Kuzhandai varam kidaikka

ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. மாட மாளிகையில் வசித்தாலும் அந்த வீட்டில் மழலை குரல் கேட்பதே பெரிய செல்வமாக இருக்கும். ஆனால் அந்த குழந்தைச் செல்வம் கிட்டாமல் வேதனைப்படுபவர்கள் எத்தனை ஆயிரம் பேர்.

திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்துக் கனவு காண்பது இயற்கையே! அந்தக் கனவு நனவாகி பிள்ளைக் கனியமுது பிறக்கும்போது தாய், தந்தையர் அடையும் மகிழ்ச்சி இமயத்தின் உச்சியை அடைந்ததற்கு சமம் போல் தோன்றும்.

வேத சாஸ்திரங்களும்,  புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன. மனிதன் தன்னுடைய கர்மவினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர ஒரு பிள்ளை வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். சாஸ்திரங்களில், ‘பும் நாம நரகாது த்ராயதே இதி புத்ர:’ தன் தகப்பனின் ஆத்மாவை புத் என்ற நரகத்தில் இருந்து காப்பாற்றுகிறான் என்பதால், புத்திரன் என்று கூறுகிறார்கள். 

ஜாதகத்தில் புத்திரபாவம் என்பது புத்திரன் – ஆண்பிள்ளை என்று குறிப்பிட்டாலும், பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களில் ஆண், பெண் இரண்டும் வேண்டும் என்கிறது. ஒரு ஜாதகத்தில் 5-ம் பாவமானது பூர்வ புண்ணியம் மற்றும் பிள்ளைச் செல்வம் போன்றவற்றைக் காட்டும் பாவமாகிறது. பூர்வ புண்ணியத்தையும் புத்திரபாக்கியத்தையும் ஒரே இடத்தில் வைத்த மகரிஷிகளின் மகிமை உயர்ந்தது. இத்தகைய சிறப்பு மிகுந்த மழலைச்செல்வம் இல்லாமல் வேதனையடைபவர்கள் குறைகள் முழுமையாக தீர்க்க சித்தர்கள் அருளாசியை பெற்று பலவித யாகங்கள் செய்துள்ளவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா.

இதில் மிக முக்கியமானது சந்தான கோபால ஹோமம். அதாவது கிருஷ்ண பகவானின் குழந்தை வடிவமான சந்தான கோபாலனை திருப்திபடுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த ஹோமமானது குழந்தை செல்வத்தை வழங்கி உங்களை ஆசீர்வதிப்பதற்கும், எதிர்பாராத கருச்சிதைவுகளுக்கு ஆளாகதவாறு தாய்மார்களைப் பாதுகாப்பதற்கும், குழந்தையைப் பாதுகாப்பான முறையில் பெற்றெடுப்பதற்கும் நன்மை அளிக்கும் மாபெரும் ஹோமம் ஆகும்.

இந்த ஹோமத்தை  கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் பிரமாண்டமாக நடத்தி குழந்தையின்மையால் வேதனைப்பட்டு வந்தவர்களின் குறைகள் தீர்க்க உதவியுள்ளார். இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். இதனை பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்காக இந்த யாகம் நடத்தப்படுகிறது.

அதேபோல் தன்னலம் கருதாது பலரது பசியை போக்கும் வகையில் தினமும் இங்கு அன்னதானம் நடக்கிறது. கோடி புண்ணியம் செய்த பலன் அன்னதானத்திற்கு உண்டு என்பதால் அதை தினமும் செய்து வருகிறார் வாசியோகி பரமானந்த பாபா. திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது.

யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. அனைத்து செல்வங்களும் கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம். மேலும் அன்னதானத்திற்கு உதவ நினைப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *