2016-11-05-14-55-18

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் வெற்றி வேல் வீரவேல் முழக்கமிட சூரசம்ஹாரம் விமர்சையாக நடந்தது. அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
கந்த சஷ்டியை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
அப்போது பக்தர்கள் வெற்றி வேல் வீரவேல் என்று முழக்கமிட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *