குருபெயர்ச்சியை முன்னிட்டு, 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா, விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் மகாபுஷ்கர விழா நடக்கிறது. இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் முக்கிய பிரமுகர்கள் புனித நீராடுகிறார்கள். மேலும், துறவியர்கள் மாநாடு, ஊர்வலம், சதுர்வேத பாராயணம், திருவாசகம் முற்றோதுதல், சைவ மாநாடு, நாலாயிர திவ்ய பிரபந்த பாராயண வைணவ மாநாடு, லலிதா சகஸ்ரம பாராயணம், விஷ்ணு சகஸ்ரம பாராயணம் நடக்கிறது. 12 நாட்களும் ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் மகா ஆர்த்தி நடைபெறுகிறது.
Leave a Reply