2017-03-31-16-10-48

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்வட்டம், அருள்மிகு பிரம்மசம்பத்கெளரி உடனாய பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்டகொடியேற்றம் ஏப்ரல் 31 ஆம் தேதி நடைபெற்றது.
சோழவளநாட்டின் பொன்னி நதி எனும்காவேரியின் வடகரையில்திருச்சிராப்பள்ளி்ககு 25 கிமீ தொலைவில்சேக்கிழாரின் பெரியபுராணம், சுந்தரரின்ஷேத்திரக்கோவையிலும் வைப்பு தலமாக பாடல் பெற்று விளங்கக்கூடியதும்,திருப்பிடவூர் எனும் திருப்பட்டூர் சித்தர்களின்சுவாச புண்ணிய பூமியிலே பிரம்மனுக்கு அருள்புரிந்தவரும், திருமால், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சூரியபகவான் ஆகியோரால்வழிபடபட்டவராகிய பேரருளாளன், பிரவூரன்பிரம்மபுரீஸ்வரருக்கு ஏப்ரல் 8-ம் தேதி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. இக்கோயிலின் முதல்நாளான இன்று 31 -ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.42 மணிக்குள்கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் கோயில் செயல் அலுவலர் ச.முத்துராமன் மற்றும் கோயில்பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்குகேடயத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும்நடைபெறுகிறது தொடர்ந்து 31-ம் தேதி முதல் 7- ம் தேதி தினசரி காலை 10 மணிக்கு பல்லாக்கும்தினசரி இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில்புறப்பாடும் வாகனங்களில் புறப்பாடும்நடைபெறுகிறது.
ஏப்ரல் 8-ம் தேதி காலை 7. 35 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத் தேரோட்டம் வடம்பிடித்தல்நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *