2017-03-06-14-59-51

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசிமாத தெப்ப திருவிழா 6ம் நாளில் யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி மாத தெப்ப திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. இதையொட்டி விழாவின் 6ம் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் காலை 6.30 மணிக்கு உள்திருவீதிகள் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி வாணிய மண்டபத்துக்கு காலை 9.30 மணிக்கு சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு வாகன மண்டபத்துக்கு பல்லக்கில் வந்தார். இதைதொடர்ந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *