2018-02-05-12-40-43

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது அண்ணாமலையார். பஞ்சபூதங்களில் நெருப்பினை இத்தலம் குறிக்கிறது. அக்னித்தலமான இங்கு இறைவன் தேயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் இறைவன் ஜோதி ரூபமாக அடிமுடி தேடிச் சென்ற திருமால், பிரம்மா மற்றும் உலகத்தினருக்கு காட்சியளித்தார். இங்கு காணப்படும் மலையே இறைவனாகக் கருதப்படுகிறார். திருவண்ணாமலையில் காணப்படும் மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி தினங்களில் இத்தலத்தில் கிரிவலம் வருவது சிறப்பாகும். இத்தலத்தில் உள்ள சிவபெருமானை சைவ சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் முருகனின் மீது இத்தலத்தில் பாடல்கள் பாடியுள்ளார். நினைத்தாலே முக்தி தரும் தலம் இது என்பது இதன் சிறப்பாகும். இங்கு நடைபெறும் கார்த்திகை தீபம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இறைவன் அருணாச்சலேஸ்வரர், அண்ணாமலையார் என்ற பெயரிலும், அம்மை உண்ணாமலை என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *