Who is Guruswami? How to perform Kanni Puja?

குருசுவாமியின் தகுதி

சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து சென்று வந்தவர்களே குருசுவாமி என அழைக்கப்படுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றால் குருசுவாமி ஆக முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை அல்லது மகர விளக்குக் காலத்தில் இருமுடி கட்டி, 41 முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சபரிமலைக்கு ஏறியவர்களே இந்த உயர்ந்த பதவியைப் பெறுவர்.

குருசுவாமிகள், பிற பக்தர்களுக்கு மாலை அணிவிக்கவும், வழிகாட்டவும் தகுதியுடையவர்கள். மேலும், சபரிமலை சீசன் அல்லாத நாட்களிலும், அவர்கள் ஐயப்பனுக்கு நித்யபூஜை செய்து வருவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

 

கன்னி பூஜை

சபரிமலைக்கு முதல் முறையாக செல்பவர்கள் நடத்தும் முக்கியமான சடங்குதான் கன்னி பூஜை. இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழி பூஜை என்றும் அழைக்கின்றனர்.கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி மாதம் வரை, வீட்டில் ஒரு சிறப்பு நாளைத் தேர்ந்தெடுத்து இந்த பூஜை நடைபெறும். இதற்காக பந்தல் அமைத்து, அதன் நடுவில் மண்டபம் அமைத்து, அதில் ஐயப்பன் படத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

அவரைச் சுற்றிலும்

  • கணபதி

  • மாளிகைப்புறத்தம்மன்

  • கருப்பசுவாமி

  • கடுத்தசுவாமி

  • ஆழி

ஆகிய தெய்வங்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட்டு விளக்கேற்ற வேண்டும்.

எல்லா தெய்வங்களுக்கும் வல், பொரி, பாக்கு, சித்ரான்னம் போன்ற நைவேத்யங்கள் படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

இந்நாளில் அன்னதானம் செய்வதும் மிக முக்கியமானது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *