2017-03-06-14-26-45

கிருத்திகை விழா, திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாசி கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர்.
முருகப் பெருமான் விண்ணில் நின்று போர் புரிந்த நிகழ்வுகளைக் கூறும் தலமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், மாசி கிருத்திகை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், பல்வேறு காவடிகளை எடுத்து வந்தும் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து இரவு, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *