2016-10-28-16-21-09

வாழும் கலையின் தோற்றுனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்ட பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன் , நார்வே போன்ற நாடுகளுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது அவர் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் பாராளுமன்றங்கள் போன்றவற்றில் பல்வேறு துறைகளை சார்ந்த ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்களை சந்தித்து தனது அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான செய்தியை அளித்தார்.
பின்னர் நார்வே பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர் அந்நாட்டின் பாராளுமன்றத் தலைவரான ஒலிமிக் தொம்மெஸ்ஸெனை சந்தித்தார்.
முன்னதாக திங்கள் கிழமையன்று மாலை குருதேவர் சமுதாய மக்களை சந்தித்து உரை நிகழ்த்தினார். மேலும் வாழும் கலை அமைப்பும், நார்வே ஒலிம்பிக் விளையாட்டு குழுவும் ஒன்றிணைந்து விளையாட்டு வீரர்களுக்கு மேலும் பல நம்பிக்கை அளிக்கும் திட்டங்களை நிகழ்த்துவதென்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தீர்மானித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *