2017-05-14-16-03-35

விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அங்குள்ள வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அறைகளில் தங்கி நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
தற்போது கோடைவிடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஏழுமலையான் கோயிலில் 96 ஆயிரத்து 27 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் இலவச தரிசனத்திற்கான வைகுண்டத்தில் உள்ள 39 அறைகளும் நிரம்பி பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். மலைப்பாதை வழியாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 16 அறைகளில் நிரம்பி சுமார் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *