bakthargalai-kaakum-thirisulam

சிவபெருமானும் பார்வதி தேவியும் திரிசூலம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதம் இவர்களது எல்லையற்ற பேராற்றலைக் காட்டுகிறது. இது பக்தர்களைக் காப்பாற்றும் வகையில் செயல்படும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை உணர்த்தும் புற அடையாளமாக திரிசூலம் விளங்குகிறது. திரிசூலத்தின் ஒரு முனை ஆசைகளைத் தூண்டுவதாகவும் மறுமுனை அதை செயல்படுத்துவதாகவும், இன்னொரு முனை இந்தச் செயலைச் செய்யலாமா என்ற ஞானத்தைத் தருவதாகவும் அமைந்துள்ளது.

பார்வதிதேவி கையில் ஆயுதம் வைத்திருந்தாலும், அவளது மீனாட்சி போன்ற சில அவதாரங்களின் கையில் ஆயுதம் இல்லை. இவை அனுக்கிரக சக்தியைக் குறிக்கும். நமக்குப் பயம் ஏற்பட்டால் ஆயுதமேந்திய தெய்வங்களையும், பிற கோரிக்கைகளுக்காக அனுக்கிரஹ தெய்வங்களையும் வணங்கலாம் என்பது ஐதீகம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *