2017-10-28-11-48-38

தேரழந்தூர் ஸ்ரீஆமருவி பெருமாள் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட ரத வெள்ளோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கிராமத்தில், 108 வைணவ திருத் தலங்களில் 10-ஆவது தலமும், பஞ்ச கிருஷ்ணாரன்ய சேத்திரத்தில் முதன்மையானதுமான ஸ்ரீஆமருவி பெருமாள் கோயில் உள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த கோயிலில் புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட ரதத்தின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலின் திருமங்கை மன்னன் மண்டபத்தில் சிறப்பு ஹோமங்கள், பூர்ணாஹுதி, பிரதிஷ்டை, கும்ப புரோக்ஷனம் ஆகியவை செய்யப்பட்டு, ரதம் வெள்ளோட்டம் கோயிலின் உள்பிரகாரத்தில் நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *