2017-09-12-05-11-37

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் திருபவித்ரோத்ஸவம் நிறைவு விழாவும், 1,008 தாமரை பூ ஸகஸ்ரநாம அர்ச்சனையும் விமர்சையாக நடைபெற்றன. பண்ருட்டியில் பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், மூன்று நாள்கள் திருபவித்ரோத்ஸவம் விழா சிறப்பாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் உற்சவர் உள்புறப்பாடு நடைபெற்றது. 6 மணி அளவில் 1,008 தாமரை மலர்கள் ஸஹஸ்ரநாம் அர்ச்சனை நடைபெற்றது. திருக்கோயில் பட்டாச்சாரியார் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் பட்டாச்சாரியார்கள் பூஜைகளைச் சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *