2016-11-18-10-04-29

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் 77 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்கின்றனர். இவ்வாறு செலுத்துவது மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.
அதன்படி உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டதில், 77 லட்சத்து 33 ஆயிரத்து 940 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். இவற்றுடன், 125 கிராம் தங்கமும், 444 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *