2017-10-28-15-52-40

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிராமத்தில் நிறம் மாறும் அதிசய விநாயகர் சிலை ஒன்று உள்ளது. தக்கலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேரளபுரம் கிராமம். இங்கு 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி பல்வேறு பதிவார தெய்வங்கள் உள்ளன. அவ்வாறு பதிவார தெய்வமாக விளங்கும் இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை, அதிசய விநாயகராக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மகாதேவர் ஆலயத்தில் உள்ள இந்த விநாயகருக்கு விமான மண்டபம் இல்லை. வெயில், மழை இரண்டுமே விநாயகர் சிலை மீது விழும். விநாயகர் நிறம் மாறும் காலகட்டத்தில், அங்குள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சிலை சந்திர காந்தக் கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் கறுப்பாகவும், ஆறு மாதங்கள் வெள்ளையாகவும் விநாயகர் காட்சியளிக்கிறார். விநாயகர் கறுப்பாக இருக்கும் போது, தண்ணீர் கலங்கலாக சுவை இழந்தும், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது, கிணற்றின் தரை பகுதி வரை தெரிவதுடன் தண்ணீரும் சுவையாக இருக்கும் என கூறுகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *