2017-04-07-13-38-40

திருப்பதி கோதண்டராமர் கோயிலில் சீதா திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீராமநவமியை ஒட்டி வியாழக்கிழமை மாலை ராமருக்கும், சீதைக்கும் திருமலை ஜீயர்கள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
சீதா திருக்கல்யாணத்தின் போது அரிசிக்கு பதிலாக முத்துகளால் ஆன சேஷம் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இதற்காக தேவஸ்தான அலுவலகத்திலிருந்து வெண்மையான முத்துகளை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், தன் தலையில் சுமந்தபடி கொண்டு வந்து, அர்ச்சகரிடம் அளித்தார். அந்த முத்துகளை யானை மேல் வைத்து கோதண்டராமர் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அப்போது, வழிநெடுகளிலும் பக்தர்கள் அதற்கு கற்பூர ஆரத்தி காண்பித்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *