2017-04-17-14-19-47

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆண்டு தோறும் ரஜப்பிறை மாதத்தில் சந்தனக்கூடு விழா நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி சுமார் 25 அடி உயரத்தில் மின் விளக்குகளால் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டது. அதில் சந்தனம் நிரப்பப்பட்ட செம்புடன் நகரின் முக்கிய வீதிகளில் சந்தனக்கூடு சுற்றி வந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் மலைமீதுள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தப்பட்டு, சந்தனம் பூசிக்கொள்ளப்பட்டது. இவ்விழாவில் கோவை, திருச்சி, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *