2017-12-23-14-48-49

எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது வடக்கும்நாதர் சிவன் கோவில். இந்த ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்துவர, அந்த நெய்யே உறைந்து, சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். இந்த நெய் லிங்கத்தைச் சுற்றி எத்தனையோ விளக்குகள் ஏற்றிவைத்த சூட்டிலும், வெயில் காலத்தில் உண்டாகும் வெப்பத்திலும் கூட நெய் உருகுவதில்லை. உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கிறது. உறைந்த நெய்யின் சிறு துளியை பிரசாதமாக வாங்கி உண்டால், எந்த வித நோயும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *