2018-03-26-05-15-36

திருத்தணி பாதயாத்திரைக் குழுவின் சார்பில், ஆண்டுதோறும், சென்னையில் இருந்து, காவடிகளுடன் புறப்பட்டு, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்து உற்சவருக்கு பால் அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவர்.அந்த வகையில், நடப்பாண்டில், சென்னை, பவளக்காரத் தெருவில் உள்ள பழைய தண்டாயுதபாணி கோவிலில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் காலையில் புறப்பட்டு, மதியம் அம்பத்துார் வந்தடைகின்றனர். தொடர்ந்து மாலையில் அம்பத்துாரில் இருந்து புறப்பட்டு, ஆவடி பாபு திருமண மண்டபத்தில் தங்கியிருந்து ஓய்வு எடுக்கின்றனர்.பின், 27ம் தேதி, ஆவடியில் இருந்து புறப்பட்டு, வேப்பம்பட்டு வழியாக திருவள்ளூர் வந்தடைகின்றனர். தொடர்ந்து, 28ம் தேதி, திருவாலங்காட்டிலும், 29ம் தேதி, திருத்தணி அருகே சரஸ்வதி நகர் தங்கியிருந்து, 30ம் தேதி, காலை, 9:00 மணிக்கு காவடிகள் மற்றும் பால்குடங்களுடன் பக்தர்கள், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சென்றடைகின்றனர்.பின், காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால் அபிஷேகம் நடத்தியும், இரவு தங்க ரதத்தில் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதியில் வீதியுலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *