2017-05-03-15-10-00

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மே மாதம் 4 ஆம் தேதி முதல் வருகிற 28-ந் தேதி வரை சுவாமிக்கு தாராபிஷேகம் நடக்கிறது. அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் மே மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. கத்திரி வெயிலின்போது வெயில் அளவு 110 டிகிரியை கூட தாண்டலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். கோடை மழை பெய்து பூமியின் வெப்பத்தை தணிக்க வேண்டும் என பொதுமக்கள் இறைவனை வேண்டி வருகிறார்கள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடக்கம் முதல் முடிவு வரை ஆண்டுதோறும் சுவாமிக்கு தாராபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான தாராபிஷேகம் மே 4 ஆம் தேதி முதல் முதல் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *