thiruvarur-thiyagarajar-temple

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய திருவாரூர் தியாகராஜர் கோயில்

கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.

திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

*இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்*

*தியாகராஜர்* என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள்.

*தியாகராஜர்* கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

*9 ராஜ கோபுரங்கள்*

*80 விமானங்கள்*

*12 பெரிய மதில்கள்*

*13 மிகப்பெரிய மண்டபங்கள்*

*15 தீர்த்தக்கிணறுகள்*

*3 நந்தவனங்கள்*

*3 பெரிய பிரகாரங்கள்*

*365 லிங்கங்கள்* 
(இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),

*100க்கும் மேற்பட்ட சன்னதிகள்*

*86 விநாயகர் சிலைகள்*

*24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள்* என பிரமாண்டமாக விளங்குகிறது.

இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர்.

*திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள்*

*3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.*

கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், 
முன்காலத்தில்,

திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

*தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.*

*இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு*
*(வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.*

*அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த “லிங்கம்” வைக்கப்படும்*.

*அதன் மேல் வெள்ளி குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்*.

*மற்ற நேரங்களில்*, 
*பூட்டிய இந்த பெட்டி *தியாகராஜரின்* *வலதுபுறத்தில் இருக்கும்.*

*திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *