2018-04-13-05-58-27

தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது, ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும், 1005 ஆண்டுகளை கடந்தும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இவ்விழா துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
முன்னதாக அதிகாலை பெரியகோவிலில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்று பின்னர் நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டது.
18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26ந்தேதி நடைபெற உள்ள, இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *