போன் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

    3-ஆம நாள், மங்கள இசையுடன் தொடங்கும் விழாவில் கந்தன் கருணை எனும் தலைப்பில் ம. எழிலரசியின் ஆன்மீகச் சொற்பொழிவும், கோவிந்தராஜன் குழுவினரின் லயநாத இன்ப இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    4-ஆம் நாள், விடையாத்தியுடன் விழா நிறைவடைகிறது.3 நாள்களும் விழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிவரை நடைபெறும். விழா நாள்களில் மலை மீது உள்ள முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் மலைக்கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி(கூடுவிட்டுகூடுபாயும் வித்தை) தந்தருளிய சிறப்பு பெற்றத்தலமாகும், அதோடு இங்கோயிலில் நாரத மாமுனிக்கு சாபவிமோச்சனம் தந்தருளியதாகவும் கூறப்படும் இத்தலம் 207 படிகள் கொண்டதாகும் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி,தெய்வானை சமேதகராக மலைமீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

  • திருப்பதியில் அபூர்வ நிகழ்வு..

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இம்மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற அக்டோபர் மாதம் 3–ந் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி 11–ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் 5–வது நாளில் ஏழுமலையான் கருடவாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரள்வார்கள்.

    வருகிற 7–ந் தேதி கருடபஞ்சமி விழா நடக்கிறது. அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை தங்க கருடவாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வருகிற 18–ந் தேதி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி விழா நடக்கிறது. அன்றைய தினமும் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    எனவே இந்த மாதத்தில் ஏழுமலையான் கோவிலில் 2 கருடசேவை நிகழ்ச்சிகள் நடப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

  • இது சிவ அவதாரம்..

     

    விஷ்ணுவின் தசாவதாரம் நாம் அறிவோம். அது என்ன சிவ அவதாரம்? …

     

    சிவனின் ஒரே அவதாரம் சரபா அவதாரம். சிவனின் திருவிளையாடல் 64 என்பதை நன்கு அறிவோம். அழிக்கும் கடவுளான சிவன், காக்கும் கடவுளான விஷ்ணுவை காத்த நிகழ்வே
    சரபா அவதாரம் ஆகும்.
     
    மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களில் மிக உக்ரமான‌ அவதாரம் நரசிம்மாவதாரம். ஏனெனில் இந்த அவதாரம் தான் திடீரென‌ எடுக்கப்பட்ட அவதாரம். ஒரு பக்தனின், பக்தியின் வலிமையை பற்றி உலகறிய செய்த அவதாரம். நரசிம்மரின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன். புருவங்களில் லக்ஷ்மி இருப்பதாக ஐதீகம். 
     
    விஷ்ணுவின் நரசிம்மவாதர‌த்தின்போது, இரண்யகசிபுவை வதைத்த பிறகும் பகவான் மிகவும் மூர்கமாகவே இருந்தார். அதற்கு காரணம் இரண்யகசிபுவின் இரத்தம் மகாவிஷ்ணுவின் உடம்பில் இருந்ததேயாகும். நரசிம்மவாதாரத்தின் ஆவேசத்தை கண்ட மூவுலகமே பயத்தில் நடுங்கின. இந்த நிலையில்தான் மகாவிஷ்ணு தனது ஆத்மாவை விடுவிக்க சிவனிடம் உதவி கோரினார். 
     
    அப்போது சிவன் 4 கைகள், 8 கால்கள், 2 முகமும்  இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக தோன்றினார். அந்த அவதாரமே சரபா அவதாரம். நரசிம்மருடன் பெரும் யுத்தம் நடந்தது. நரசிம்மரின் உடலில் கலந்து இருந்த‌ இரண்ய கசிபுவின் அசுத்த ரத்தத்தை பிரித்து  மகாவிஷ்னுவை சாந்தப்படுத்தினார் சரபா அவதாரத்தில் இருந்த சிவன். இந்த அவதாரத்தில் சக்தியின் பெயர் அரிப்ரணாசினி.
     
    – ரம்யா சுரேஷ்

    ரம்யா சுரேஷ் – சிங்கப்பூர் வாழ் பட்டிமன்ற பேச்சாளர், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர். சிறுவர் நூலாசிரியர் மற்றும் பகுதி நேர ஆசிரியர். (கலாச்சாரம்). இவரைத் தொடர்பு கொள்ள – sangemahathi@gmail.com 

  • திருப்பதியில் அபூர்வ நிகழ்வு…..

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இம்மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற அக்டோபர் மாதம் 3–ந் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி 11–ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் 5–வது நாளில் ஏழுமலையான் கருடவாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரள்வார்கள்.

    வருகிற 7–ந் தேதி கருடபஞ்சமி விழா நடக்கிறது. அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை தங்க கருடவாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வருகிற 18–ந் தேதி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி விழா நடக்கிறது. அன்றைய தினமும் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    எனவே இந்த மாதத்தில் ஏழுமலையான் கோவிலில் 2 கருடசேவை நிகழ்ச்சிகள் நடப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

  • மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்…

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
    இரவு 11.30 மணிக்கு பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவ அங்காளம்மன் மேளதாளம் முழங்க பலத்த கரகோஷத்துக்கு இடையே ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    பின்னர், கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனுக்கு தாலாட்டு பாடல்களை பாடினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் தங்களது கைகளில் எலுமிச்சை மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

  • திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.24 கோடி வசூல்…

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதத்தின் முதல் நாளிலேயே 4 கோடியே 24 லட்ச ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.

    திருப்பதியில் கோயில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு மனை, நிலப்பத்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக உண்டியல் மூலம் மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.1,300 கோடியும், ஒரு டன் தங்கமும், 1,500 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து வருகிறது.

    நடப்பாண்டு கடந்த ஜூலை 18-ம் தேதி ரூ.4.69 கோடி உண்டியல் மூலம் ஒரே நாளில் அதிகபட்ச வருவாய் கிடைத்தது. இதேபோன்று ஜூன் 27-ம் தேதி ரூ.4.22 கோடியும், ஜூலை 28-ம் தேதி ரூ.4.03 கோடியும் வருவாயாக கிடைத்தது.

    இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளிலேயே உண்டியல் காணிக்கை ரூ.4.24 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 முதல் 3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.