2017-03-03-05-49-11

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேவர்களைக் காக்கும் வகையில் முருகப் பெருமான் விண்ணில் நின்று தாரகாசுரனிடம் போர் புரிந்த இடம் என சிறப்பு பெற்றதும், கந்தசாமி பனை மரத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சிறப்பு பெற்றதுமான இந்தக் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, மார்ச் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 8-ம் தேதி தேர் உற்சவமும், 11-ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெறுகின்றன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *