From Hariharaputra to Sabarimala: History and Worship

ஹரிஹர புத்திரன்

ஹரியான மகாவிஷ்ணுவும், ஹரனான சிவபெருமானும் இணைந்து அருளிய தெய்வக் குழந்தையாக ஹரிஹர புத்திரன் அவதரித்தார். மனித அவதாரத்தில் பந்தள மன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டன் என்ற பெயரில் வளர்ந்தார்.

புலிப்பாலை எடுத்து வருவதற்காகக் காட்டுக்குச் சென்ற மணிகண்டன், அங்கு மஹிஷியை வதம் செய்து தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றினார். பின்னர் சபரிமலையில் தங்கியிருந்து பக்தர்களுக்காக கோயில் அமைந்தது. இது ஐயப்பன் பற்றிய பரிச்சயமான வரலாறு.

ஆனால் பூதநாதோபாக்கியானம் என்னும் நூலில் இந்த வரலாறு சற்று மாறுபட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஐயப்பன் பாண்டிய மன்னரின் சேவகனாக இருந்தார் என்றும், மன்னரின் ஆணைப்படி புலிப்பாலை கொண்டு வரக் காட்டுக்கு சென்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பக்தர்கள் கவனிக்க…

மாலையணிந்த பின் கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிய வேண்டும்.

செருப்பு அணியக் கூடாது.

கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்தக் கூடாது.

மது, மாமிசம், தாம்பத்யம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பொய் உரைக்கக் கூடாது.

உறவினரின் வீட்டில் மரணம் ஏற்பட்டால் அங்கு செல்வதும் கூடாது. இதை மீறினால் மாலையை அகற்றி மலைப் பயணத்தையும் நிறுத்த வேண்டும்.

சவ ஊர்வலத்தைப் பார்த்தால், வீட்டில் கோமியம் தெளித்து நீராட்டு எடுத்த பின் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *