2016-11-28-13-53-09

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கார்த்திகை திருவிழா தொடக்கமாக டிசம்பர் 3 ஆம் தேதி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து நான்காம் தேதி காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கொடிக்கம்பம் முன் எழுந்தருள்வார். பூஜைகள் முடிந்து காலை 11:30 மணிக்கு கார்த்திகை திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், 11 ஆம் தேதியும், 12 ஆம் தேதி காலையில் சிறிய வைரத் தேரோட்டம், மாலையில், மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.தொடர்ந்து 16கால் மண்டபம் முன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. டிச. 12ல் சரவணப் பொய்கையில் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *